என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?- எடப்பாடி பழனிசாமி
    X

    நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?- எடப்பாடி பழனிசாமி

    • பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க.வுக்கு பயம் வந்துட்டது.
    • வலுவான கூட்டணியா? வலு இல்லாத கூட்டணியா? என்பது தேர்தலின் போது தான் தெரியும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது, செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அமைச்சரவை மீதான நம்பிக்கை போய்விட்டது.

    * 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி விதி 72-ன் கீழ் சபாநாயகரிடம் கடிதம் அளித்தோம்.

    * கடிதம் அளித்தும் சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

    * கடந்த காலங்களில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் பலமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

    * பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில் மாநிலத்தில் நிலவக்கூடிய பிரச்சனைகளை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் ஜீரோ ஹவரில் பேச பல முறை தி.மு.க.விற்கு அனுமதி அளித்தோம், இன்று எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    * நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன?

    * பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க.வுக்கு பயம் வந்துட்டது.

    * வலுவான கூட்டணியா? வலு இல்லாத கூட்டணியா? என்பது தேர்தலின் போது தான் தெரியும்.

    * தேர்தல் நெருங்குவதால் மாநில சுயாட்சி குறித்து பேசி தி.மு.க. அரசு திசை திருப்புகிறது என்றார்.

    முன்னதாக, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க.வினர், கண்டிக்கின்றோம்... கண்டிக்கின்றோம்.. சபாநாயகரை கண்டிக்கின்றோம்.. மு.க.ஸ்டாலினை கண்டிக்கின்றோம் என முழக்கமிட்டனர்.

    Next Story
    ×