என் மலர்tooltip icon

    வியட்நாம்

    • புயலால் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர்.
    • பாலம் இடிந்து விழுவதை பார்த்து சுதாரித்துக்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி புயல் கடந்த சனிக்கிழமை அன்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங்க் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கிமீ வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    கடந்த 30 ஆண்டுகளில் வியட்நாமை தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல் இதுவாகும். இந்த புயலால் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று இடிந்து விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    19 வினாடிகள் ஓடும் வீடியோவில், பாலத்தில் லாரி ஒன்று மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    மேலும், லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், பாலம் இடிந்து விழுவதை பார்த்து சுதாரித்துக்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • பயணிகள் பஸ் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது.
    • புதோ மாகாணத்தில் ஆற்றின் மீது இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது.

    ஹனோய்:

    வியட்நாமில் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை காரணமாக இன்று ஒரு பாலம் இடிந்து விழுந்தது. ஒரு பஸ்சும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வியட்நாமை சனிக்கிழமை தாக்கிய யாகி என்ற சூறாவளி புயல் பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின்போது 50 பேர் இறந்தனர்.

    இந்தநிலையில் காவ் பாங் மாகாணத்தில் 20 பேருடன் சென்ற பயணிகள் பஸ் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்புப் படையினர் குவிக்கப்பட்டனர், ஆனால் நிலச்சரிவுகள் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    அதுபோல புதோ மாகாணத்தில் ஆற்றின் மீது இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 மோட்டார் சைக்கிள்கள், 10 கார்கள் மற்றும் டிரக்குகள் ஆற்றில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பேர் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 13 பேர் காணவில்லை. வியட்நாமைத் தாக்கும்முன், யாகி புயல் கடந்த வாரம் பிலிப்பைன்சில் 20 உயிர் இழப்புகளையும், தெற்கு சீனாவில் நான்கு பேரையும் பலிவாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • யாகி புயலால் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    • பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

    ஹனோய்:

    வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் நேற்று வியட்நாமை தாக்கியது.

    வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டியது.

    புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் சுமார் 30 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    புயல் காரணமாக 4 விமான நிலையங்கள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்நிலையில், யாகி புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 176 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    வேருடன் சாய்ந்த மரங்கள், இடிந்து விழுந்த மின்கம்பங்கள் மற்றும் வீடுகளின் கூரைகளை அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. மீட்புப் பணிகளில் ராணுவம், போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • பொதுச் செயலாளராக இருந்த டூ லாம் கடந்த மாதம் காலமானார்.
    • பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் டூ லாம் 40 வருடத்திற்கு மேலாக பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்தவர்.

    வியட்நாம் நாட்டின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாட்டின் சக்கி வாய்ந்த அரசியல் தலைவருமான நுயென் ஃபூ ட்ரோங் தனது 80 வயதில் கடந்த மாதம் 19-ந்தேதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் காலமானார். 2011-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2021-ம் 3-வது முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் வியட்நாம் அதிபராக இருக்கும் டூ லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக பொறுப்பு ஏற்க இருப்பதை உறுதிப்படுத்தியள்ளார். இந்த பதவி அந்நாட்டின் மிகவும் அதிகாரமிக்கதாக பார்க்கப்படுகிறது.

    கட்சியின் தலைமையை உறுதி செய்ய வேண்டிய அவசரத் தேவை காரணமாக தான் அந்த பதவியை ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதிபர் பதவியில் நீடிப்பாரா? என்பது குறித்து தெளிவுப்படுத்தவில்லை.

    டூ லாம் 40 வருடத்திற்கு மேலாக பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் 2016-ல் மந்திரியாக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் உயர் அதிகாரிகள் மே மாதம் வரை ஊழல் எதிர்ப்பு பிரசாரம் மேற்கொண்டனர்.

    வியட்நாம் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, லாம் அதிபர் ஆனார். அதனைத் தொடர்ந்து ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தில் இருந்து விலகினார்.

    • 2011-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • அதில் இருந்து வியட்நாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

    வியட்நாம் நாட்டின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரும், நாட்டின் சக்கி வாய்ந்த அரசியல் தலைவருமான நுயென் ஃபூ ட்ரோங் தனது 80 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

    இன்று மதியம் 1.38 மணிக்கு வயது மூப்பு மற்றும் மோசமான உடல்நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2011-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இருந்து வியட்நாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.

    அவரது பதவிக்காலத்தில் வியட்நாமின் ஒற்றைக் கட்சி அரசியல் அமைப்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்த அவர் பணியாற்றினார்.

    • வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் இன்று (மே 22) பதவியேற்றுக்கொண்டார்.
    • முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் வியட்நாம் அரசியலில் பூதாகரமாக வெடித்தது.

    வியட்நாமின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் இன்று (மே 22) பதவியேற்றுக்கொண்டார். முந்தைய ஜனாதிபதி வோ வான் துவோங் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி விலகினார்.

    முக்கிய அரசாங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்த நிலையில் இந்த ஊழல் விவகாரம் வியட்நாம் அரசியலில் பூதாகரமாக வெடித்தது.

    ஊழல் தடுப்பு குழுவின் துணைத் தலைவராக தற்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள டோ லாம் இருந்த நிலையில் தனது அரசியல் போட்டியாளர்களை வீழ்த்துவதற்காக இந்த ஊழல் விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.

     

    இன்று தனது பதவியேற்பின்போது உரையாற்றிய டோ லாம் கூறுகையில் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்குத் தான் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 66 வயதான டோ லாம், 2016 ஆம் ஆண்டு முதல் பொது பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார், மேலும் வியட்நாம் மனித உரிமை இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார்.

    கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில், வியட்நாம் நான்கு நபர்களைக் கொண்ட தலைமைக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது, அதில் அதிபர், பிரதம மந்திரி மற்றும் தேசிய சட்டமன்றத்தின் தலைவர் ஆகியோர் அடங்குவர். அதிபரை அரசுப் பிரதிநிதிகளின் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுகின்றனர்.

    முன்னதாக முந்தைய அதிபர் வோ வான் துவோங் அதிபராகி ஒரு வருடமே பதவியிலிருந்த நிலையில் ஊழலுக்காகத் தனது அதிகாரங்களை துஷ்ப்ரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் வலுவாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் ராஜினாமா செய்தார். அவரைத்தொடர்ந்து தேசிய சட்டமன்றத் தலைவரும் கடந்த மாதம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • வூங் டின் ஹியூ மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
    • உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    ஹனோய்:

    அண்டை நாடான வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகராக வூங் டின் ஹியூ (வயது 67) இருந்து வருகிறார்.

    இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அங்குள்ள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 12.5 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்
    • 12.5 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ஆகும்

    வியட்நாம் நாட்டில் 12.5 பில்லியன் டாலர் நிதி மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    12.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி) என்பது வியட்நாம் நாட்டின் 2022 ஜிடிபியில் கிட்டத்தட்ட 3% ஆகும்.

    2012 முதல் 2022 வரை சைகோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியை அவர் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, ஆயிரக்கணக்கான போலியான நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமாகவும் இந்த நிதி மோசடியை அவர் செய்துள்ளார் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது

    இந்த வழக்கை தெற்கு வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வியட்நாமில் நடைபெற்று வரும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீவிரமடைந்த நிலையில் தான் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இவரின் கைதை அடுத்து அப்போது ஜனாதிபதி பதவியில் இருந்த வோ வான் துவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஊழல்களால் வியட்நாமில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,300 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அந்நாட்டின் சந்தையில் இருந்து விலகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    • டென்சன் நியூமோசெஃபாலஸ் எனும் அரிய வகை மூளை நோய் கண்டுபிடிக்கப்பட்டது
    • மது அருந்த சென்ற இடத்தில் ஒரு கைகலப்பில் முகத்தில் தாக்கப்பட்டார்

    வியட்நாம் நாட்டை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. அத்துடன் அவருக்கு நாசியிலிருந்து நீர் வடிதல் பிரச்சனையும் இருந்து வந்தது.

    இதையடுத்து, அந்நாட்டின் வடமத்திய கடற்கரை பகுதியின் டாங் ஹாய் (Dong Hoi) நகரில் உள்ள கியூபா ஃப்ரெண்ட்ஷிப் மருத்துவமனையில் (Cuba Friendship Hospital) சிகிச்சைக்காக சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த நரம்பியல் துறை தலைமை மருத்துவர், டாக்டர். குயன் வேன் மேன் (Dr. Nguyen Van Man) சிடி ஸ்கேன் பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். பரிசோதனையின் முடிவில் அந்த நோயாளியின் மூளையில் டென்சன் ந்யூமோசெஃபாலஸ் (tension pneumocephalus) எனும் அரிய நிலை இருப்பது தெரிய வந்தது. இது மூளையில் உள்ள அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு அபாய நிலை.

    இதற்கான காரணம் என்னவென்று மேலும் பரிசோதித்த போது மருத்துவர்களே வியக்கும் வண்ணம், அந்த நோயாளியின் நாசி வழியாக சென்று மூளைக்குள் இரண்டு சாப்ஸ்டிக்ஸ் குச்சிகள் பதிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

    சீனா, கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உணவை எடுத்து உண்ண பயன்படுத்தும் குச்சிகள் எவ்வாறு நாசிக்குள் ஏறியது என மருத்துவர்கள் வியப்படைந்தனர்.

    இது குறித்து அந்த நோயாளியிடம் கேட்ட போது, அதற்கு அவர், 5 மாதங்களுக்கு முன் மது அருந்த சென்ற இடத்தில் ஏற்பட்ட ஒரு கைகலப்பில் அவர் முகத்தில் யாரோ ஒரு பொருளால் குத்தியதை மட்டும் நினைவுகூர்ந்தார். ஆனால், அப்போதே அவர் மருத்துவமனைக்கு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நாசியில் எந்த பொருளையும் கண்டு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    அந்த நோயாளி தற்போது நல்ல உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப உள்ளார்.

    • டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது.
    • நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

    ஹனோய்:

    வியட்நாமில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மாதம் இறுதி வரை ஒரு வாரத்திற்கு 3 ஆயிரம் என டெங்கு பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த மாதம் தொடங்கியது முதல் இருமடங்காக உயர ஆரம்பித்துள்ளது. இதுவரை டெங்கு நோய் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 99,639 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தலைநகரான ஹனோயில் மட்டும் 20,548 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட மூன்று மடங்கு அதிகம் என சுகாதார துறையினர் கூறுகிறார்கள். மேலும் தாச் தட், ஹோங் மாய், தான் ட்ரை, ஹா டோங் போன்ற நகரங்களில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தலைநகரில் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு காரணமாக வியட்நாமில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • கனமழையால் பல இடங்களில் அங்கு நிலச்சரிவு உருவானது.

    ஹனோய்:

    வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

    மேலும் இந்த கனமழையால் பல இடங்களில் அங்கு நிலச்சரிவு உருவானது. இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 9 பேரை மீட்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு பணி நடைபெற்று வருகிறது.

    • இறந்தவர்களில் குறைந்தது மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • விதிமுறைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கைது.

    வியட்நாமின் தலைநகர் ஹனோயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 56 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 37 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    வியட்நாமில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர தீ விபத்து நேற்று நள்ளிரவு ஏற்பட்டுள்ளது. 10 மாடி கட்டிடத்தின் பார்க்கிங் தளத்தில் மோட்டார் பைக்குகள் நிறைந்த பகுதியில் இருந்து தீ விபத்து தொடங்கியதாக கூறப்படுகிறது.

    மேலும், இறந்தவர்களில் குறைந்தது மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 150 பேர் இருந்ததாகவும், இதில் பலர் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குடித்ததாகவும் நேரில் தீ விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தீ தடுப்பு விதிமுறைகளை மீறியதாக சந்தேகத்தின் பேரில் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹனோய் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலி எண்ணிக்கை முன்னதாக 50ஆக இருந்த நிலையில், தற்போது 56ஆக உயர்ந்துள்ளது.

    ×