search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜாபர் சாதிக் மூலம் பல உண்மைகள் வெளிவரும்- ஜெயக்குமார்
    X

    ஜாபர் சாதிக் மூலம் பல உண்மைகள் வெளிவரும்- ஜெயக்குமார்

    • போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
    • தி.மு.க.வுக்கு அது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு இன்று ஆலோசனை நடத்தியது. கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்தும் விசாரணையில் ஜாபர் சாதிக் நிச்சயம் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்.

    அப்போது போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும். இதன் மூலம் தி.மு.க. கலகலத்து போகும். போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். தி.மு.க.வுக்கு அது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×