search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹமாஸ் தாக்குதலில் மாயமான, சிறைபிடிக்கப்பட்டோர் குடும்பத்தினரை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்
    X

    ஹமாஸ் தாக்குதலில் மாயமான, சிறைபிடிக்கப்பட்டோர் குடும்பத்தினரை சந்தித்த இஸ்ரேல் பிரதமர்

    • பிரதமர் நேதன்யாகு காசாவில் ராணுவ முகாமிற்கு நேரில் சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்தார்.
    • காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் தாக்குதலில் மாயமானோர் மற்றும் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.

    Next Story
    ×