என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள்
- கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
- கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்தார்.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் சமீப காலமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் த.வெ.க. தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து, தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார்.
த.வெ.க.வில் இணைந்துள்ள மனோகரன் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். அதனை தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கு பெறாமல் இருந்து வந்த மனோகரன் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
அதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் த.வெ.க.வில் இணைந்தார். இவர் 2006- 2011 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
வரும் தேர்தலில் த.வெ.க. சார்பில் இவர்கள் அவரவர்கள் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






