என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபர் அசாம், ரிஸ்வான் போராட்டம் வீணானது - இன்னிங்ஸ் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா
Byமாலை மலர்24 Nov 2019 8:17 AM GMT (Updated: 24 Nov 2019 8:17 AM GMT)
பிரிஸ்பேன் டெஸ்டில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வானின் போராட்டம் வீணானது. ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சால் ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் வெற்றி பெற்றது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 240 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 76 ரன் எடுத்தார். கேப்டன் அசார் அலி 39 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும், ஷான் மசூத் 27 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ் களம் இறங்கினர்.
ஜோ பேர்ன்ஸ் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய வார்னர் 154 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடி சதமடித்த லாபஸ்சாக்னே 185 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மேத்யூ வேட் அரை சதமடித்து 60 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 340 ரன்கள் முன்னிலை பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் யாசிஎ ஷா 4 விக்கெட்டும், ஷஹின் அப்ரிதி, ஹரிஸ் சோஹாலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சிக்கி 94 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.
அப்போது களமிறங்கிய பாபர் அசாம், மொகமது ரிஸ்வான் இருவரும் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தனர்.
பொறுப்புடன் ஆடி சதமடித்த பாபர் அசாம் 105 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரிஸ்வானும் 95 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆடிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் அணி 84.2 ஓவரில் 335 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்னில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட், மிச்செல் ஸ்டார்க் 3 விக்கெட், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X