என் மலர்
விளையாட்டு
இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பென்:
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 329 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது.
கடந்த 1988-ல் இருந்து இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.
இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றியை பலரும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் இன்னிங்ஸ் ஹெட்டிங்லியில் பென்ஸ்டோக்ஸ் பேட்டிங்கை எனக்கு நினைவு படுத்தியது. அவர் (பண்ட்) வந்தார். அவருக்கு பயமில்லை. இதற்காவே அவர் பாராட்டுக்குரியவர்.
சுக்மன் கில்லும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்திய அணியின் இளம்பந்துவீச்சாளர்கள் அனைத்து நேரத்திலும் எங்களை (ஆஸ்திரேலியாவை) பதற்றத்திலேயே வைத்திருந்தனர்.
என்றார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 329 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது.
கடந்த 1988-ல் இருந்து இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.
இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றியை பலரும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியதாவது:-
இது மிகச்சிறந்த டெஸ்ட் தொடர். இதில் வெற்றியாளரும் உண்டு தோல்வியாளரும் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட் வெற்றிபெற்றுள்ளது. இந்த தோல்வி எங்களை மிகப்பெரிய அளவில் காயப்படுத்தப்போகிறது.
அனைத்து பாராட்டுகளுக்கும் இந்தியா தகுதியானது. அவர்கள் சிறப்பாக விளையாடினர். இந்த தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய பாடங்களை கற்போம்.
ரிஷப் பண்ட் இன்னிங்ஸ் ஹெட்டிங்லியில் பென்ஸ்டோக்ஸ் பேட்டிங்கை எனக்கு நினைவு படுத்தியது. அவர் (பண்ட்) வந்தார். அவருக்கு பயமில்லை. இதற்காவே அவர் பாராட்டுக்குரியவர்.
சுக்மன் கில்லும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்திய அணியின் இளம்பந்துவீச்சாளர்கள் அனைத்து நேரத்திலும் எங்களை (ஆஸ்திரேலியாவை) பதற்றத்திலேயே வைத்திருந்தனர்.
இந்திய வீரர்கள் முழுமையான வாழ்த்துக்கு தகுதியானவர்கள். எதையும் நமக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்பது போல் சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தியர்களை ஒருபோதும் எளிதாக குறைத்து மதிப்பிடாதீர்கள். 1.5 பில்லியன் மக்கள் கொண்ட நாட்டில் சீனியர் அணியில் நீங்கள் (இந்தியர்கள்) விளையாடுகிறீர்கள். எனவே, நீங்கள் கடுமையாக
உழைக்க வேண்டும். இந்தியாவை என்னால் பாரட்டாமல் இருக்க முடியவில்லை.என்றார்.
ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 2-வது முறையாக இந்திய அணி தொடரை வென்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது.
கடந்த 1988-ல் இருந்து இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.
இந்த அசத்தலான வெற்றியை பலரும் பாராட்டிவரும் நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.
அதில் ‘‘ஆஸ்திரேலியாவின் இந்திய அணியின் வெற்றி குறித்து நாம் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர்களின் அயராத உழைப்பும், பேரார்வமும் போட்டி முழுவதும் வெளிப்பட்டது. வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது. எதிர்காலத்திலும் அவர்களுடைய முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்’’ என்று வாழ்த்தியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தோல்வியையே சந்திக்காத சிங்கமாக ரஹானே வளம் வருகிறார். ஐந்து போட்டியில் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். ரஹானே துணைக் கேப்டனாக உள்ளார். அடிலெய்டு டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தபின்னர், விராட் கோலி நாடு திரும்பினார். இதனால் ரஹானே கேப்டனாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
அடிலெய்டு டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் கேப்டன் பதவியை வாங்கிய ரஹானே என்ன செய்யப்போகிறார்? என அனைவரும் சந்தேகத்துடன் பார்த்தனர்.
ஆனால் ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் ரஹானே ஆஸ்திரேலியா அணியையும், வங்காளதேச அணியையும் தோற்கடித்து இருந்தார். அந்த தன்னம்பிக்கையுடன் களம் இறங்கினார்.
மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இன்றுடன் முடிவடைந்த பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் வென்றது.
இதன்மூலம் ஐந்து போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரஹானே 4-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளார். ஆகவே, கேப்டன் பொறுப்பில் தோல்வியை சந்திக்காத சிங்கமாக வலம் வருகிறார் ரஹானே.
பிரிஸ்பேன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என கைப்பற்றிய இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. முன்னணி வீரர்கள் இல்லாமல் தொடரை வென்றது மிகச்சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. மேலும், பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குக்காக இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தெரிவித்ததுள்ளனர். இது இந்திய கிரிக்கெட்டுக்கான சிறப்பு தருணங்கள் எனவும், எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் - சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணி கேப்டன் ரஹானே பெற்றுக் கொண்டார். அதை பெற்றுக்கொண்ட ரஹானே டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி டி நடராஜன் கோப்பையை ஏந்தி நிற்க இந்திய அணி வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்தத் தொடரில் அறிமுகமாகி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய டி நடராஜனிடம் ரஹானே கோப்பையை ஏந்தச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.
ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89) ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் சேர்த்தது.
33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரிஸ்பேன் மைதானத்தில் 328 ரன்கள் மிகப்பெரிய இலக்கு என்பது மிகக்கடினம் என்ற நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஆட்டம் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார்.
அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தாலும், புஜாராவின் நிதான ஆட்டத்தாலும் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையிருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது.
அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அப்போது இந்தியாவின் வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட் இருந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது.
ரிஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.
புஜாரா ஆட்டமிழந்த பிறகு மயங்க் அகர்வால் களம் இறங்கினார். ஒருபக்கம் அடித்தும் விளையாட வேண்டும். அதேசமயம் விக்கெட்டும் இழக்கக் கூடாது என்ற நிலை ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்டது.
மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற ரிஷப் பண்ட்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 8 ஓவரில் 50 ரன்கள் தேவைப்பட்டது. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார்.
இதனால் கடைசி 7 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 7-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது.
6-வது ஓவரில் 9 ரன்கள் கிடைத்தது. கடைசி 5 ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். என்றாலும் அவர் 29 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ரன்கள் கிடைத்தது.
கடைசி 4-வது ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தில் ஷர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிஷப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரிஷப் பண்ட் 89 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பிரிஸ்பேன் டெஸ்ட் 2-வது இன்னிங்சில் 1 ரன் எடுத்தபோது குறைந்த இன்னிங்சில் 1000 ரன்னைத் தொட்ட முதல் இந்திய விக்கெட் கீப்பர் சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் பிரிஸ்பேன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 1 ரன் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1000 ரன்களை பதிவு செய்தார்.
ரிஷப் பண்ட் 27 இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய அணி விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் எம்எஸ் டோனி 32 இன்னிங்சில் இந்த சாதனையை எட்டியிருந்தார். தற்போது ரிஷப் பண்ட் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ஷுப்மான் கில் சிறப்பான விளையாடி 91 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணிக்கு கடைசி செசனில் 37 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரிஸ்பேன் டெஸ்ட் பரபரப்பாக செல்கிறது.
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வெற்றிக்கு 428 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்று காலை மதிய உணவு இடைவேளைக்கு முன் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 64 ரன்னுடனும், புஜாரா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஷுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்திருந்ததது.
அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால் 22 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 24 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கடைசி செசனில் இந்தியாவின் வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட் உள்ளது. புஜாரா- ரிஷப் பண்ட் ஜோடி வெற்றிக்காக போராடும். இந்த ஜோடி பிரிந்தால் ஆட்டம் சூடுபிடிக்கும். கடைசி செசன் பரபரப்பாக இருக்கும்.
பிரிஸ்பேன் கடைசி நாள் ஆட்டத்தில் ஷுப்மான் கில் அரைசதம் அடிக்க, ரோகித் சர்மா ஏமாற்றம் அளிக்க இந்தியா உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் சேர்த்தது.
33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரிஸ்பேன் மைதானத்தில் 328 ரன்கள் மிகப்பெரிய இழக்கு என்பது மிகக்கடினம் என்ற நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஆட்டம் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார்.
அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தாலும், புஜாராவின் நிதான ஆட்டத்தாலும் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் தேவையுள்ளது. தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டால் அதன்பின் வெற்றிக்காக போராட வாய்ப்புள்ளது.
டோயோட்டா தாய்லாந்து ஓபன் போட்டியில் முந்தைய தோல்வியை மறந்து இந்திய வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் வாகை சூடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பாங்காக்:
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஆண்டுக்கான புதிய சீசன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தாய்லாந்து போட்டிகளுடன் தொடங்கியுள்ளது. இதில் கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் 2-வது சுற்றை தாண்டவில்லை. அடுத்ததாக மொத்தம் ரூ.7 கோடியே 32 லட்சம் பரிசுத்தொகைக்கான டோயோட்டா தாய்லாந்து ஓபன் போட்டி அதே பாங்காக் நகரில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. முந்தைய தோல்வியை மறந்து இந்திய வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் வாகை சூடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் உலக சாம்பியன் பி.வி.சிந்து தனது முதலாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை புசனனை சந்திக்கிறார்.
கடந்த போட்டியில் கொரோனா பரிசோதனை குழப்பத்தில் சிக்கி 2-வது சுற்றுடன் வெளியேறிய மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால், உள்ளூர் மங்கையும், முன்னாள் உலக சாம்பியனுமான ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த 17 ஆட்டங்களில் 12-ல் சாய்னா வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் தற்போது தரவரிசையில் சாய்னாவை விட 15 இடங்கள் அதிகமாக 5-வது இடத்தில் ராட்சனோக் இருப்பதால் கடும் சவால் அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆண்கள் ஒற்றையரில் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனாய் காஷ்யப், சவுரப் வர்மா, சமீர் வர்மா ஆகிய இந்திய வீரர்கள் களம் காணுகிறார்கள்.
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஆண்டுக்கான புதிய சீசன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தாய்லாந்து போட்டிகளுடன் தொடங்கியுள்ளது. இதில் கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் 2-வது சுற்றை தாண்டவில்லை. அடுத்ததாக மொத்தம் ரூ.7 கோடியே 32 லட்சம் பரிசுத்தொகைக்கான டோயோட்டா தாய்லாந்து ஓபன் போட்டி அதே பாங்காக் நகரில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. முந்தைய தோல்வியை மறந்து இந்திய வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் வாகை சூடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் உலக சாம்பியன் பி.வி.சிந்து தனது முதலாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை புசனனை சந்திக்கிறார்.
கடந்த போட்டியில் கொரோனா பரிசோதனை குழப்பத்தில் சிக்கி 2-வது சுற்றுடன் வெளியேறிய மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால், உள்ளூர் மங்கையும், முன்னாள் உலக சாம்பியனுமான ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த 17 ஆட்டங்களில் 12-ல் சாய்னா வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் தற்போது தரவரிசையில் சாய்னாவை விட 15 இடங்கள் அதிகமாக 5-வது இடத்தில் ராட்சனோக் இருப்பதால் கடும் சவால் அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆண்கள் ஒற்றையரில் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், பிரனாய் காஷ்யப், சவுரப் வர்மா, சமீர் வர்மா ஆகிய இந்திய வீரர்கள் களம் காணுகிறார்கள்.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 63-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்கால் அணியின் ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.
கோவா:
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 31-வது நிமிடத்தில் பெங்கால் அணி வீரர் அஜய் சேத்ரி ‘பவுல்’ செய்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் பெங்கால் அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.
ஆனாலும் அந்த அணியின் கோல் கீப்பர் தேவ்ஜித் முஜூம்தர் திறம்பட செயல்பட்டு சென்னை அணியின் கோல் முயற்சிகளை முறியடித்தார். சென்னை தரப்பில் 6 முறை இலக்கை நோக்கி பந்தை அடித்த போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 3 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று 15 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 31-வது நிமிடத்தில் பெங்கால் அணி வீரர் அஜய் சேத்ரி ‘பவுல்’ செய்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் பெங்கால் அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.
ஆனாலும் அந்த அணியின் கோல் கீப்பர் தேவ்ஜித் முஜூம்தர் திறம்பட செயல்பட்டு சென்னை அணியின் கோல் முயற்சிகளை முறியடித்தார். சென்னை தரப்பில் 6 முறை இலக்கை நோக்கி பந்தை அடித்த போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 3 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று 15 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன
இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் நோ-பால் வீசியதை ஸ்பாட் பிக்சிங்குடன் தொடர்புபடுத்தி ஆஸி.முன்னாள் வீரர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.
இந்திய அணிக்குள் நெட் பந்து வீச்சாளராக இடம் பெற்ற நடராஜன் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர் வரை தனது தனித்திறமையான பந்துவீச்சால் முன்னேறியது குறித்து ஐசிசி, பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளன.
பிரிஸ்பேனில் தற்போது இந்தியா, ஆஸி. அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டுமே இருக்கும் நிலையில் வெற்றி யாருக்கு எனப் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் நடராஜன் 6 நோ-பால்களை வீசினார். 2 நோபால்களை இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் வீசினார்.
8 நோ-பால்களில் ஐந்து முறை அவர் வீசிய ஓவரின் முதல் பந்து நோ-பாலாக அமைந்தது. இதைப்பார்த்த வர்ணனையாளர் பிரிவில் இருந்த ஷேன் வார்னே, டி நடராஜன் வீசிய நோ-பால்கள் சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.
வர்ணனையாளர் அறையில் இருந்த பேசுகையில், “நடராஜன் பந்து வீசும்போது என் கண்களுக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது. நடராஜன் 8 நோ-பால்களை வீசியுள்ளார். அனைத்து நோ-பால்களுமே மிகப்பெரியவை. அதில் 5 நோ-பால்கள் ஓவரின் முதல் பந்திலேயே வீசப்பட்டுள்ளது. நாமெல்லாம் நோ-பால் வீசியிருக்கிறோம். ஆனால், ஓவரின் முதல் பந்திலேயே 5 நோ-பால்கள் வீசியதுதான் வித்தியாசமாக, சுவாரஸ்யமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
நடரஜான் நோ-பால் வீசியது இயல்பான சம்பவம். அதிலும் முதன்முதலாக டெஸ்ட் போட்டிக்குள் அறிமுகமாகும் வீரர் பதற்றத்தில் நோ-பால் வீசுவது இயல்பு. ஆனால், இதை மறைமுகமாக ஸ்பாட் பிக்சிங்குடன் தொடர்புபடுத்தி வார்னே சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.
மார்க் வாக், ஸ்டீவ் வாக் ஆகியோருடன் விளையாடும்போது, ஸ்பாட் பிக்சிங் புகார்களைச் சந்திக்கவில்லையா. இலங்கையில் சிங்கர் கோப்பை நடந்தபோது, புக்கிகளுக்கு ஆடுகளத்தின் தன்மை, காலநிலை போன்ற தகவல்களை வழங்கி மார்க் வாக், வார்னே சிக்கவில்லையா. அப்போது வார்னே மீது எழுந்த புகாருக்கு இதுவரை விளக்கம் இல்லை.
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்தில் உப்புக் காகிதத்தைத் தேய்த்து ஓராண்டு தடை பிறப்பிக்கப்பட்டபோது, தங்கள் நாட்டு வீரர்களின் ஒழுக்கத்தைப் பற்றி வார்னே வாய் திறக்கவில்லை.
ஆனால், ஓராண்டுக்குப் பின் ஸ்மித்தை அணியில் சேர்க்க மட்டும் வார்னே பரிந்துரைத்தார்.
ஆனால், நடராஜன் போன்ற எளிமையான குடும்பத்தில், கடினமான குடும்பப் பின்னணியில் வளர்ந்து, இந்திய அணியில் இடம் பெற்று சாதிக்கும் தறுவாயில் ஆஸ்திரேலிய வீரர் வார்னே குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
முத்தையா முரளிதரன், சுனில் நரைன் போன்ற பல ஆசிய வீரர்கள் சாதிக்கும்போது ஆஸ்திரேலிய நடுவர்களும், வீரர்களும் இதுபோன்ற வீண் குற்றச்சாட்டுகளையும், சேற்றை வாரி இறைப்பதும் தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு டுவிட்டர்வாசிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
வர்ணனையாளர் ஹர்ஸா போக்லே-வுக்கு ரீட்வீட் செய்து ரசிகர் ஒருவர், “ஹர்ஸா தயவுசெய்து வார்னேவுக்குப் பதிலடி கொடுங்கள். நடராஜன் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சந்தேகத்தைக் கிளப்புகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
“நடராஜனை ஸ்பாட் பிக்சிங் புகாரில் சேர்க்கும்போதே, உங்களின் தரம் என்னவென்று தெரிந்துவிட்டது” என ரசிகர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நடராஜன் குறித்து தரக்குறைவான குற்றச்சாட்டு கூறிய மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.






