என் மலர்
டென்னிஸ்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
- காலிறுதியில் ஆடவிருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.
- மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
- இதில் லாத்வியா வீராங்கனையை வீழ்த்தி ரிபாகினா அரையிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, லாத்வியாவின் ஜெலேனா ஒஸ்டாபென்கோவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஒஸ்டாபென்கோவை வீழ்த்தி எலினா ரிபாகினா அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா, அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலாவுடன் மோதினார். இதில் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அசரன்கா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இன்று காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் சிட்சிபாஸ், ஜிரி லெஹெகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ், செக் குடியரசு வீரரான ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ரஷியாவின் காரென் கச்சனாவ், அமெரிக்காவின் செபாஸ்டிகோர்டாவுடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6, 6-3 என இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டில் 3-0 என முன்னிலை பெற்றபோது காயம் காரணமாக கோர்டா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து கச்சனாவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் செர்பிய வீரரான ஜோகோவிச் ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று போட்டியில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ரஷியாவின் ஆண்டி ரூப்லெவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் ரூப்லெவ் 6-3, 3-6, 6-3, 4 - 6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
- சானியா மற்றும் போபண்ணா ஜோடி காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியை எதிர் கொள்கிறது.
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் மகோடோ நினோமியா ஜோடியை வீழ்த்தியது.
சானியா மற்றும் போபண்ணா ஜோடி நாளை நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியான ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
- 4-வது வரிசையில் இருக்கும் கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
- 24 வயதான ஷபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதிக்கு நுழைந்து உள்ளார்.
மெலபோர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அரினா ஷபலென்கா (பெலாரஸ்) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் பெலின்டா பென்சிக்கை (சுவிட்சர்லாந்து) எதிர் கொண்டார்.
இதில் ஷபலென்கா 7-5, 6-2, என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 27 நிமிட நேரம் தேவைப்பட்டது.
24 வயதான ஷபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதிக்கு நுழைந்து உள்ளார். இதற்கு முன்பு கடந்த ஆண்டும், 2021-ம் ஆண்டும் 4-வது சுற்று வரை வந்ததே சிறந்த நிலையாக இருந்தது. ஷபலென்கா கால் இறுதியில் குரோஷியாவை சேர்ந்த டோனாவை சந்திக்கிறார்.
64-வது வரிசையில் உள்ள டோனா 4-வது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசுவை சேர்ந்த லின்டாவை 6-2, 1-6, 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
30-வது வரிசையில் உள்ள கரோலினா பினிஸ்கோவா (செக்குடியரசு) 4-வது சுற்று ஆட்டத்தில் சீனாவை சேர்ந்த சூயி ஷாங்கை எதிர் கொண்டார். இதில் பிளிஸ்கோவா 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
அவர் கால் இறுதியில் போலந்தை மக்டா லினிட்ன சந்திக்கிறார்.
4-வது வரிசையில் இருக்கும் கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். மக்டா லினிட் 7-6 (7-3), 6-4 என்ற கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார். லினிட் முதல் தடவையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்ற கால் இறுதி ஆட்டங்களில் ரைபகினா (ரஷியா)-ஆஸ்டா பென்கோ (லாத்வியி), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா)-விக்டோரியா அசரென்கா (பெலராஸ்) மோதுகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கரண் கச்னோவ் (ரஷியா), செபஸ்டியன் கோர்டா (அமெரிக்கா), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஜிலி லபேகா (செக்குடியரசு) ஆகியோர் கால் இறுதிகு தகுதி பெற்றுள்ளனர்.
- மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ரைபகினா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.
- அவரது தற்காப்பு யுக்தியும் சிறப்பாக இருக்கும். அதனால் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த 'நம்பர் ஒன்' வீராங்கனையும், கடந்த ஆண்டில் இரு கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 25-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான எலினா ரைபகினாவுடன் (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்தினார்.
மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ரைபகினா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் தொடக்கத்தில் 3-0 என்று முன்னிலை கண்ட ஸ்வியாடெக் அதன் பிறகு கோட்டை விட்டார். முடிவில் ரைபகினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 89 நிமிடங்களில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக கால்இறுதியில் கால்பதித்தார்.

இகா ஸ்வியாடெக்
தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள வீராங்கனையை ரைபகினா தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். 23 வயதான ரைபகினா கூறுகையில், 'நம்பர் ஒன் வீராங்கனைக்கு எதிராக விளையாடும் போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை. அவர் பந்தை வேகமாக ஓடி திருப்பி அடிக்கக்கூடியர்.
அவரது தற்காப்பு யுக்தியும் சிறப்பாக இருக்கும். அதனால் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது. அதனால் தொடக்கம் முதலே அதிரடியாக மட்டையை சுழற்றினேன். இந்த முயற்சிக்கு உண்மையிலேயே பலன் கிடைத்தது' என்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 4-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
- இதில் கிரீஸ் வீரரான சிட்சிபாஸ் இத்தாலி வீரரை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.
இதில் சிட்சிபாஸ் 6-4, 6-4 என முதல் இரு செட்களை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக சின்னர் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை சிட்சிபாஸ் 6-3 கைப்பற்றினார்.
இறுதியில், சிட்சிபாஸ் 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா, போலந்தின் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார். இதில் கோர்டா 3-6, 6-3, 6-2, 1-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இகா ஸ்வியாடெக், எலெனாவுடன் மோதினார்.
- இதில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் இன்று நடைபெற்றது.
இதில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் எலெனா ரிபாகினா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இகாவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- டி-மினார், 7க்கு 6, 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றி கண்டார்.
- நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கு உள்ளூர் வீரர் அலெக்ஸ் டி-மினார் முன்னேறி உள்ளார்.
ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பொன்ஸி உடன் மோதிய டி-மினார், 7க்கு 6, 6க்கு 2, 6க்கு 1 என்ற செட் கணக்கில் சுலபமாக வெற்றி கண்டார்.
இந்த வெற்றி மூலம் நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்ற டி-மினார், நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
- அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் சானியா மிர்சா தோல்வி.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடரை சானியா மிர்சா தோல்வியுடன் நிறைவு செய்தார்.
அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் சானியா தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபனில் ஸ்பெயின் வீரரிடம் ஆண்டி முர்ரே தோல்வி அடைந்தார்.
- முன்னணி வீரர்களான நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட், மெத்வதேவும் வெளியேறி உள்ளனர்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே, ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாவ்டிஸ்டா அகுட்டுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய பாவ்டிஸ்டா 6-1, 6-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரர்களான ரபேல் நடால், ஸ்வரேவ், கேஸ்பர் ரூட், மெத்வதேவ் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






