search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்பவர்களுடனே கூட்டணி- ஜெயராமன்
    X

    எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்பவர்களுடனே கூட்டணி- ஜெயராமன்

    • தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது.
    • விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-பாலக்காடு சாலை தனியார் கல்யாண மண்டபத்தில் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை சபாநாயகரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. இதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மேலும் விலை வாசி ஏற்றத்தாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


    பொள்ளாச்சி நகராட்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. பொள்ளாச்சி நகரத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.

    ஒரு போலீஸ் அதிகாரி மோட்டார் சைக்கிள் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    அந்தளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு காணப்படுகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும்.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பொறுத்த வரை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்று கொள்பவர்களுடனே நாங்கள் கூட்டணி அமைப்போம். அப்படி வருபவர்களை சேர்த்து கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×