என் மலர்tooltip icon

    நைஜீரியா

    • நைஜீரிய மக்களின் பிரதான உணவு தானியம் அரிசி
    • அஃபாஃபாடாவை ஆலை அதிபர்கள் தூக்கி எறிந்து வந்தனர்

    கினியா வளைகுடா பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடு, நைஜீரியா. இதன் தலைநகரம், அபுஜா (Abuja).

    நைஜீரியா முழுவதும் விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் வாட்டி வருகிறது.

    அந்நாட்டு மக்களின் பிரதான உணவு தானியம், அரிசி.

    உயர்ந்து வரும் அரிசி விலையின் காரணமாக, அந்நாட்டு மக்கள் அரிசி ஆலைகளில் முன்னர் ஒதுக்கப்பட்டு வந்த அஃபாஃபாடா (afafata) எனும் தடியான, சமைக்க கடினமான அரிசி வகையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

    சில வருடங்களுக்கு முன், அஃபாஃபாடா அரிசியை, அரிசி ஆலை அதிபர்கள் மீன்களுக்கு உணவிட பயன்படுத்துபவர்களிடம் மட்டுமே குறைந்த விலைக்கு விற்று வந்தனர்; சில நேரங்களில் விற்காமல் தூக்கி எறிவார்கள்.

    ஆனால், தற்போது அங்கு நிலைமை மாறி வருகிறது.

    ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளதால், மீன் பண்ணை வைத்திருந்தவர்களுக்கு இப்போது அஃபாஃபாடா கிடைப்பது அரிதாகி வருகிறது.

    உலகளாவிய பொருளாதார மந்தநிலை, எரிபொருளுக்கான மானியத்தை அதிபர் போலா டினுபு (Bola Tinubu) ரத்து செய்தது, "நைரா" (Naira) எனும் அந்நாட்டு கரன்சி மீதான பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நைஜீரியாவில் உணவு பண்டங்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    பல மாநிலங்களில், விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தினர்.

    கடந்த 2 மாதங்களில் நைஜீரியாவில் விலைவாசி 2 மடங்காகி உள்ளது.

    வழக்கமாக, அந்நாட்டு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாங்கும் 50 கிலோ அரிசி மூட்டை தற்போது சுமார் ரூ.4400 ($53) எனும் மதிப்பில் விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு விற்கப்பட்ட விலையை விட 70 சதவீதம் அதிகம் என்பதால் பெரும்பாலான மக்களால் தரமான அரிசியை வாங்க முடியவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏழை எளிய மக்களுக்காக இலவசமாக வாதாடி வருபவர் கோலா
    • 13-வயது சிறுவனுக்கு நீண்ட சிறை தண்டனையை ரத்து செய்தார் கோலா

    நைஜீரியா நாட்டின் கானோ (Kano) பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கோலா அலப்பின்னி (Kola Alapinni).

    கோலா, இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் (Essex) பல்கலைக்கழகத்தில் சர்வதேச மனித உரிமைகள் சம்பந்தமான சட்ட படிப்பில் பட்டம் பெற்றவர்.

    சட்டத்துறையில் ப்ரோ போனோ (pro bono) எனப்படும், வழக்கறிஞருக்கான கட்டணத்தை பெறாமல், இலவசமாக, பொது நன்மைக்காக வாதாடும் முறையில், கோலா பலருக்காக வாதாடி வருகிறார்.

    மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, கடும் தண்டனை பெற இருந்த பலரின் சார்பாக கோலா வாதாடி, அவர்களை கடும் தண்டனையிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

    ஷரியா சட்டப்படி குற்றம் இழைத்ததாக கருதப்பட்டு தண்டனைக்குள்ளாகும் பல ஏழை எளிய மக்களுக்கு கோலா சட்ட ஆலோசனையையும், உதவியையும் வழங்கி வருகிறார்.

    இவரது உயிருக்கு எதிராக பல அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது.

    மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த யஹாயா ஷரீஃப்-அமினு எனும் பாடகரின் சார்பில் கோலா வாதாடியதால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

    கோலாவின் திறமையால் பல வருடங்கள் சிறை தண்டனை பெற இருந்த 13 வயது சிறுவன் ஒருவனுக்கு தண்டனை ரத்தானது.

    கோலாவின் சேவையை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க அரசு சர்வதேச மத சுதந்திர விருது (International Religious Freedom Award) எனும் உயரிய விருதை வழங்கியுள்ளது.


    இது குறித்து கோலா தெரிவித்ததாவது:

    வாழ்வா, சாவா எனும் ஆபத்தான நிலையில் உள்ள பலருக்கு எங்கள் பணி மெல்லிய நம்பிக்கையை தருகிறது. எப்போது வேண்டுமானாலும் அடிப்படைவாத கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து எங்களுக்கு உள்ளது. 2015ல் ஒரு கும்பல் காவல் நிலையத்தையும் நீதிமன்ற அறையையும் தீ வைத்து எரித்தது. எனது பல வருட போராட்டங்களுக்கான அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன்.

    இவ்வாறு கோலா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்தது.
    • ஓயோ மாநிலத்திற்குள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    நைஜீரியாவின் மிகப்பெரிய நகரங்களில் நேற்று இரவு ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், 12க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமானது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் இறந்தனர் மற்றும் 77 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களால் வெடிகுண்டு வெடித்ததாக தெரியவந்துள்ளது.

    மேலும் விரிவான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓயோ மாநிலத்திற்குள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    கனிம வளம் மிக்க நைஜீரியாவில் சட்டவிரோத சுரங்கம் பொதுவானது. அதனால், அதிகாரிகள் மத்தியில் சம்மந்தபட்டவர்களை கைது செய்வது கடினம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து, ஓயோ ஆளுநர் மகிந்தே, "வெடிபொருட்களை யார் பதுக்கி வைத்திருந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அதனால், கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்குக் காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்றார்.

    • கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
    • சனிக்கிழமை முதல் நேற்று வரை நடந்த இடைவிடாத துப்பாக்கி சண்டையில் பலர் உயிரிழப்பு.

    மத்திய நைஜீரியா நாட்டின் பிளாட்டு (Plateau) மாநிலத்தின் போக்கோஸ் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இந்த இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. நூற்றுக்கணகானவர்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர்.

    போக்கோஸ் பகுதியில் தொடங்கிய இந்த சண்டை பக்கத்து மாநிலமாக பார்கின்வாடி வரை பரவியது. இந்த மோதலில் முதலில் 16 பேர் மட்டுமே இறந்ததாக நேற்று முன்தினம் அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. ஆனால் சனிக்கிழமை முதல் நேற்று வரை நடந்த இடைவிடாத துப்பாக்கி சண்டையில் இதுவரை 113 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானது. மிருகத்தனமானது. நியாயமற்றது என அம்மாநில கவர்னர் காலேப் முல்ட்வாஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க அரசு நடவடிக்கை .எடுக்கும் என கவர்னரின் செய்தி தொடர்பாளர் கியாங் லரே தெரிவித்துள்ளார். 

    • ஆயுத கும்பலை குறிவைத்து ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
    • பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் கூடிய இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    நைஜீரிய நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஆயுத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கடுனா மாகாணம் டுடுன்பிரி கிராமத்தில் ராணுவ டிரோன் ஒன்று தாக்குதல் நடத்தியது.

    அந்த கிராமத்தில் பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒரு இடத்தில் கூடி இருந்தனர். அப்போது ராணுவ டிரோன் தவறுதலாக கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

    இதில் ஏராளமானோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

    ஆனால் கிராம மக்கள் கூறும்போது, 30 பேர் பலியானதாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். மற்றொரு தகவலில் 85 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
    • கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

    அபுஜா:

    நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நட்த்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்ற னர்.

    பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டியது. தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது.
    • துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
    • கவர்னர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது.

    நைஜீரியாவின் கடுனா மாகாணம் ஜாரியா நகரில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதியில் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகள், தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்தனர்.

    மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மசூதி, 1830-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பழமையான மசூதி என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து கடுனா கவர்னர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது. இந்த பேரழிவு குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    • பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது
    • என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்

    நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது போர்னோ நகரம். பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது.

    ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியில் கடந்த வாரம் பொது மக்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் போகா ஹராம் பயங்கரவாதிகள், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர்.

    "நேற்று காலை அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் பைக்கில் வந்தார்கள். வயல் வேலையில் இருந்த விவசாயிகளின் பண்ணைகளை நாசம் செய்தார்கள். பிறகு அவர்களை கொன்றார்கள். கொடூரமாக கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்" என அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு விவசாயி அபுபக்கர் மஸ்தா கூறினார்.

    இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது. நைஜீரியாவில் 2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பினால் அந்நாட்டில் பல ஆயிரக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை இயக்கம் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ். (Islamic State of West Africa) எனும் அமைப்பும் அந்நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    • டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பினர்.
    • பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் நேற்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து ஒண்டோவில் உள்ள ஃபெடரல் சாலை பாதுகாப்புப் படையின் தலைவர் எசேக்கியேல் சோனால்லா கூறுகையில், "

    நேற்று முன்தினம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பெட்ரோல் டேங்கர் சாலையை விட்டு விலகி ஒன்டோவின் ஓடிக்போ மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.

    இதைதொடர்ந்து, டேங்கரில் இருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடித்து சிதறியுள்ளது. நபர்களில் ஒருவர் செல்போன் வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம்" என்றார்.

    இந்த விபத்தில், டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் காயமின்றி தப்பினர்.

    பாதிக்கப்பட்ட அனைவரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லாரியை முந்திச் செல்ல முற்பட்டபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.
    • வாகன ஓட்டிகள், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

    நைஜீரியாவில் கொடிய சாலை விபத்துகள் அடிக்கடி பதிவாகின்றன, பெரும்பாலும் அதிக சுமை, மோசமான சாலை நிலைமைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

    தென்மேற்கு நைஜீரியாவின் லாகோஸில் நேற்று முன்தினம் பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோவா நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிரக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த சுமார் 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

    20 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து, லாகோஸ்-படக்ரி விரைவுச் சாலை வழியாக மோவோ நகருக்கு அருகே மணல் ஏற்றப்பட்ட டிரக் மீது மோதியதாக லாகோஸில் செய்தியாளர்களிடம் லாஸ்ட்மா செய்தித் தொடர்பாளர் தாவோபிக் அடேபாயோ தெரிவித்தார்.

    இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லாரியை முந்திச் செல்ல முற்பட்டபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

    வாகன ஓட்டிகள், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இதனால் தேவையில்லாத உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    • சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த ஹில்டா பாசி தனது ஓய்வு இடைவேளைகளில் கூடுதல் நிமிடங்களை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • சமையல் நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்ததாக அறிவிக்கப்பட்டது.

    நீண்ட நேரம் சமையல் செய்து உலக சாதனை படைத்து அசத்தி உள்ளார் நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண். அவரது பெயர் ஹில்டா பாசி. 26 வயதான இவர் சுமார் 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைக்க முயன்றுள்ளார்.

    மே 11-ந்தேதி தொடங்கிய இவரது சமையல் பயணம் மே 15-ந்தேதி வரை தொடர்ந்துள்ளது. சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த இவர் தனது ஓய்வு இடைவேளைகளில் கூடுதல் நிமிடங்களை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சமையல் நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்திய சமையல் கலைஞரான லதா டோண்டன் என்பவர் 87 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த சாதனை படைத்திருந்தார். அதனை ஹில்டா பாசி தற்போது முறியடித்துள்ளார். இதுகுறித்து ஹில்டா பாசி கூறுகையில், நைஜீரிய உணவு வகைகளை பிரபலபடுத்தும் வகையில் இந்த சாதனையை முயற்சி செய்ததாக அவர் கூறினார்.

    ×