என் மலர்
நேபாளம்
- ஜனாதிபதி, ராணுவ தளபதி, போராட்டக்குழு பிரதிநிதிகள் இடையே ஒருமித்த கருத்து.
- அதிபர் மாளிகை முறையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர் இவராவார்.
அதிபர் ராம் சந்திரா பவுடல், நேபாள ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், அதிபர் மாளிகை இந்த முடிவை முறையாக அறிவித்துள்ளது. சுஷிலா கார்கியை தேர்வு செய்ய ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் சம்மத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக பிரதமர் பதவி விலகினார். போராட்டத்தில் 51 பேர் உயிரிழந்தனர். அரசு கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர்.
- வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ராணுவம் தீவிர ஆலோசனை.
- குல்மான் கீசிங் இடைக்கால பிரதமராக பதவி ஏற்க வாய்பு இருப்பதாக கூறப்பட்டது.
நேபாளத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளம் மூலம் குரூப் உருவாக்கி இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். அதனைத் தொடர்ந்து அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதித்தது. இதனால் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு கட்டிடங்களை தீவைத்து கொழுத்தினர். இன்னும் வன்முறை ஓய்ந்த பாடில்லை.
இந்த வன்முறையில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் காசியாபாத்தை சேர்ந்தவர். மூன்று போலீசார் அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இடைக்கால அரசு அமைத்து வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ராணுவம், போராட்டுக்குழு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
முதலில் உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை தளபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நேபாள மின்சார ஆணையம் தலைவர் குல்மான் கீசிங் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- காத்மாண்டு நகரில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- தாக்குலில் பஸ்சில் இருந்த பக்தர்கள் 8 பேர் காயம் அடைந்தனர்.
நமது அண்டை நாடான நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குழுவினர் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தால் நேபாள தலைநகர் காத்மாண்டு கலவர பூமியாக மாறியது. இதனால் காத்மாண்டு நகரில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் காத்மாண்டுவுக்கு புனித யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பக்தர்கள் குழுவினர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா பஸ்சில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த பஸ்சை ஒரு கும்பல் வழிமறித்து கடுமையாக தாக்கியது. அவர்கள் சரமாரியாக கற்களை வீசி பஸ் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இந்த தாக்குலில் பஸ்சில் இருந்த பக்தர்கள் 8 பேர் காயம் அடைந்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகள், மொபைல்போன்கள், ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது.
இதையடுத்து சேதம் அடைந்த சுற்றுலா பஸ் உத்தரபிரதேச மாநில எல்லையான சோனாலிக்கு கொண்டு வரப்பட்டது. அதில் சென்ற பக்தர்கள் அனைவரும் மத்திய அரசு உதவியுடன் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.
- பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர்.
- நேபாள ராணுவம் அவர்களை மீட்டது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று பசுபதிநாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து பேருந்தில் திரும்பிகொண்டிருந்த அவர்களை சோனாலி அருகே கும்பல் ஒன்று வழிமறித்தது.
முதலில் மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி, பின்னர் பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர். இதில் 8 பேர் காயமடைந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு நேபாள ராணுவம் அவர்களை மீட்டு, இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தது.
இந்திய அதிகாரிகள் அனைவரையும் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
- வன்முறையை பயன்படுத்தி சிறையை உடைத்து கைதிகள் தப்பி ஓட்டம்.
- ஒரு சிறையில் இருந்து 692 பேர் தப்பி ஓடிய நிலையில், ஒரு கைதி திரும்பி வந்து சரணடைந்துள்ளார்.
நேபாளத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளம் மூலம் குரூப் உருவாக்கி இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். அதனைத்தொடர்ந்து அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதித்தது. இதனால் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு கட்டிடங்களை தீவைத்து கொழுத்தினர்.
இதனைப் பயன்படுத்தி நாட்டில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.
இதில் நேபாளத்தின் தொலைதூர வடக்கு மாகாணமான கைலாலியின் தலைநகர் தங்காடியில் உள்ள சிறையும் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர். இந்த சிறையில் இருந்து சுமார் 692 சிறைக்கைதிகள் தப்பி ஓடினர். தப்பித்துச் சென்ற ஒருசில நாட்களில் ஒரேயொரு கைதி மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளார்.
அடுத்த அரசு அமைக்கப்பட்ட பிறகு, தண்டனைக் காலம் இரண்டு மடங்காக அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் திரும்பி வந்ததாக தெரிவித்துள்ளார். தன்னுடைய தவறு எனக்கூறி சிறையில் சரணடைந்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை.
தப்பி ஓடியிருக்கலாம். ஆனால் போலீஸ் மீண்டும் அவரை கைது, சிறையை உடைத்து தப்பிச் சென்றதாக புதிய குற்றாட்டுக்கு ஆளானால், தண்டனை மேலும் அதிகமாகவும் என்பதை உணர்ந்து சரணடைந்துள்ளார்.
- முன்னாள் தலைமை நீதிபதி இடைக்கால பிரதமராக பதவி ஏற்க வாய்ப்பு இருந்தது.
- தற்போது அவருக்குப் பதிலாக இன்ஜினீயரை போராட்டக்குழுவினர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.
அரசியல் தலைவர்களின் ஊழல்களை எதிர்த்து இளைஞர்கள் ஜென் இசட் போராட்டங்கள் (Gen Z protests) என்ற பெயரில் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டனர். இதனால் நேபாளம் அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவித்தது.
இதனால் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாராளுமன்றம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு தீவைத்தனர். வன்முறை மற்றும் துப்பாக்கி சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர்.
போராட்டம் எதிரொலியால் ஜனாதிபதி, பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் இடைக்கால அரசு அமைத்து உடனடியான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவம் இதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
நேற்று முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
ஜென் இசட் பேராட்டம் குழுக்கள் ஆலோசனை நடத்தி காத்மாண்டு மேயர் பலேந்த்ரா பலேன் ஷா மற்றும் சுஷிலா கார்கி ஆகியோர் பெயர்களை பரிசீலனை செய்துள்ளது.
முதல் தேர்வு காத்மாண்டு மேயர் பலேந்த்ராவாகத்தான் இருந்துள்ளார். ஆனால், இவர் இடைக்கால அரசின் தலைவராக இருக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, தற்காலிய கட்டுப்பாட்டில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ராணுவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கீசிங் என்பவரை இடைக்கால பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. குல் மான் கீசிங் நேபாளத்தின் மின்சார நெருக்கடியை சமாளித்த திறமையான என்ஜினீயர் ஆவார். இவர் தேசப்பற்று கொண்டவர். எல்லோருக்கும் பிடித்தமானவர் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கியை போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் நீதிபதிகள் பிரதமராக வருவதை அரசியலமைப்பு தடை செய்கிறது என்றும், 73 வயதில் அவர் 'மிகவும் வயதானவர்' என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால இடைக்கால தலைவரை நியமிப்பதில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நேபாள அரசியலமைப்பின்படி, ஒரு கட்சியை சேர்ந்தவர், அவருக்கு மெஜாரிட்டி இருக்கும் பட்சத்தில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி இல்லை என்றால், ஜனாதிபதி நியமனம் செய்வார். அல்லது எதாவது எம்.பி. முன் முயற்சி மேற்கொண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பபை எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும்.
- நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன்.
- இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்.
நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக செப்டம்பர் 8 இல் வெடித்த இளைஞர்களின் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறி அந்நாட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது.
அடுத்த நாளே சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இது வழிவகுத்தது. அவரை தொடர்ந்து ஜனாதிபதியும் ராஜினாமா செய்தார்.
சர்மா ஒலி தற்போது காத்மாண்டுவின் வடக்கே உள்ள சிவுபுரி ராணுவ முகாமில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பதவி விலகிய பின் அவர் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியுள்ளார். அதில் தனது பதவி இழப்புக்கு இந்தியா மீதான தனது நிலைப்பாடே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் பிறந்ததை எதிர்த்ததால் தான் ஆட்சியை இழந்ததாகக் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா எல்லையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளான லிபுலேக், காலாபனி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்திற்கு சொந்தமானவை என்று தான் வலியுறுத்தியதும் தனது பதவி இழப்புக்கு ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவரது அறிக்கையில், "நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன். சமூக ஊடக நிறுவனங்கள் எங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார், இந்தியாவில் அல்ல என்று நான் கூறினேன். இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே போராட்டக்காரர்கள் பல அமைச்சர்களின் வீடுகளுக்குத் தீ வைத்ததுடன், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அதிபர் மாளிகைகளையும் சூறையாடினர்.
வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 13,500-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பி ஓடியதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
- சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமானது.
- போராட்டத்தின்போது நேபாள சிறைகளில் இருந்து 7,000 கைதிகள் தப்பியோடினர்.
காத்மண்டு:
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 கைதிகள் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். தகவலறிந்து விரைந்த ராணுவம் ஹெலிகாப்டரில் அங்கு சென்று கயிறுகளை வீசியது. கயிறுகளைப் பிடித்துக் கொண்டு அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
- நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமானது.
காத்மண்டு:
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியது.
சிறைகளில் இருந்து தப்ப முயன்ற 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும் தகவல் வெளியானது.
தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
- அரசு அலுவலகங்களை தொடர்ந்து ஹிலட்ன் ஓட்டல் தீக்கிரையானது.
காத்மண்டு:
நேபாளத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து போராட்டம் வெடித்ததால் இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.
மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கும் தீ வைத்ததால் அங்கு கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி இடைக்கால தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
- பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.
- ஜனாதிபதி ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார்.
அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.
அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
இந்த நிலைமையைப் பயன்படுத்தி, வன்முறைக் கும்பல்கள் வணிக வளாகங்களுக்குள் புகுந்து, டிவி, ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர்.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள ராணுவம் எச்சரித்துள்ளது.
- நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
- பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.
அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில், நேபாளில் பிரதமர், ஜனாதிபதி பதவி விலகியதை அடுத்து போராட்டம் தணிந்தது.
நாடு முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் நேபாளத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.






