என் மலர்
இஸ்ரேல்
- சுதந்திரப் போர் முடிவடையவில்லை.
- ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.
ஜெருசலேம்:
ஹமாசுக்கு எதிராக நடைபெற்று வரும் போர், மனிதகுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் "ஒளியின் சக்திகளுக்கும்", விலங்குகளை உள்ளடக்கிய "இருளின் சக்திகளுக்கும்" இடையேயான யுத்தம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "75 ஆண்டுகள் கடந்தும் கூட, சுதந்திரப் போர் முடிவடையவில்லை. ஹமாஸ் மீது வெற்றி பெறுவதே முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,, "ஹமாஸை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட வேண்டும். இந்தப் போர் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குமான போரும் கூட. இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஏனெனில் இது இந்த பிராந்தியத்தில் எங்களின் இருப்பைப் பற்றியது.
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தின் ஒரு பகுதிதான் ஹமாஸ். இவர்கள் மத்திய கிழக்கு பகுதிகளை படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இப்போது, இஸ்ரேல் யாரை எதிர்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள பலர் புரிந்துகொண்டிருப்பார்கள். ஹமாஸ் நாஜிக்களின் புதிய வெர்ஷன். நாஜிக்கள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்சை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட்டது போல, ஹமாஸை தோற்கடிக்கவும் ஒன்றுபட வேண்டும். ஈரானும், ஹிஸ்புல்லாவும் எங்களை சோதனை செய்து பார்க்க வேண்டாம். அப்படி செய்தால் இந்த முறை நீங்கள் செலுத்தும் விலை மிக அதிகமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.
- இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர் 10-வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
- ஹமாஸூக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் மட்டுமல்ல, இது உலகளாவிய போர் என அறிவிப்பு.
கடந்த அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை தேடி பழி வாங்கி வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர் 10-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 41 நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழப்பு மற்றும் மாயமாகியுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், 105 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 103 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் இது ஹமாஸூக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் மட்டுமல்ல, இது உலகளாவிய போர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எந்தெந்த நாட்டை சேர்ந்தவர்கள் மாயம் மற்றும் உயிரிழப்பு என்ற தகவலையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா, இலங்கை, நேபாளம், சீனா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, ரஷியா, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், தாய்லாந்து, பிரிட்டன், உக்ரைன் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழப்பு மற்றும் மாயமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- அக்டோபர் 7 அன்று, இஸ்ரேலில் ஹமாஸ் 1400க்கும் மேற்பட்டவர்களை கொன்றது
- எங்கள் கவனத்தை திசை திருப்ப ஈரான் முயல்கிறது என இஸ்ரேல் கூறியுள்ளது
லெபனான் நாட்டை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பு, ஹிஸ்புல்லா (Hezbollah).
1992ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவு இருந்து வருகிறது. அந்நாட்டில் அது ஒரு அரசியல் கட்சியாகவும் தன்னை முன்னிறுத்தி கொண்டுள்ளது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் தீவிரமாக எதிர்த்து வரும் இந்த அமைப்பு, மத்திய தரைகடல் பகுதியில் அந்த இரு நாடுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க போராடி வருகிறது.
கடந்த அக்டோபர் 7 அன்று தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி 1400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று, 150க்கும் மேற்பட்டவர்களை சிறை பிடித்து சென்ற ஹமாஸ் அமைப்பின் மீது போர் அறிவித்த இஸ்ரேல், அந்த அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்துள்ளது. இஸ்ரேலி ராணுவ படையினர் (IDF) பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது வான்வழியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி தரைவழி தாக்குதலை தொடங்க போவதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல், மும்முரமாக போரிட்டு வரும் வேளையில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதை எதிர் கொண்டு பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் வந்தால் எதிர் கொள்ளவும் தயார் நிலையில் உள்ளது.
இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் (Rear Admiral) டேனியல் ஹகரி (Daniel Hagari) கருத்து தெரிவித்தார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
நாங்கள் காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போரிட்டு வருகிறோம். எங்கள் கவனத்தை திசை திருப்ப லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையில் தொடர் துப்பாக்கி சூட்டை நடத்தி வருகின்றனர். இது ஈரான் நாட்டின் தூண்டுதலால் ஈரானின் துணையுடன் நடைபெறுகிறது.
இவ்வாறு ரியர் அட்மிரல் குற்றம் சாட்டி பேசினார்.
- இந்தியா தொடர்ந்து தனது நாட்டு மக்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
- குடிநீர், உணவு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் காசா தெற்கு பகுதி மக்களில் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்தாலும் மீதமுள்ளவர்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள்.
டெல்அவிவ்:
இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று (திங்கட்கிழமை) 10-வது நாளை எட்டி உள்ளது.
கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் தெற்கு பகுதியில் திடீர் தாக்குதலை தொடங்கிய ஹமாஸ் படையினர் தொடர்ந்து நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஹமாஸ் படையினரை முற்றிலுமாக ஒழிப்போம் என்ற சபதத்துடன் இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் படையினர் ஆட்சி நடத்தி வரும் காசா பகுதிக்குள் தரை வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 10 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் உத்தரவிட்டது.
அந்த கெடு முடிந்த நிலையில் காசா மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அவர்கள் காசாவின் தெற்கு பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காசாவின் தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசுவதால் அங்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் காசா பகுதி மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதையடுத்து எகிப்து நாட்டுக்குள் காசா மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் எகிப்து எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதற்கிடையே காசா மீது நேற்று இரவும் இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசின. 250 இடங்களை குறி வைத்து குண்டுகள் வீசப்பட்டதாக இன்று காலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டது. என்றாலும் ஹமாஸ் படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
காசாவின் வடக்கு பகுதியில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா. சபை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தரை வழி தாக்குதலை தொடங்குவதற்கு நேற்று முதல் இஸ்ரேல் தயாராகி வருகிறது. தரை வழி தாக்குதலுக்காக சுமார் 4 லட்சம் வீரர்களை இஸ்ரேல் தயாராக வைத்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு இஸ்ரேல் பிரதமருடனும், பாலஸ்தீன பிரதமருடனும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜோ பைடன் பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து அமெரிக்கா சார்பில் திடீர் எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "போரை இரு தரப்பினரும் மேலும் நீடிக்க விடாமல் தடுப்பது பற்றி ஜோ பைடன் பேசியுள்ளார். காசா மக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு இஸ்ரேல் மனிதாபிமானத்துடன் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு இரு நாடுகளும் சாதகமான பதில் அளித்துள்ளன" என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜோ பைடன் நேற்று இரவு பேட்டியளித்தார். அப்போது அவர் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து தரைவழி தாக்குதல் பற்றி இஸ்ரேல் பிரதமர் உடனடி ஆலோசனை நடத்தினார்.
காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹமாஸ் படை மீது தரை வழி தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இஸ்ரேல் தீவிரமாக உள்ளது. அமெரிக்கா, ஈரான் உள்பட பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் முனைப்புடன் உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் காசா மக்களுக்கு விடுத்திருந்த கெடு முடிந்த நிலையில் திட்டமிட்டபடி தரை வழி தாக்குதலை இன்று (திங்கட்கிழமை) இஸ்ரேல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை உறுதி செய்வது போல இன்று காசா அருகே தனது படைகளை இஸ்ரேல் மேலும் நகர்த்தியது.
இன்று அதிகாலை முதல் காசா எல்லை அருகே நிறைய வீரர்களை இஸ்ரேல் விமானங்கள் தரைஇறக்கி வருகின்றன. எனவே எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என்ற நிலை நிலவுகிறது.
ஏற்கனவே குடிநீர், உணவு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் காசா தெற்கு பகுதி மக்களில் 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்தாலும் மீதமுள்ளவர்கள் இன்னமும் அங்கேயே இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் தங்கள் மீது குண்டு வீசப்படலாம் என்று அவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
நேற்று இரவு காசா தெற்கு பகுதியில் 250 இடங்களை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் அழித்துள்ளன. இதில் ஹமாஸ் படையின் மூத்த கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கிடையே இன்று காலை 9 மணிக்கு எகிப்து தனது எல்லையை கடந்தது. இதனால் காசா மக்கள் அந்த வழியாக அகதிகளாக வெளியேற தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு உதவ ஐ.நா. சபை குழுக்களை அனுப்பி உள்ளது.
மேலும் பிணை கைதிகளாக இருப்பவர்களை ஹமாஸ் படையினர் விடுவிக்க வேண்டும் என்றும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியா தொடர்ந்து தனது நாட்டு மக்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இன்று இந்தியாவின் 5-வது விமானம் டெல்அவ்வில் இருந்து புறப்பட்டு உள்ளது.
இன்று மதியம் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "காசாவின் அனைத்து முனைகளிலும் இஸ்ரேல் தரைப்படை தயார் நிலையில் உள்ளது. மிகப்பெரிய போரை நடத்தப் போகிறோம்" என்று அறிவித்துள்ளது.
இதனால் இஸ்ரேல் ராணுவம் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தினால் காசாவில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
- பாதுகாப்பு அதிகாரி சுடும் காட்சிகளும், ஹமாஸ் படையை சேர்ந்தவர் சுருண்டு விழுந்து மரணம் அடையும் காட்சிகளும் வீடியோவில் முழுமையாக பதிவாகி உள்ளது.
- முழு வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹமாஸ் படையினர் முதலில் இஸ்ரேலில் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட போது ஹமாஸ் படையை சேர்ந்தவரின் கேமரா அவரது மரணத்தையே வீடியோ எடுத்தது. அந்த வீடியோவில் ஹமாஸ் படையை சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் அவர் வைத்திருந்த கேமராவிலேயே பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ கடந்த 7-ந்தேதி எடுக்கப்பட்டு உள்ளது. ஹமாஸ் படையை சேர்ந்த அவர் தெற்கு இஸ்ரேலில் உள்ள கிப்புட்ஸ் சூர்பா பகுதியில் உடையில் செல்போன் கேமராவை பொருத்தியபடி தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த கேமரா இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதலை படம் பிடித்தது.
அவரது முன்னால் ஹமாஸ் படையை சேர்ந்த மற்றொருவர் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி சென்று கொண்டிருந்தார். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவானது. தாக்குதல் காட்சிகளை அவர் படம் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது.
அப்போது வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஹமாஸ் படையை சேர்ந்த அவர் திடீரென்று வலியால் துடித்தபடி தரையில் சுருண்டு விழுந்தார். அந்த நேரத்தில் மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டன. அவரை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அந்த அதிகாரி சுடும் காட்சிகளும், ஹமாஸ் படையை சேர்ந்தவர் சுருண்டு விழுந்து மரணம் அடையும் காட்சிகளும் வீடியோவில் முழுமையாக பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த முழு வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
- பிரதமர் நேதன்யாகு காசாவில் ராணுவ முகாமிற்கு நேரில் சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்தார்.
- காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
டெல் அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் தாக்குதலில் மாயமானோர் மற்றும் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.
- இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது.
- காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது.
ஜெருசலேம்:
இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. இதன்காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வந்தனர்.
இந்நிலையில் தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காசாவுக்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய இஸ்ரேலின் முடிவுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
- இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
- லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் இன்று 9வது நாளாக நீடித்து வருகிறது.
கடந்த 7-ம்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாமுனை மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இரு தரப்பிலும் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இதையடுத்து போர் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. எல்லையில் 3 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேலிய வடக்கு எல்லைக் கிராமத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.
- போர் 9-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
- வீரர்களுக்கு தங்கள் உணவகங்களில் தள்ளுபடியையும் அறிவித்திருக்கிறது
தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்திய ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீன காசா பகுதியில் அந்த அமைப்பினரை தேடி தேடி வேட்டையாடி வருகிறது. காசாவில் வசிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
போர் 9-வது நாளாக தொடர்ந்து நடைபெறும் நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் துணை நிற்கின்றன. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், கத்தார் உள்ளிட்ட பல அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்ட மெக்டொனால்ட்'ஸ் (McDonald's) எனும் பன்னாட்டு துரித தொடர் உணவக நிறுவனம், இஸ்ரேல் ராணுவ படைகளின் (Israeli Defence Forces) வீரர்களுக்கு இலவசமாக உணவு வழங்க போவதாக அறிவித்திருக்கிறது.
தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அந்த நிறுவனத்தின் இஸ்ரேல் நாட்டு அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
நேற்று 4000 பேருக்கான இலவச உணவை மருத்துவமனைகளுக்கும், ராணுவ முகாம்களுக்கும் வழங்கி விட்டோம். வர போகும் நாட்களில் தினமும் 1000க்கும் மேலானவர்களுக்கான உணவை வழங்க இருக்கிறோம். உணவை அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும், போர் களத்திலும் வழங்க இருக்கிறோம். இவற்றை தவிர இஸ்ரேலி போர் வீரர்களுக்கு எங்கள் உணவகங்களில் தள்ளுபடியும் தந்து கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு உதவுவதற்காக மேலும் 5 உணவகங்கள் திறக்க இருக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்டொனால்ட்'ஸ் உணவகத்தின் இந்த முடிவிற்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. லெபனானில் உள்ள உணவகத்தின் மீது ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவானவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
- இஸ்ரேல், ஹமாஸ் போரினால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
- ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டரான மெராத் அபு மெராட் நேற்று கொல்லப்பட்டார்
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 8-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர் மெராத் அபு மெராட் தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அறிவித்தது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் மற்றொரு கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை இன்று தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டது நுக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா என தெரிவித்துள்ளது.
- காசா மீது இன்று 9-வது நாளாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
- இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, தனது போர் கப்பலை அனுப்பியது.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில் தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப் பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாமுனை மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இரு தரப்பிலும் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இதையடுத்து போர் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. எல்லையில் 3 லட்சம் வீரர் கள் குவிக்கப்பட்டனர். தரைவழி தாக்குதலுக்கு தயாரான நிலையில் வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியது.
இதையடுத்து வடக்கு காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி தெற்கு காசாவுக்கு சென்றனர். இன்னும் ஏராளமானோர் வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் வெளியேறுவதற்காக இஸ்ரேல் விதித்த காலக்கெடு முடிவடைந்ததையடுத்து எந்நேரத்திலும் தரைப்படை புகுந்து காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது போர் தாக்குதல் நடத்தும் சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகிறார்கள்.
நேற்று மக்கள் வெளியேறுவதற்காக குறிப்பிட்ட பகுதியில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் இன்று 2-வது பாதுகாப்பான வழிதடத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. சாலா ஏ-தின் சாலை பகுதிகளில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலின் முப்படைகளும் போருக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலின் தரைப்படை, தரைவழி கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முப்படைகளும் காசாவில் உள்ள எல்லையில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் ராணுவத்தின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். தாக்குதலுக்கான உத்தரவு கிடைத்ததும் முப்படைகளும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நிலையில் உள்ளன.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறியவுடன் இஸ்ரேல் குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கைகளை தொடங்கும். பொதுமக்கள் வெளியேறுவதில் கவனம் செலுத்த வேண்டியதும் முக்கியமான விஷயம். எனவே நாங்கள் அவர்களுக்கு காலக்கெடுவை மிகவும் தாராளமாக கொடுத்துள்ளோம் என்பதை காசாவில் உள்ளவர்கள் அறிவது மிக முக்கியம். அவர்களுக்கு போதுமான எச்சரிக்கை வழங்கி உள்ளோம்.
அவர்களிடம் நாங்கள் கூறுவது ஒன்றுதான். உங்களது பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். தெற்கு பகுதிக்கு உடனே செல்லுங்கள். உங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹமாஸ் விரிக்கும் வலையில் விழாதீர்கள்" என்றார்.
இதன் மூலம் வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேறியதை உறுதி செய்தவுடன் தாக்குதலை தொடங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் இஸ்ரேல் விதித்திருந்த காலக்கெடு நேற்று இரவுடன் முடிந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி உள்ளனர்.
இதனால் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் முப்படைகளும் தாக்குதலை எந்த நேரத்திலும் தொடங்கலாம். இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மும்முனையில் இருந்து தாக்குதல் நடத்தியதை விட அதிபயங்கர தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்னோட்டமாக நேற்று இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் புகுந்து சிறிய அளவிலான தாக்குதலை நடத்தியது.
ஏற்கனவே இஸ்ரேல் ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் ராணுவம் திரும்ப பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் முனைக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். எல்லை பகுதிக்கு சென்ற அவர் ராணுவ வீரர்களிடம் கூறும்போது, "வரும் நாட்களில் வர இருக்கும் சம்பவங்களுக்கு நீங்கள் தயாரா? இன்னும் நிறைய சம்பவங்கள் வர போகிறது" என்று ராணுவ வீரர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதலை தொடங்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபற்றி இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதே வேளையில் காசா மீது இன்று 9-வது நாளாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, தனது போர் கப்பலை அனுப்பியது. இந்த நிலையில் 2-வது விமானம் தாங்கி கப்பலை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, கிழக்கு மத்திய தரை கடல் பகுதிக்கு 2-வது போர் கப்பலை அனுப்ப பென்டகன் உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல்கள் காசாவில் சண்டையிடுவதற்கோ அல்லது இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்கோ அல்ல ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு போர் விமானங்கள் மற்றும் தரை வழி தாக்குதல் ஜெட் விமானங்களை அனுப்புவதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் பேசினார். அதே போல் பாலஸ்தீனத்தின் மேற்குகரை அதிபர் அப்பாசுடனும் பேசினார். அப்போது, காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்களை காப்பதற்கான உதவிகள் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ள நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சவூதி அரேபியாவின் அழைப்பின் பேரில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. காசா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகரித்து வரும் ராணுவ நடவடிக்கை மற்றும் மோசமடைந்து வரும் நிலைமைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறார்கள்.
வடக்கு காசாவில் இருந்து மக்கள் பெரிய அளவில் இடம் பெயர்வது மிகவும் தீவிரமான மனிதாபிமான ரீதியிலான பாதிப்புக்கு வழி வகுக்கும் என்று ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு கூறும்போது, "வடக்கு காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து நோய்வாய்ப்பட்ட மற்றும் காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவது அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதற்கு சமம். நோயாளிகள், சுகாதார பணியாளர்களை கட்டாயமாக வெளியேற்றுவது மனிதாபிமான மற்றும் பொது சுகாதார பேரழிவை மேலும் மோசமாக்கும் என்று தெரிவித்துள்ளது.
- காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதல் நடத்தப்படாது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதலைத் தவிர்க்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளும் அங்கீகரித்திருப்பதாக இதற்கான முயற்சியை மேற்கொண்ட கத்தார் தெரிவித்துள்ளது.
காசாவில் இருந்து ரபா முனை வழியாக வெளிநாட்டவர்கள் எகிப்துக்குள் செல்வதற்கு எகிப்தும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






