என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கேரளா எம்.பி.க்கள் பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
- டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
- விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களில் கே.சி.வேணுகோபால், கே.ராதாகிருஷ்ணன், கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் அடூர் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு கேரள எம்.பி.க்கள் அடங்குவர்.
கடந்த ஜுன் மாதம் 12 ஆம் தேதி நடந்த அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
Next Story






