என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ‘களிமண் தரையின் ராஜா’ என்று அழைக்கப்பட்ட நடால் பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்று சரித்திரம் படைத்தவர்.
    • 2005-ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு ஓபனில் விளையாடி வந்த நடால் முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

    பாரீஸ்:

    'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், 4-ம் நிலை வீரருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடாலை (ஸ்பெயின்) சந்தித்தார். காயத்தால் நிறைய போட்டிகளை தவற விட்ட நடால் தற்போது உலக தரவரிசையில் 275-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள அவருக்கு இதுவே கடைசி பிரெஞ்சு ஓபனாக இருக்கும் என்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு ஆட்டமாக இது அமைந்தது.

    'களிமண் தரையின் ராஜா' என்று அழைக்கப்பட்ட நடால் பிரெஞ்சு ஓபனை 14 முறை வென்று சரித்திரம் படைத்தவர். ஆனால் இந்த முறை அவரால் முன்பு போல் விளையாட முடியவில்லை. ஓரளவு ஈடுகொடுத்து ஆடினாலும் நேர் செட் தோல்வியை தவிர்க்க முடியாமல் போய் விட்டது. 3 மணி 5 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் அலெக்சாண்டர் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். 2005-ம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு ஓபனில் விளையாடி வந்த நடால் முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் முறையாகும்.

    நடாலின் ஆட்டத்தை நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், நம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக் ஆகியோரில் நேரில் கண்டுகளித்தனர்.

    மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சினெர் (இத்தாலி) 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கிறிஸ்டோபர் எபாங்சை (அமெரிக்கா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் அவர் உள்ளூர் நாயகன் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எதிர்கொள்கிறார். இதே போல் சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-6 (9-7), 6-4, 6-1 என்ற செட்டில் மார்டோன் புசோவிக்சை (ஹங்கேரி) சாய்த்தார்.

    இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட ஒரே இந்தியரான 95-ம் நிலை வீரரான சுமித் நாகலின் சவால் முதல் சுற்றுடன் முடிவுக்கு வந்தது. அவரை கரென் கச்சனோவ் (ரஷியா) 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் வுல்புடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் ரூப்லெவ் முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை டாரோ 7-6 (7-3) என போராடி வென்றார். இதனால் சுதாரித்து கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று முடிவடைந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை லூசியாவுடன் மோதினார்.

    இதில் ஒசாகா முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை லூசியா 6-4 என வென்றார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஒசாகா 7-5 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
    • இதில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.

    இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார். இது இவரது 3வது பட்டம் ஆகும்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடந்த அரையிறுதியில் நார்வேயின் கேஸ்பர் ரூட், இத்தாலியின் பிளாவியோ கோபோலியுடன் மோதினார்.

    இதில் கேஸ்பர் ரூட் 1-6 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட ரூட் 6-1, 7-6 (7-4) என்ற செட்கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் கேஸ்பர் ரூட், செக் வீரர் தாமசுடன் மோதுகிறார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதல் அரையிறுதி சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், செக் நாட்டின் தாமஸ் மசாக்குடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச், 2வது செட்டை கைப்பற்றினார். 3வது செட்டை தாமஸ் வென்றார்.

    இறுதியில், தாமஸ் மசாக் 6-4, 0-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • செர்பியாவின் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுயில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூருடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 6-3, 3-6, 6-4 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

    சுவிட்சர்லாந்து:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹான்மேனுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இது இவரது 1100-வது வெற்றி ஆகும்.

    இதேபோல், நார்வேயின் கேஸ்பர் ரூட், ஆஸ்திரியாவின் செபாஸ்டியனுடன் மோதினார். இதில் ரூட் 4-6, 6-2, 6-2 என்ற செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • உலகத் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருக்கும் வீரர் தனது ஜோடியை தேர்வு செய்ய முடியும்.
    • போபண்ணா முதல் 10 இடத்திற்குள் இருப்பதால் தனது ஜோடியை அவரால் தேர்ந்தெடுக்க முடியும்.

    இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா. ரோகன் போபண்ணா ஆண்கள் இரட்டையர் பிரிவில் உலகத் தலைவரிசையில் 4-வது இடத்தில் உள்ளார்.

    44-வது வயதான இவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார். உலகக்கோப்பை மற்றும் டென்னிஸ் விதிப்படி தரவரிசை 10-க்குள் இருக்கும் வீரர் தன்னுடன் விளையாடும் வீரரை தேர்வு செய்யலாம்.

    அதன்படி இந்திய டென்னிஸ் வீரர்களான என். ஸ்ரீராம் பாலாஜி அல்லது யூகி பாம்ரி ஆகியோரில் ஒருவரை போபண்ணா தனது ஜோடியாக தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

    இரண்டு பேர்களில் ஒருவரை தேர்வு செய்து அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் தெரிவிப்பார். அவர்கள் ஆலோசனை செய்து போபண்ணா பரிந்துரை செய்யும் நபரை தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

    தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

    பாலாஜி காக்லியாரி சேலஞ்சர் போட்டியில் ஜெர்மன் பார்ட்னருடன் இணைந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பாம்ரி முனிச்சில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் பார்ட்னருடன் இணைந்து பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

    பாரிஸ் ஒலிம்பிக்கில் 32 ஜோடிகள் கலந்து கொள்ளும். ஒரு நாடு அதிகபட்சமாக இரண்டு ஜோடியை அனுப்ப முடியும்.

    பிரெஞ்ச் ஓபன் முடிவடைந்த பிறகு, ஜூன் 10-ந்தேதி தரவரிசை முடிவு செய்யப்படும். கடந்த 2012-ம் ஆண்டு ஜோடி சேர்ந்த விளையாடுவதில் சர்ச்சை ஏற்பட்டது. மகேஷ் பூபதி, போபண்ணா ஆகியோர் லியாண்டர் பயேஸ் உடன் இணைந்து விளையாட மறுத்துவிட்டனர். இதனால் விஷ்னு வர்தன் சேர்ந்து விளையாடினார்.

    2018-ல் நடைபெற்ற ஆசிய போட்டியில் சரியான ஜோடியை தரவில்லை என லியாண்டர் பயேஸ், ஆசிய போட்டியில் இருந்து வெளியேறினார். 

    • ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத்தொடரின் உச்சிக்கு ஏறியுள்ளனர்.
    • மக்கள் எங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்துடன் பிரபல டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் - ரஃபேல் நடால் ஆகியோர் இணைந்து ரசிகர்களுடன் உரையாடுவதற்காக புதிய விளம்பர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத்தொடரின் உச்சிக்கு ஏறியுள்ளனர். அந்த இடத்தில் இருந்து இது தொடர்பாக அவர்கள் இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில் பேசிய ரஃபேல் நடால், "இறுதியில் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். போட்டியின் இயக்குநர்கள், போட்டிகளில் பணிபுரிபவர்கள், ஊழியர்கள் டென்னிஸ் வீரர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் என எல்லாரும் ஒரு டென்னிஸ் வீரரை விட நான் யார் என்பதை பற்றிய நல்ல விஷயங்களை சொல்லுங்கள்.ஏனென்றால், டென்னிஸ் வீரராக, பட்டங்கள், சாதனைகள் என்னிடம் உள்ளது. நான் கனவு கண்டதை விட அதிகமாக சாதித்தேன்" என்று பேசியுள்ளார்.

    அந்த வீடியோவில் பேசிய ரோஜர் பெடரர், "நான் ஒரு டென்னிஸ் வீரராக மட்டும் நினைவில் கொள்ளப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டிற்கு என்ன கொடுத்தேன் மற்றும் விளையாட்டிற்கு பின்னால் ஒரு நபராக நினைவுகூரப்பட்டால், அது எனது விம்பிள்டன் வெற்றிகள் அல்லது அது எதுவாக இருந்தாலும், அது குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    நான் ஒரு டென்னிஸ் வீரராக இருப்பதை விட ஆளுமையாக நினைவில் கொள்ள முடிந்தால், அது நன்றாக இருக்கும். நான் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தால், அது எனக்கும் மகிழ்ச்சியைத் தரும். மக்கள் எங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் 3-வது முறையாக ஸ்வியாடெக் இத்தாலி ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் இறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், சிலி வீரர் அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை போராடி வென்றார். இறுதியில் ஸ்வரேவ் 1-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வரேவ் சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதுகிறார்.

    ×