என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.
    சென்னை:

    இந்தியா -இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்து ரன்மழை பொழிந்த இங்கிலாந்து அணி 2-வது நாள் 8 விக்கெட்டுக்கு 555 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் (218 ரன்) அடித்தார்.

    இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து மொத்தம் 578 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. டாம் பெஸ் 34 ரன்னிலும், ஆண்டர்சன் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜாக் லீச் 14 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா (6 ரன்) வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் சிக்கினார். நீண்ட நேரம் நிலைக்காத சுப்மான் கில்லும் (29 ரன், 28 பந்து, 5 பவுண்டரி) ஆர்ச்சரின் பந்துவீச்சில் வீழ்ந்தார். தொடக்க ஜோடியின் விக்கெட் இவ்வளவு எளிதில் கிடைக்கும் என்று இங்கிலாந்து வீரர்களே எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

    இதன் பின்னர் புஜாராவும், கேப்டன் விராட்கோலியும் கைகோர்த்தனர். எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி (11 ரன், 48 பந்து) ஏமாற்றம் அளித்தார். அவர் டாம் பெஸ்சின் சுழலில் பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது அருகில் நின்ற ஆலி போப்பிடம் கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே (1 ரன்) டாம் பெஸ்சின் ஓவரில் சில அடி இறங்கி வந்து பந்தை ‘கவர்’ திசையில் விரட்டிய போது ஜோ ரூட் பாய்ந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து அசத்தினார். அப்போது இந்தியா 73 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது. ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்ட போதிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக கணித்து செயல்படாமல் சொதப்பி விட்டனர்.

    இந்த நெருக்கடிக்கு மத்தியில் புஜாராவுடன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். புஜாரா நிதானத்தை காட்ட, பண்ட் கவலைப்படாமல் பட்டாசு போல் வெடித்தார். ஜாக் லீச்சின் சுழலில் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து பறக்க விட்டார். தொடர்ந்து அவரது பந்து வீச்சை துவம்சம் செய்தார். எந்த பவுலரையும் பண்ட் விட்டுவைக்கவில்லை. அற்புதமாக ஆடிய இந்த ஜோடி புஜாராவின் துரதிர்ஷ்டவசமான ஒரு ஷாட்டால் பிரிய நேர்ந்தது.

    அணியின் ஸ்கோர் 192 ரன்களாக உயர்ந்த போது புஜாரா (73 ரன், 143 பந்து, 11 பவுண்டரி) டாம் பெஸ்சின் பந்து வீச்சில் வித்தியாசமான முறையில் ஆட்டம் இழந்தார். அதாவது அவர் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை பவுண்டரி நோக்கி ஓங்கி அடித்த போது பந்து அருகில் நின்ற பீல்டர் ஆலி போப்பின் தோள்பட்டையில் பட்டு தெறித்தது. அதை ரோரி பர்ன்ஸ் கேட்ச் செய்தார். சிறிது நேரத்தில் ரிஷாப் பண்ட் (91 ரன், 88 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) டாம் பெஸ்சின் பந்து வீச்சில் சிக்சருக்கு முயற்சித்த போது கேட்ச் ஆகிப்போனார். இதனால் இந்திய அணியின் நிலைமை பரிதாபமானது.

    இதன் பின்னர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும், அஸ்வினும் ஜோடி சேர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்தனர்.

    வாஷிங்டன் சுந்தரும், அஷ்வினும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய 321 ரன்கள் பின்தங்கியது.

    இந்நிலையில் இன்று 4- நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்தார். அஸ்வின் அவருக்கு உறுதுணையாக விளையாடினார். ஆனால் 31 ரன்களில் அஸ்வின் அவுட்டானது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதன் பின்பு வந்த ஷபாஸ் நதீம், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் அற்புதமாக விளையாடிய இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். இந்தியா 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

    241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாட உள்ளது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 91, வாஷிங்டன் சுந்தர் 85* புஜாரா 73 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 4, வீச், ஆர்ச்சர், ஆண்டர்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா பாலோ ஆன் முடிவை தவிர்க்க 41 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என புஜாரா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் வெளியேறினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

    இந்நிலையில், ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என புஜாரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் புஜாரா கூறியதாவது: 

    அதிரடி ஆட்டம் ரிஷப் பண்டின் இயல்பான ஆட்டம். அதனால் அவரை நிறைய கட்டுப்படுத்த முடியாது. அவரால், பெரிதளவில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முடியாது. ஏனென்றால், அவர் விரைவில் ஆட்டமிழந்து விடுவார். ஆனால், சில தருணங்களில் ஷாட்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும். 

    எந்த ஷாட்களை விளையாட வேண்டும், எந்த ஷாட்களை விளையாடக் கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரிஷப் பண்ட் எப்போது நீண்ட நேரம் பேட் செய்தாலும் பெரிய ரன்களை அடித்துவிட்டே ஆட்டமிழக்கிறார். எனவே அவர் அதை நிச்சயம் உணருவார் என குறிப்பிட்டார்.
    ராவல்பிண்டி டெஸ்டில் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ள நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 243 ரன்கள் தேவைப்படுகிறது.
    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 77 ரன்னில் அவுட்டானார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஃபவாத் அலாம் 45 ரன்னில் ரன்அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் பஹீம் அஷ்ரப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பஹீம் அஷ்ரப் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட்டும், கேஷவ் மகாராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தென்ஆப்பிரிக்காவில் பவுமா 44 ரன்னும், முல்டர் 33 ரன்னும், மாக்ரம் 32 ரன்னும், டி காக் 29 ரன்னும் எடுத்தனர்.
    இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில்  ஹசன் அலி 5 விக்கெட்டுகள் வீசி அசத்தினார்.

    71 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அசார் அலி 33 ரன்னும், பஹிம் அஷ்ரப் 29 ரன்னும் எடுத்தனர். பொறுப்புடன் ஆடிய மொகமது ரிஸ்வான் சதமடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நௌமான் அலி 45 ரன்கள் எடுத்து ரிஸ்வானுக்கு உதவியாக இருந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 298 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
     
    தென்ஆப்பிரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டே 5 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 17 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் அரை சதமடித்தார்.

    நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிராம் 59 ரன்னுடனும், வான் டெர் டுசன் 48 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    கடைசி நாளான இன்று கைவசம் 9 விக்கெட் உள்ள நிலையில், வெற்றிக்கு தேவையான 243 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா ஆடுகிறார்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, மிஹாலா புஜர்னிஸ்குவுடன் (ருமேனியா) ஜோடி சேர்ந்து களம் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் ஓபன் எரா (1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 

    நிருபமா மன்கட், நிருபமா வைத்தியநாதன், சானியா மிர்சா, ஷிகா ஓபராய் ஆகிய இந்திய வீராங்கனைகள் ஏற்கனவே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடியிருக்கிறார்கள்.
    டெஸ்ட் வரலாற்றிலேயே 4-வது இன்னிங்சில் அதிக ரன்களை சேசிங் செய்து 5-வது முறையாக வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
    வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 

    முதல் டெஸ்டில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 430 மற்றும் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டு இழப்புக்கு 223 ரன்களும் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்தது.  2-வது இன்னிங்சில் 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. 

    போட்டியின் இறுதி நாளில் அந்த அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். வெஸ்ட் இண்டீசில் அறிமுக வீரராக விளையாடிய கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவி புரிந்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

    இந்நிலையில், டெஸ்ட் வரலாற்றில் 4-வது இன்னிங்சில் அதிக ரன்களை சேசிங் செய்து 5-வது முறையாக வெற்றி பெற்றதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    இதுதொடர்பாக, ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கைல் மேயர்சின் 210 நாட் அவுட், அந்த அணி வங்காளதேச அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வழிகாட்டியுள்ளது. டெஸ்ட் வரலாற்றில் 5-வது முறையாக 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் வெற்றிகரமுடன் சேசிங் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    சென்னை சேப்பாக்கம் டெஸ்டில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க புஜாரா, ரிஷப் பண்ட் அரைசதம் அடிக்க இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 578 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 218 ரன்களும், டாம் சிப்லி 87 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஷ்வின், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷுப்மான் கில் 29 ரன்கள் எடுத்த நிலையிலும் ஜாஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த புஜாரா ஒரு பக்கம் சிறப்பாக விளையாடினார். ஆனால் விராட் கோலி 11 ரன்னிலும், ரஹானே 1 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 73 ரன்னுக்குள் 4 விக்கெட் இழந்தது.

    5-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    புஜாரா 106 பந்திலும், ரிஷப் பண்ட் 40 பந்திலும் அரைசதம் அடித்தனர். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்தியாவின் ஸ்கோர் 192 ரன்னாக இருக்கும்போது புஜாரா 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விளையாடிய ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 88 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்து.

    ரிஷப் பண்ட்

    7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர் உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    இந்தியா இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்துள்ளது. அஷ்வின் 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 321 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்றும் 122 ரன்கள் அடித்தால் பாலோ-ஆன்-ஐ தவிர்க்கும். இங்கிலாந்து அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் 395 ரன் வெற்றி இலக்கை எட்டி அசத்தல் வெற்றி பெற்றது.
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 259 ரன்களில் சுருண்டது.

    171 ரன்கள் முன்னிலையுடன் வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் மொமினுல் ஹக் சதமும், லித்தோன் தாஸ் அரைசதமும் அடிக்க வங்காளதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    ஒட்டுமொத்தமாக வங்காளதேசம் 394 ரன்கள் முன்னிலை பெற, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் கிரேக் பிராத்வைட் (20), ஜான் கேம்ப்பெல் (23) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 4-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.

    கடைசி நாளில் அந்த அணிக்கு 285 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஏழு விக்கெட் இருந்தது. அறிமுக வீரர் கைல் மேயர்ஸ் 37 ரன்களுடனும், போனர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கையில் மேயர்ஸ் சதம் அடிக்க, போனர் 86 ரன்னில் ஆட்டமிழந்தனர். போனர் ஆட்டமிழக்கும்போதுது வெஸ்ட் இண்டீஸ் 275 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 6 விக்கெட் இருந்த நிலையில், 115 ரன்கள் தேவைப்பட்டது.

    அடுத்து வந்த பிளாக்வுட் 9 ரன்னிலும், ஜோஸ்வா டி சில்வா 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிளாக்வுட் ஆட்டமிழக்கும்போது, வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஜோஸ்வா  டி சில்வாவை வைத்துக் கொண்டு கைல் மேயர்ஸ் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    டி சில்வா ஆட்டமிழக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் 392 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த கேமர் ரூச் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    கைல் மேயர்ஸ் 210 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 395 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இளம் வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
    சென்னை சேப்பாக்கம் டெஸ்டில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, புஜாரா அரைசதம் அடிக்க ரிஷப் பண்ட் போராடி வருகிறார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 578 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 218 ரன்களும், டாம் சிப்லி 87 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஷ்வின், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா 6 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷுப்மான் கில் 29 ரன்கள் எடுத்த நிலையிலும் ஜாஃப்ரா ஆர்ச்சர் பந்தில் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த புஜாரா ஒரு பக்கம் சிறப்பாக விளையாடினார். ஆனால் விராட் கோலி 11 ரன்னிலும், ரஹானே 1 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 73 ரன்னுக்குள் 4 விக்கெட் இழந்தது.

    5-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
    அரைசதம் அடித்த புஜாரா,  ரிஷப் பண்ட்

    புஜாரா 106 பந்திலும், ரிஷப் பண்ட் 40 பந்திலும் அரைசதம் அடித்தனர். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்தியாவின் ஸ்கோர் 192 ரன்னாக இருக்கும்போது புஜாரா 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விளையாடிய ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி சென்றார். ஆனால் 88 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணி சார்பில் டாம் பெஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் பாபர் அசாம் (77), பஹீம் அஷ்ரப் (78 அவுட் இல்லை) ஆகியோரின் அரைசதங்களால் 272 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியின் (5 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 201 ரன்னில் சுருண்டது.

    இதனால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தென்ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    தொடக்க வீரர் இம்ரான் பட் (0), அபித் அலி (13), அசார் அலி (33), பாபர் அசாம் (8), ஃபவாத் அலாம் (12), பஹீம் (29) முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களே எடுத்திருந்தது. முகமது ரிஸ்வான் 28 ரன்களுடனும், ஹசன் அலி ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் 200 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்தது.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹசன் அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாசிர் ஷா 23 ரன்னில் வெளியேறினார்.

    ஆனால் முகமது ரிஸ்வான் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நௌமான் அலி 45 ரன்கள் எடுத்து ரிஸ்வானுக்கு உதவியாக இருக்க பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 298 ரன்கள் குவித்தது. ஜார்ஜ் லிண்டே 5 விக்கெட் வீழ்த்தினார்.

    முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 370 ரன்கள் இலக்கா நிர்ணயித்துள்ளது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பட்டம் வென்றால் நடால், செரீனா புதிய சாதனை படைப்பார்கள்.
    மெல்போர்ன்:

    ஆண்டுதோறும் 4 வகையிலான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வழக்கமாக ஜனவரி மாதத்தில் நடைபெறும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 3 வாரங்கள் தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டி மெல்போர்னில் நாளை தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி அனைத்து வீரர், வீராங்கனைகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), 3-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோர் இடையே பட்டம் வெல்வதில் கடும் போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய ஓபனை அதிக முறை ருசித்தவரான (8 முறை) ஜோகோவிச் முதலாவது சுற்றில் ஜெர்மி சார்டியை (பிரான்ஸ்) சந்திக்கிறார். கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் அவர் கால்இறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவையும் (ஜெர்மனி), அரைஇறுதியில் டொமினிக் திம்மையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

    நடால் பட்டத்தை வசப்படுத்தினால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் (20 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை தகர்த்து விடுவார். ஆனால் முதுகுவலியால் அவதிப்படும் நடால் முழு உத்வேகத்துடன் ஆடுவாரா? என்பது சந்தேகம் தான். முதல் சுற்றில் அவர் லாஸ்லோ ஜெரேவை (செர்பியா) சந்திக்கிறார்.

    அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம் முதல் சவாலை மிகைல் குகுகிஷ்கினுடன் (கஜகஸ்தான்) தொடங்குகிறார். மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), பெரேட்டினி (இத்தாலி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) ஆகிய முன்னணி வீரர்களும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். ஒற்றையர் பிரிவில் களம் காணும் ஒரே இந்தியரான வைல்டு கார்டு மூலம் பிரதான சுற்று வாய்ப்பை பெற்றுள்ள 139-ம் நிலை வீரரான சுமித் நாகல் முதல் சுற்றில் தரவரிசையில் 72-வது இடத்தில் உள்ள ரிக்கார்டஸ் பெரன்கிஸ்சை (லிதுவேனியா) எதிர்கொள்கிறார். சுமித் நாகலை பொறுத்தவரை முதல்தடையை தாண்டினாலே பெரிய விஷயமாக இருக்கும். காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருக்கும் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் இந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடவில்லை.

    பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் மகுடம் சூட பல நட்சத்திரங்கள் கோதாவில் குதிக்கிறார்கள். இதில் நடப்பு சாம்பியன் சோபியா கெனின் (அமெரிக்கா), 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), நம்பர் ஒன் புயல் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), முன்னாள் சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

    சோபியா கெனின், ஆஸ்திரேலியாவின் வைல்டு கார்டு சலுகை பெற்ற மேடிசன் இங்லிசையும், ஒசாகா, ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவையும், ஆஷ்லி பார்ட்டி, மோன்ட்னெக்ரோவின் டான்கா கோவினிச்சையும், செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் லாரா சிஜ்முன்டையும் தங்களது முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்கள்.

    இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 39 வயதான செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்ற பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்ல முடியாமல் போராடுகிறார். இளம் பட்டாளத்துக்கு மத்தியில் அவரது ஆக்ரோஷம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து தான்பார்க்க வேண்டும். அவர் இன்னும் ஒரு பட்டத்தை உச்சிமுகர்ந்தால், பெண்களில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.447 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் வாகை சூடும் வீரர், வீராங்கனை தலா ரூ.15½ கோடி பரிசுத்தொகையுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெறுவார்கள். கொரோனா பின்னடைவுகளால் பட்டம் வெல்வோருக்கு பரிசுத்தொகை கடந்த முறையை விட 33 சதவீதம் அதாவது ரூ.7¼ கோடி குறைக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோற்போருக்கு ரூ.8½ கோடி கிடைக்கும். இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.3½ கோடி கிட்டும். அதே சமயம் முதல் சுற்றில் இருந்து 4-வது சுற்று வரை வெற்றி பெறுவோரின் பரிசுத்தொகை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூ.55 லட்சத்தை தட்டிச் செல்வார்கள்.

    முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

    சென்னை:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.

    அதன்படி முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு முன் எச்சரிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. வெற்று மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.

    இதற்கிடையே சென்னையில் வருகிற 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி 2-வது டெஸ்ட் போட்டிக்கான சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 15 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக டிக்கெட் விற்பனை வருகிற 9-ந்தேதி ஆன்லைனில் தொடங்குகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறியதாவது:-

    இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வருகிற 9-ந்தேதி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    2-வது டெஸ்டுக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதால் ஐ.ஜே. மற்றும் கே ஆகிய 3 ஸ்டாண்டுகளின் இருக்கைகள் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    9 ஆண்டுக்கு பிறகு அந்த 3 ஸ்டாண்டுகளிலும் ரசிகர்கள் அமர வைக்கப்படுகிறார்கள். கடைசியாக 2012-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது அந்த 3 ஸ்டாண்டிலும் ரசிகர்கள் இருந்தனர். பின்னர் விதிமுறை மீறல் காரணமாக அந்த 3 ஸ்டாண்டுகள் ‘சீல்’ வைக்கப்பட்டது. தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் 3 கேலரிகளும் திறக்கப்படுகிறது.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் இரட்டை சதம் அடித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

    இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். 377 பந்துகளில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 218 ரன்கள் குவித்தார்.

    ஜோரூட் இதன்மூலம் பல சாதனைகள் புரிந்தார். அதன் விவரம் வருமாறு:-

    * 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோரூட் ஆவார். இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த இன்சமாம் 2005-ம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் 184 ரன் குவித்ததே 100-வது டெஸ்டில் அதிக ரன்னாக இருந்தது.

    * 218 ரன் குவித்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோரூட் பெற்றார். 8,467 ரன்களை குவித்து அவர் ஸ்டூவர்டை முந்தினார். இலங்கை தொடரில் அவர் பாய்காட், பீட்டர்சன், டேவிட் கோவர் ஆகியோரை முந்தி இருந்தார்.

    * ஜோரூட்டின் 5-வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த குக்குடன் இணைந்தார். ஹேமண்ட் 7 இரட்டை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.

    * கேப்டன் பதவியில் ஜோரூட்டின் 3-வது இரட்டை சதம் ஆகும். வேறு எந்த இங்கிலாந்து கேப்டனும் ஒன்றுக்கு மேல் இரட்டை சதம் அடித்ததில்லை.

    * கடந்த 3 டெஸ்டையும் சேர்த்து ஜோரூட் 644 ரன்களை குவித்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 229 ரன்னும் (228+1), 2-வது டெஸ்டில் 197 ரன்னும் (186+11) எடுத்தார். இதன் மூலம் 3 டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். கிரகாம் கூச் (779 ரன்), ஹேமண்ட் (763) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    * சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீன் ஜோன்ஸ் 210 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த டெஸ்ட் டையில் முடிந்தது. ஒட்டு மொத்தத்தில் சேப்பாக்கத்தில் 5 வெளிநாட்டு வீரர்கள் இரட்டை சதம் பதிவு செய்துள்ளனர்.

    * 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெளிநாட்டு வீரர் ஒருவர் இரட்டை சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லம் 302 ரன்கள் (ஐதராபாத்) குவித்திருந்தார்.

    3 டெஸ்டிலும் 150 ரன்னுக்கு மேல் எடுத்த 7-வது பேட்ஸ்மேன் ஜோரூட் ஆவார். 

    ×