என் மலர்
இஸ்ரேல்
- இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
- ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஜெருசலேம்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா முனையில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்து பேசினார். அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாடிய நெதன்யாகு, 'அடுத்தகட்டத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?' என்று கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
- மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், பொதுமக்களை தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.
எனவே மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அருகில் உள்ள எகிப்து நாட்டிற்குள்தான் செல்ல வேண்டும்.
இந்த நாட்டிற்குள் செல்ல ஒரே வழி தென்காசாவில் உள்ள ரஃபா கிராஸிங் எனும் பாதை ஆகும், அதனையும் இஸ்ரேல் மூடிவிட்டதாகவும், இனிமேல் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் இஸ்ரேல் அனுமதி பெற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் எங்களை தொடர்பு கொண்டுதான் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
- இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் செய்தியாளர் உயிரிழப்பு.
- இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (வெள்ளிக் கிழமை) தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் தனியார் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டார்.
போர் பற்றிய செய்தி சேகரிக்க சர்வதேச செய்தியாளர்கள் அடங்கிய குழு நேற்று மாலை தெற்கு லெபனான் அருகே உள்ள ஆல்மா அல் சஹாப் என்ற கிராமத்தில் ஒன்று கூடியது. அப்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தனியார் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளர் இசாம் அப்தல்லா உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து போரில் உயிரிழந்த செய்தியாளர் இசாமின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக இவரது உடலுக்கு செய்தியாளர்கள், லெபனான் பாராளுமன்ற உறுப்பினர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிறகு இவரின் உடல் லெபனானின் தெற்கில் உள்ள கியாம் கிராமத்தின் வழியே உள்ளூர் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெள்ளி கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது என்று லெபனான் வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம்சாட்டியதோடு, ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக புகார் அளித்தது.
- எல்லையை கடக்க முயலும் மக்கள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி முன்னேறினர்
- 25 அடி உயர முட்கம்பியை சேதப்படுத்தி உள்ளே நுழைய முயற்சித்தனர்
கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் பாலஸ்தீன மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளின் கொடிகளை கைகளில் வைத்திருக்கும் ஒரு கும்பல், கொடிகளை ஏந்தியபடி இஸ்ரேல் எல்லை பகுதியை கடந்து உள்ளே செல்ல முயல்வது தெரிந்தது. அந்த வீடியோவுடன் இணைக்கப்பட்ட செய்தி குறிப்பில் பாலஸ்தீனத்தை காக்க இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் இஸ்ரேலுக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆய்வில் இந்த வீடியோ தவறானது என தெரிய வந்துள்ளது.
உண்மை என்னவென்றால் இதில் காணப்படும் சம்பவம் தற்போது இஸ்ரேல்-காசா போர் நடைபெறும் காலகட்ட சம்பவமே அல்ல.
2021 வருடம், லெபனான் நாட்டை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காசா பகுதி மக்களின் உரிமைகளுக்காக லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உள்ள 25 அடி உயர முட்கம்பி வேலியை பல உபகரணங்களால் அறுத்து, இஸ்ரேலி எல்லைப்படை வீரர்கள் மேல் கற்களை எறிந்து, கையெறி குண்டுகளை வீசி உள்ளே நுழைய முயற்சித்த போது எடுக்கப்பட்டது.
2021ல் நடைபெற்ற சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ, தவறாக 2023 அக்டோபர் மாத சம்பவமாக வெளியிடப்பட்டுள்ளது.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்.
- இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம்.
ஹமாஸ் படையால் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் குடும்பத்தினர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-இல் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிணை கைதிகளின் பெயர்கள் எழுதப்பட்ட பலகைகளுடன் வந்து அவர்களை மீட்கக் கோரி கண்டனக் குரல் எழுப்பினர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதவிர, இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரட்டை குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறலாம் என்று முதலில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவது உறுதியானது.
- வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் மக்கள் தெற்கு காசா மற்றும் எகிப்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
டெல்அவிவ்:
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி அதிகாலை இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பு மீது போர் பிரகடனத்தை அறிவித்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனை பகுதி மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
மேலும் காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள், உணவு பொருட்கள் வினியோகத்தையும் இஸ்ரேல் நிறுத்தியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி காசா மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இரு தரப்பிலும் இதுவரை சுமார் 4,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி மக்கள் ஆவார்கள்.
ஹமாஸ் அமைப்பு மீது தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப எல்லையில் 3 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் எந்த நேரத்திலும் காசாவுக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்த தயாராகும் வகையில் இருந்தனர்.
ஆனால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணை கைதிகளை கொல்வோம் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தரைவழி தாக்குதலை உடனே தொடங்காமல் பிணை கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியது.
அதன்படி ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற 250 இஸ்ரேல் பிணை கைதிகளை மீட்டு கொண்டு வந்தனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது 18 பிணை கைதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பிணை கைதிகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து காசாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கான செயல்பாடு திட்டத்தை இஸ்ரேல் ராணுவம் வகுத்தது. இதில் வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பொதுமக்களை உடனே அங்கிருந்து வெளியேறி தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்தது.
காசா நகரின் சுரங்க பாதைக்குள்ளும் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்களுக்குள்ளும் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். எனவே மக்கள் தங்களது பாதுகாப்புக்காகவும், உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தும் ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து விலகி செல்லுங்கள் என்று இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியது.
வெளியேறுவதற்கான காலக்கெடுவாக 24 மணி நேரம் அளித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவது உறுதியானது.
தரைவழி தாக்குதலுக்கு முன்பு வான்வழி தாக்குதலை அதிதீவிரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வடக்கு காசாவில் உள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற தொடங்கி உள்ளனர்.
உயிர் பிழைக்க அப்பகுதியில் இருந்து ஓட்டம் பிடிக்க வேண்டும் அல்லது இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் வடக்கு காசா மக்கள் உள்ளனர். உயிருக்கு பயந்து அவர்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள்.

இன்றுடன் இஸ்ரேல் விதித்த கெடு முடிவடைவதால் மக்கள் வேகவேகமாக வெளியேறுகிறார்கள். பாலஸ்தீனியர்கள் தங்கள் பொருட்களை கார்கள், லாரிகள் மற்றும் கழுதை வண்டிகளில் கட்டி செல்கிறார்கள். பலர் தங்கள் வீட்டு கதவுகளை பூட்டி விட்டு சாவிகளை எடுத்துச் சென்றனர்.
போர் முடிந்து திரும்பி வருவோம் என்று அங்கிருந்து கவலையுடன் வெளியேறி வருகிறார்கள். இதுவரை லட்சக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக தெற்கு காசாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். பலர் நடைப் பயணமாக செல்கிறார்கள்.
இதனால் வடக்கு காசா சாலைகளில் வாகனங்கள், மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் மக்கள் தெற்கு காசா மற்றும் எகிப்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். காசாமுனை பகுதியில் மொத்தம் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்து வரும் நிலையில் அதில் பாதி அளவு பேர் இடம் பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தெற்கு காசாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடக்கு காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்கு மின்சாரம், உணவு, தண்ணீர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதே பெரும் திண்டாட்டமாக இருக்கும் நிலையில் அங்கிருந்து காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவதற்கான சூழல் மிக குறைவாக உள்ளது. இதனால் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

அதே வேளையில் இஸ்ரேல் விதித்துள்ள காலக்கெடு மிகவும் குறைவான நேரம் என்றும் அந்த காலக்கெடுவுக்குள் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவது சாத்தியமில்லை என்றும் ஐ.நா. சபை கவலை தெரிவித்தது. இதனால் பேரழிவு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வடக்கு காசாவை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஹமாஸ் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் மக்கள் உயிர் பயத்தில் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள்.
இந்த நிலையில் வடக்கு காசா மக்கள் வெளியேற இஸ்ரேல் பச்சைக் கொடி காட்டியுள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள மக்கள் கான்யூனுஸ் நகருக்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. 6 மணி நேரம் குறிப்பிட்ட வழித்தடப்பகுதிகளில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் ஆயுதங்கள் உள்ள பகுதி மற்றும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சோதனையை இஸ்ரேல் தரைவழி படை வீரர்கள் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறும்போது, "ஹமாசின் உள்கட்டமைப்புகளின் அச்சுறுத்தல்களை அகற்ற காசான் பிரதேசத்தில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தியது. பிணை கைதிகளை கண்டுபிடிக்க உதவும் ஆதாரங்களை வீரர்கள் சேகரித்தனர்" என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த சோதனையில் மாயமாகி இருந்த இஸ்ரேலியர்கள் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்டவர்களில் சிலரின் உடல்கள் காசா முனையில் கிடந்தது. அந்த உடல்களை இஸ்ரேல் படையினர் மீட்டுள்ளனர். ஆனால் எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
ஹமாஸ் அமைப்பினர் காசாவில் பல இடங்களில் சுரங்கங்கள் அமைத்து அதில் பதுங்கி உள்ளனர். எனவே அதுபோன்ற இடங்களை கண்டுபிடித்து தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்ததால் இன்னும் சிலமணி நேரங்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் பதட்டம் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் கிழக்கு, மேற்கு காசா பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி மற்றும் பீரங்கி தாக்குதலை தொடங்கியுள்ளது.
மேலும் காசாவில் தாக்குதலுக்கு காரணமாக தொலைத்தொடர்பு இணைய தள சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.
காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் கமாண்டர் பெயர் மெராத் அபு மெராட் என்று அறிவித்துள்ளது. இவர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரமான தாக்குதலை இவர்தான் வழிநடத்தினார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான சண்டையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த 27 பேரும், அதற்கு அடுத்தப்படியாக தாய்லாந்தை சேர்ந்த 24 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
- லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றவர்களை கொன்றதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
- ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையதாக மேற்கு கரையில் 230 பேரை இஸ்ரேல் பாதுகாப்புப் படை கைது செய்தது.
டெல் அவிவ்:
காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து இன்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் கமாண்டரின் பெயர் மெராத் அபு மெராட் என அறிவித்துள்ளது.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் பயங்கரமான தாக்குதலை இவர்தான் வழிநடத்தினார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் விமானப்படை ஆளில்லா வான்வழி தாக்குதல் மூலம் ஊடுருவ முயன்றவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.
பாலஸ்தீன மேற்கு கரையில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி வருகிறது. அப்போது தாக்குதலும் நடத்தப்படுகிறது.
ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையதாக மேற்கு கரையில் 230 பேரை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
- நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உரையாற்றினார்.
- அப்போது, நாங்கள் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்போம் என்றார்.
ஜெருசலேம்:
காசாவுக்குள் முதல் முறையாக இஸ்ரேல் தரைப்படை நேற்று நுழைந்தது. சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இது ஆரம்பம்தான். இந்தப் போரை இதுவரை இல்லாத அளவு வலிமையாக முடிப்போம்.
நாங்கள் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிப்போம். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பரந்த சர்வதேச ஆதரவு உள்ளது.
நமது எதிரிகள் இப்போதுதான் விலை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. ஆனால் இது ஆரம்பம் என்று நான் சொல்கிறேன்.
நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். யூத மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரங்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். வரம்பற்ற சக்தியைக் கொண்டு எங்கள் எதிரிகளை எதிர்த்து போராடுவோம் என தெரிவித்தார்.
- காசாமுனை பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து 250-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை மீட்டு வந்தது.
- ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, காசாமுனை பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து 250-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை மீட்டு வந்தது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், தற்போது காசாவில் 120-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிபடுத்தி உள்ளது என தெரிவித்தது.
- போரால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
- எச்சரிக்கையை ஏற்று மக்கள் உடனடியாக வெளியேறி வருகிறார்கள் என்றார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 7-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுத்து வருகிறது என இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கூறுகையில், போரால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். எச்சரிக்கையை ஏற்று மக்கள் உடனடியாக வெளியேறி வருகிறார்கள். ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுப்பது வேதனை அளிக்கிறது. 120க்கும் அதிகமான சாமான்ய மக்களை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- போர் இன்னும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
- இரு விமானங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிலவிய நீண்ட கால மோதல் தற்போது போராக வெடித்துள்ளது. இதில் இரு தரப்பினரும் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகி உள்ளனர். போர் இன்னும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் பணியில் ஒவ்வொரு நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
அந்த வகையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 1,600 பேர் தாயகம் திரும்ப உதவும்படி ஆஸ்திரேலிய அரசிடம் முறையிட்டுள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக இரு விமானங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து அந்த விமானங்கள் இயக்கப்படும் என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
- இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர்.
இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் 8ம் நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கென் இஸ்ரேல் சென்ற நிலையில், நேற்று அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் இஸ்ரேல் சென்றுள்ளார். அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், "ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மோசமானது ஹமாஸ் அமைப்பு" என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு பக்கபலமாக அமெரிக்கா என்றும் இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.






