என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவம்: 41 பேரை அடித்து கொன்றார்கள்- நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு
- விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
- விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும்.
நெல்லை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. 41 பேரை அடித்து கொன்றார்கள், மிதித்து கொன்றார்கள். தள்ளுமுள்ளுவை சாக்காக வைத்து விஜயை காலி செய்து விட்டால் என்ன செய்வது?
விஜய் கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரி உள்ளார். இந்த விவகாரத்தில் ஆளும் தி.மு.க. அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது என்றார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் நயினார் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.






