என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே மீண்டும் பேச்சுவார்த்தை
- அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது.
- அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க.வுடன் சந்திக்க தே.மு.தி.க. முடிவு செய்து உள்ளது. இரு கட்சி நிர்வாகிகளும் 2 கட்ட பேச்சு வார்த்தை நடத்தி முடித்து உள்ளனர். தே.மு.தி.க.விற்கு 3 அல்லது 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.
ஆனால் மேல்சபை எம்.பி. ஒன்றையும் தே.மு.தி.க. கேட்டு வருவதால் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு மேல்சபை எம்.பி. கொடுக்க முடியாத சூழலை விளக்கி கூறினாலும் தே.மு.தி.க. பிடிவாதமாக உள்ளது.
இதற்கிடையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை இழுக்கும் முயற்சியும் ஒருபுறம் நடந்து வருகிறது. பா.ம.க. வந்தால் அ.தி.மு.க. கூட்டணி வலுவடையும் என கருதி அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படுகின்ற நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்தும் அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு தே.மு.தி.க. தயாராக இருந்த நிலையில் அழைப்பு இல்லாததால் பேசவில்லை. பா.ம.க.வை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளதால் பேச்சுவார்த்தை தள்ளிப் போனது. இன்று மாலை தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு கொடுத்துள்ளது.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு இன்று சென்னை திரும்புகிறார். இதையடுத்து தொகுதி பங்கீட்டு குழுவினர் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி ஆகியோர் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு விடும். ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்