என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூரில் தோல் தொழிலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Byமாலை மலர்1 Aug 2019 10:47 AM GMT (Updated: 1 Aug 2019 11:58 AM GMT)
வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆம்பூரில் தோல் தொழிலாளர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆம்பூர்:
வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். 29-ந்தேதி இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
மு.க.ஸ்டாலின் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 2-வது கட்ட பிரசாரத்திற்காக நேற்று இரவு ஆம்பூர் வந்தார்.
ஆம்பூர் மோட்டுக்கொல்லையில் உள்ள ஓய்வு விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலை மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். மோட்டுக் கொல்லையில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்கள் மோட்டுக்கொல்லைக்கு வரவழைக்கப்பட்டனர். அங்குள்ள விடுதி வளாகத்தில் தொழிலாளர்கள் சபா நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்டாலின் கலந்துகொண்டு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தரக்கோரி வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து விண்ணமங்கலம், கிரிசமுத்திரம், செங்கிலி குப்பம் கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
இன்று மாலை வீராங்குப்பம், வடச்சேரி, மதனாஞ்சேரி, செங்கிலி குப்பம் ஆம்பூர் டவுனில் பிரசாரம் செய்கிறார்.
நாளை குடியாத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்திசவுக், குடியாத்தம், புதிய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார். 29-ந்தேதி இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
மு.க.ஸ்டாலின் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 2-வது கட்ட பிரசாரத்திற்காக நேற்று இரவு ஆம்பூர் வந்தார்.
ஆம்பூர் மோட்டுக்கொல்லையில் உள்ள ஓய்வு விடுதியில் தங்கியிருந்தார். இன்று காலை மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். மோட்டுக் கொல்லையில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அவர்கள் மோட்டுக்கொல்லைக்கு வரவழைக்கப்பட்டனர். அங்குள்ள விடுதி வளாகத்தில் தொழிலாளர்கள் சபா நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்டாலின் கலந்துகொண்டு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தரக்கோரி வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து விண்ணமங்கலம், கிரிசமுத்திரம், செங்கிலி குப்பம் கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
இன்று மாலை வீராங்குப்பம், வடச்சேரி, மதனாஞ்சேரி, செங்கிலி குப்பம் ஆம்பூர் டவுனில் பிரசாரம் செய்கிறார்.
நாளை குடியாத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்திசவுக், குடியாத்தம், புதிய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X