என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
    • ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி எச்சரித்துள்ளார்.

    ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடலில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:03 மணிக்கு, சான்ரிகு கடற்கரைக்கு அருகில் கடலில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு புல்லட் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி தனது எக்ஸ் பக்கத்தில் "சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, எனவே தயவுசெய்து கடற்கரையிலிருந்து உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுங்கள். எதிர்பார்த்ததை விட பெரிய சுனாமி ஏற்படக்கூடும்" என்று அவர் பொதுமக்களை எச்சரித்தார். 

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் அரையிறுதியில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக், அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.

    இதில் 7-6 என பென்கிக் முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக சோபியா கெனின் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பென்கிக் 6-2 என வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெலிண்டா பென்கிக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை சந்திக்கிறார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா அரையிறுதியில் இருந்து விலகினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி சுற்றில் கஜகஸ்தான் எலினா ரிபாகினா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோத இருந்தார்.

    ஆனால் காயம் காரணமாக அவதிப்பட்டதால் போட்டியில் இருந்து விலகுவதாக ரிபாகினா அறிவித்தார். இதன்மூலம் செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் எலினா ரிபாகினா, கனடாவின் விக்டோரியா போகோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் ரிபாகினா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை சந்திக்கிறார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 3வது சுற்றில் கஜகஸ்தான் எலினா ரிபாகினா,கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • செக் நாட்டு வீராங்கனை கரோலினா முசோவா காலிறுதிக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 3வது சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்ட் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய கரோலினா முசோவா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் கனடா வீராங்கனை வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 2வது சுற்றில் கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய லெய்லா பெர்னாண்டஸ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளை பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார்.
    • ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார்.

    ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக் கட்சி பெரும்பான்மை இழந்ததையடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக சனே டகாய்ச்சி பதவியேற்றதை தொடர்ந்து அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதனை தொடர்ந்து ஜப்பான் பாராளுமன்ற கீழவையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. மொத்தம் உள்ள 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளை பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து மேலவையில் நடைபெறும் ஓட்டெடுப்பிலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்தே, ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார். இதன்மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சனே டகாய்ச்சி பெறுகிறார்.

    ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரட் தாட்சரை தமது ரோல் மடலாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா காயம் காரணமாக காலிறுதியில் விலகினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டின் உடன் மோத இருந்தார்.

    ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரொமேனியா வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, நெதர்லாந்தின் சூசன் லாமென்ஸ் உடன் மோதினார்.

    காலில் காயத்தால் அவதிப்பட்ட போதும் சிறப்பாக ஆடிய ஒசாகா 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஜப்பானின் நவோமி ஒசாகா, சக நாட்டு வீராங்கனையான சோனோபே வாக்னா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ×