என் மலர்
குவைத்
- பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், குவைத் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் சந்தித்தார்.
மேலும், தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் தெரவித்தார்.
அதன்படி, இந்திய விமானப்படை விமானம் மூலம், உடல்களை இந்தியா கொண்டுவரப்படுகிறது.
+2
- உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
கட்டத்தில் சுமார் 150 பேருக்கும் அதிகமானோர் தங்கி இருந்துள்ளனர். விபத்தின்போது பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய கிழக்கு நாடு அரசியல் நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ளது.
- பெரும்பாலான அரசு வசதிகளை அடைய ஊழல் பரவுவதை ஊக்குவித்தது.
குவைத்தின் எமிர் ஷேக் அல்-சபா, தீவிர இஸ்லாமியவாதத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாராளுமன்றத்தை கலைப்பதாகவும், அரசியலமைப்பின் சில பகுதிகளை 4 ஆண்டுகள் வரை இடைநிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.
குவைத் எமிர் ஷேக் மிஷால் அல் அகமது அல் சபா நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தை நான்கு ஆண்டுகள் வரை இடைநிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து மற்றொரு மத்திய கிழக்கு நாடு அரசியல் நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ளது.
இதுதொடர்பாக, அமிர் ஷேக் அல்- சபா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசுகையில், "அரசை அழிக்க ஜனநாயகத்தை பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன்.
முந்தைய ஆண்டுகளில் குவைத் அனுபவித்த ஆரோக்கியமற்ற சூழல், பெரும்பாலான அரசு வசதிகளை அடைய ஊழல் பரவுவதை ஊக்குவித்தது.
துரதிர்ஷ்டவசமாக அது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிறுவனங்களை அடைந்தது. இது நீதி அமைப்பைக் கூட பாதித்துள்ளது. இது மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் சரணாலயமாகும்.
எந்த உரிமையும் இன்றி மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் தக்க தண்டனை வழங்கப்படும்" என்றார்.
- ஷேக் சபா செப்டம்பர் 2020-ல் தனது 91 வயதில் இறந்தபோது மன்னராக பொறுப்பேற்றார்.
- 2020-ல் எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியின் மூலம் அவர் பொருளாதாரத்தை வழி நடத்த வேண்டியிருந்தது.
எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86வது வயதில் காலமானார்.
குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குவைத் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
நவம்பரில், ஷேக் நவாஃப் " உடல்நலப் பிரச்சனை காரணமாக" மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடல் நலம் நிலையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமாகியுள்ளார்.
ஷேக் நவாஃப் 2006ம் ஆண்டில் அவரது சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவால் கிரீட இளவரசராக நியமிக்கப்பட்டார். ஷேக் சபா செப்டம்பர் 2020-ல் தனது 91 வயதில் இறந்தபோது மன்னராக பொறுப்பேற்றார்.
2020-ல் எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியின் மூலம் அவர் பொருளாதாரத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. தற்போதைய பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா, மற்றொரு சகோதரர், 83 மற்றும் மேலும் ஒரு இளைய தலைமுறை ஆட்சியாளரை அடுத்த மன்னராக கொண்டு வரப்படுகிறாரா என்பதில் இப்போது அதிக கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






