search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலவச உணவா? மெக்டொனால்ட்ஸ் முடிவிற்கு உலகெங்கும் வலுக்கும் எதிர்ப்பு
    X

    இலவச உணவா? மெக்டொனால்ட்'ஸ் முடிவிற்கு உலகெங்கும் வலுக்கும் எதிர்ப்பு

    • போர் 9-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • வீரர்களுக்கு தங்கள் உணவகங்களில் தள்ளுபடியையும் அறிவித்திருக்கிறது

    தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்திய ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீன காசா பகுதியில் அந்த அமைப்பினரை தேடி தேடி வேட்டையாடி வருகிறது. காசாவில் வசிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.

    போர் 9-வது நாளாக தொடர்ந்து நடைபெறும் நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் துணை நிற்கின்றன. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், கத்தார் உள்ளிட்ட பல அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்ட மெக்டொனால்ட்'ஸ் (McDonald's) எனும் பன்னாட்டு துரித தொடர் உணவக நிறுவனம், இஸ்ரேல் ராணுவ படைகளின் (Israeli Defence Forces) வீரர்களுக்கு இலவசமாக உணவு வழங்க போவதாக அறிவித்திருக்கிறது.

    தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அந்த நிறுவனத்தின் இஸ்ரேல் நாட்டு அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

    நேற்று 4000 பேருக்கான இலவச உணவை மருத்துவமனைகளுக்கும், ராணுவ முகாம்களுக்கும் வழங்கி விட்டோம். வர போகும் நாட்களில் தினமும் 1000க்கும் மேலானவர்களுக்கான உணவை வழங்க இருக்கிறோம். உணவை அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும், போர் களத்திலும் வழங்க இருக்கிறோம். இவற்றை தவிர இஸ்ரேலி போர் வீரர்களுக்கு எங்கள் உணவகங்களில் தள்ளுபடியும் தந்து கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு உதவுவதற்காக மேலும் 5 உணவகங்கள் திறக்க இருக்கிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மெக்டொனால்ட்'ஸ் உணவகத்தின் இந்த முடிவிற்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. லெபனானில் உள்ள உணவகத்தின் மீது ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவானவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    Next Story
    ×