என் மலர்
சீனா
- பாகிஸ்தானுக்கு சீனா மிகவும் நெருக்கமான நட்பு நாடாக இருந்து வருகிறது.
- பாகிஸ்தானுடன் தற்போது அமெரிக்கா அதிக நெருக்கம் காட்டி வருகிறது.
பாகிஸ்தான் உடனான நட்பை மேம்படுத்திக் கொள்ள அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு மிகவும் நெருக்கமான நாடாக சீனா இருந்து வருகிறது. பல பில்லியன் டாலர் அளவிலான கூட்டுத் திட்டங்களை பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய போரில் சினா பாகிஸ்தானுக்கு பெருமளவில் உதவியது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்தது. இந்த நிலையில்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விருந்தளித்தார். இந்தியா- பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் நெருக்கம் இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீனாவை விலையாக கொடுத்து, அமெரிக்கா உடனான உறவை பாகிஸ்தான் வளர்க்காது என சீன நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவின் உலகளாவிய செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தி வரம்பை பாகிஸ்தான் புரிந்து கொள்கிறது. சீனா உடனான நட்பை விலையாக கொடுத்து பாகிஸ்தான் அமெரிக்கா உடனான நட்பை வளர்க்காது. பாகிஸ்தானை எளிதாக டிரம்ப் வசம் சிக்க வைக்க முடியாது. அமெரிக்காவின் தலையீடு குறுகிய கால புவிசார் அரசியல் சலசலப்பை உருவாக்கியுள்ளது, ஆனால் சீனா-பாகிஸ்தான் சார்பு நிலையின் அடித்தளத்தை அசைக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
- காய்ச்சல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் இருந்தாலே அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுகி சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- பூந்தொட்டிகள், டயர்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
சீனாவில் சமீப காலமாக சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் போஷான் உள்ளிட்ட 12 நகரங்களில் இந்த தொற்று வேகமெடுத்துள்ளது.
இதனால் கடந்த ஒரு மாதத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்குன்குனியா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சீன பயணத்தை தவிர்க்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் எடுக்கப்பட்டதுபோல விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி சிக்குன் குனியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும் காய்ச்சல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் இருந்தாலே அருகில் உள்ள ஆஸ்பத்திரியை அணுகி சோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிக்குன்குனியா தொற்று பரவுவதற்கு முக்கிய காரணம் கொசுக்களே. தேங்கும் தண்ணீரில்தான் அவை அதிகளவில் உற்பத்தியாகின்றன.
எனவே பூந்தொட்டிகள், டயர்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும். மீறினால் சுமார் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
மக்காவ்:
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஆல்வின் பர்ஹான் உடன் மோதினார்.
இதில் 16-21, 9-21 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்திய வீரர் தருண் மன்னேபல்லி மலேசியாவின் ஜஸ்டின் ஹோவிடம் வீழ்ந்தார்.
- மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.
மக்காவ்:
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் சூங் ஹோன் ஜியான் - முகமது ஹைகல் ஜோடி உடன் மோதியது.
இதில் 21-14 என முதல் செட்டை மலேசியா ஜோடி வென்றது. 2வது செட்டை இந்திய ஜோடி 21-13 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மலேசியா ஜோடி 22-20 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதி சுற்றில் வென்றார்.
மக்காவ்:
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் சூ சுவான் சென் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபல்லி சீனாவின் ஹூ ஜென்னை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி 2வது சுற்றில் வெற்றி பெற்றது.
மக்காவ்:
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி நிஷி-காகேரு குமாகாய் ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 10-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாய் பிரதீக்-பிருதிவி கிருஷ்ணமூர்த்தி ராய் ஜோடி, மலேசிய ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
- மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இந்திய வீரர் லக்ஷயா சென் 2வது சுற்றில் வென்றார்.
மக்காவ்:
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் வார்டயோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபல்லி ஹாங்காங் வீரரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
- மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இந்திய வீரர் லக்ஷ்யா சென் முதல் சுற்றில் வென்றார்.
மக்காவ்:
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், தென் கொரியாவின் ஜியோன் ஹியோக்-ஜின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-8, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தருண் மன்னேபல்லி ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
- சீனாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
- சுமார் 80 ஆயிரம் பேர் மாற்று இடங்களில் குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
பீஜிங்:
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. மியுன், யாங்கிங் ஆகிய மாகாணங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
ஒரே இரவில் கனமழை கொட்டித் தீர்த்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
பாதிக்கப்பட்ட 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர்.
தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேரை காணவில்லை.
மியுன் மாகாண அணைகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சீனாவில் பெய்துள்ள கனமழை,வெள்ளத்திற்கு இதுவரை 34 பேர் பலியாகினர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
- குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை10 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்டது.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது.
இதையடுத்து குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தை பிறப்பை அதிகரிக்க பல சலுகைகளை அறிவித்தது. இருந்த போதிலும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.
இந்த நிலையில் மேலும் ஒரு திட்டத்தை சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் சீன அர சாங்கம் அறிவித்தது. இந்த நிதி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படும். அதன் படி ஒரு குழந்தைக்கு ரூ.1.30 லட்சம் மானியம் வழங்கப் படும்.
மேலும் 2022 மற்றும் 2024ம் ஆண்டுக்கு இடையில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் பகுதியளவு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன் அடையும். குழந்தைகளை வளர்ப்பதற்கான நிதிச் சுமையைக் குறைக்க உதவும். இளம் தம்பதிகளின் கருவுறுதல் கவலைகளைத் தணிக்கும் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரி வித்துள்ளது.
சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை10 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்டது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை தொடர்ந்து சரிந்து வருகிறது.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதி சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதனால் சாத்விக்-சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆங் யூ சின்-டியோ யே யீ ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.






