என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 47-வது இடத்திற்கு முன்னேறியது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்றுவரை பளுதூக்குதல், பேட்மிண்டன், மல்யுத்தம் ஆகியவற்றில் இந்தியா 2 வெள்ளி பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 66-வது இடத்தில் இருந்தது.

    இன்றைய ரெஸ்லிங்கில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெங்கலப் பதக்கம் வென்றார். மாலை 4.30 மணிக்கு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இன்று ஒரே நாளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 66-வது இடத்தில் இருந்து 47-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு கடைசியாக தனி நபர் பிரிவில் 2008 ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் கிடைத்தது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் தடகள வீரரான நீரஜ் சோப்ரா, இன்று ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் எறிந்தபோது ஒரு மகத்தான சாதனை படைக்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் ஒரு தனி நபர் கூட தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றி எழுதி 'தங்க மகனாக' உருவெடுத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. 

    கடைசியாக இந்தியா சார்பில் தடகளப் போட்டியில் வெள்ளி வென்றவரின் பெயர் நார்மன் பிரிட்சார்ட். பதக்கம் வென்ற ஆண்டு 1900. ஆண்களுக்கான 200 மீட்டர் தடகளப் போட்டியில் அவர் இந்த மகத்தான சாதனையைப் படைத்தார். 

    நீரஜ் சோப்ரா

    அதன் பிறகு நாம் ஆடவர் ஹாக்கி போட்டியில் 8 முறை தங்கம் வென்றுள்ளோம். கடைசியாக நமக்கு கிடைத்த தனி நபர் தங்கப் பதக்கமானது 2008 ஆம் ஆண்டு வந்தது. அப்போது சீனாவின் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10 மீட்டர் ரைஃபில் போட்டியில் தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா. அதையடுத்து, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தங்கம் வென்றுள்ளது இந்தியா. இன்னும் 100 ஆண்டுகள் அல்ல, அதையும் தாண்டி இந்த சாதனை பேசப்படும். 

    நீரஜ் சோப்ரா தனக்குப் பின்னால் வந்த பல தலைமுறையினர் பதக்கங்களைக் குவிக்க உத்வேகமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தார் என்று வரலாறு எழுதும்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார். 

    இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார். ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து  தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58  மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார். 

    நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்  ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, முதல் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

    இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மொத்த பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
    ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரருடன் பஜ்ரங் புனியா மோதினார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, அபாரமாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறினார். 

    ஆனால் அரையிறுதியில் போராடி தோல்வி அடைந்தார். இதனால் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரருடன் மோதினார். இப்போட்டியில், பஜ்ரங் புனியா 8-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வசமாக்கினார்.
    இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன் எடுத்தது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 95 ரன் கூடுதலாகும்.

    தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி 84 ரன்னும், ஜடேஜா 56 ரன்னும் எடுத்தனர். ராபின்சன் 5 விக்கெட்டும் , ஆண்டர்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    95 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 4 -வது நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து அணி 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 10 விக்கெட் இருக்கிறது.

    இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா, முகமது ‌ஷமி ஆகியோர் முதல் இன்னிங்சில் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

    அதே நேரத்தில்இந்த டெஸ்டில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டங்கள் போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு இருந்தது.

    இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்திய அணிக்கு மேலும் 2 பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட் டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் பெற்றுள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்திய ஆக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்று புதிய வரலாறு படைத்தது.

    இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்றைய போட்டி மூலம் இந்திய அணிக்கு மேலும் 2 பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ்சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். அவர் பங்கேற்கும் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்தார். முதல் முயற்சியிலேயே அவர் சிறப்பாக செயல்பட்டார்.

    அவர் அதே முழு திறமையுடன் செயல்பட்டால் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வியை தழுவினார்.

    65 கிலோ பிரிவில் கலந்து கொண்ட அவர் முதல் சுற்றில் கிர்கிஸ்தான் வீரரையும், கால் இறுதியில் ஈரான் வீரரையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் அஜர் பைஜான் வீரரிடம் தோற்றார். பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இன்று மாலை 4 மணிக்கு மோதுகிறார்.

    இதில் வெற்றி பெற்று அவர் வெண்கலப்பதக்கத்தை பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நான்கு வெற்றியையும் தொடர்ச்சியாக பெற்றதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 புள்ளியுடன் முதல் இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 36 ரன் வித்தியாசத்தில் கோவை கிங்சை வீழ்த்தியது.

    முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. ஆர்.சதீஷ் 32 பந்தில் 64 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), சாய் கிஷோர் 27 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய கோவை அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்னே எடுக்க முடிந்தது. அபிஷேக் தன்வார் அதிகபட்சமாக 29 ரன் எடுத்தார். சாய் கிஷோர், ஹரிஷ் குமார் தலா 2 விக்கெட்டும், சித்தார்த் , ஜெகநாத் சீனிவாஸ் , சோனு யாதவ், அலெக்சாண்டர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 4-வது வெற்றியாகும். இந்த நான்கு வெற்றியையும் தொடர்ச்சியாக பெற்றது. இதன் மூலம் அந்த அணி 9 புள்ளியுடன் முதல் இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் மோதுகின்றன. திண்டுக்கல் அணி 6 புள்ளிகளுடனும், திருப்பூர் 5 புள்ளிகளுடனும் உள்ளன.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. மதுரை அணி 5 புள்ளிகளுடனும், சேலம் அணி 3 புள்ளிகளுடனும் உள்ளன.

    ஒலிம்பிக்கில் வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீராங்கனை ஒருவர் கோல்ஃப் போட்டியில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் ஏமாந்தார் அதிதீ அசோக்.
    டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் அதிதீ அசோக், திக்சா டகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மொத்தம் நான்கு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. நான்கு போட்டிகளில் எந்த வீராங்கனை குறைவான வாய்ப்பில் பந்தை குழிக்குள் தள்ளுகிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள்.

    போட்டிகள் நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. 3-வது சுற்று முடிவில் இந்திய வீராங்கனை குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவாக (To Par) மைனஸ் 12 பெற்றிருந்தார். மொத்த புள்ளிகள் 201 பெற்றிருந்தார். இதன்மூலம் 2-வது இடத்தில் இருந்தார்.

    4-வது சுற்று இன்று நடைபெற்றது. 9 ரவுண்டுகளை கொண்ட சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  இரண்டு மைனஸ் 2 To Par மட்டுமே பெற்று (புள்ளிகள் 269)  ஏமாற்றம் அடைந்தார். இதனால் மொத்தமாக மைனஸ் 15 To Par பெற்றார். அமெரிக்க வீராங்கனை  மைனஸ் 2 To Par  உடன் மொத்தமாக மைனஸ் 17 To Par பெற்று (மொத்த புள்ளிகள் 267) முதலிடம் பிடித்தார்.

    ஜப்பான் மற்றும் நியூசிலாந்து வீராங்கனைகள் முறையே மைனஸ் 6 To Par பெற்று மொத்தம் மைனஸ் 16 To Par பெற்று (268 புள்ளிகள்) விட்டார்கள். இதனால் இரண்டு பேரும் 2-வது இடத்தை பிடித்துவிட்டார்கள். அவர்களில் யாருக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் என்பதற்கான போட்டி நடைபெற்றது.

    அதிதீ அசோக் இன்று கூடுதலாக இரண்டு மைனஸ் To Par பெற்றிருந்தால் வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் பெற்றிருக்கலாம். அதற்கான வாய்ப்பு பறிபோனது. ஒன்று பெற்றிருந்தால் வெள்ளி அல்லது வெண்கலத்திற்கு பலப்பரீட்சை நடத்தியிருக்கலாம்.

    இதனால்  ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். மற்றொரு வீராங்கனை திக்சா டகர் 50-வது இடத்தை பிடித்தார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பொறுப்புடன் ஆடிய வங்காளதேச அணியின் கேப்டன் மக்மதுல்லா அரை சதமடித்து அசத்தினார்.
    டாக்கா:

    ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளையும் வங்காளதேசம் வென்றிருந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட் செய்தது.

    அதன்படி, வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மக்மதுல்லா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட், ஹேசில்வுட், சாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அரை சதமடித்த மக்மதுல்லா

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியினரின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா திணறியது.

    கேப்டன் வேட் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மெக்டொமெட்டுடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் 63 ரன்கள் சேர்த்தார்.

    மெக்டொமெட் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 51 ரன்னில் வெளியேறினார்.  அடுத்து இறங்கிய ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற கடைசி 4 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது.  17வது ஓவரில் 4 ரன்னும், 18வது ஓவரில் 11 ரன்னும், 
    19வது ஓவரில் ஒரு ரன்னும், கடைசி ஓவரில் 11 ரன் என மொத்தம் 27 ரன்கள் விட்டுக் கொடுத்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரைக் கைப்பற்றி தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது மக்மதுல்லாவுக்கு அளிக்கப்பட்டது.

    வங்காளதேசம் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை முதல் முறையாகக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது.
    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ரிஷப் பண்ட் 25 ரன், கே.எல்.ராகுல் 84 ரன், ரவீந்திர ஜடேஜா 56 ரன், ஷமி 13 ரன் எடுத்து அவுட்டாகினர்.

    கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா 28 ரன்கள் சேர்க்க இந்திய அணி 278 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    கேஎல் ராகுல்

    இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி களமிறங்கினர்.

    11.1 ஓவர்கள் வீசிய நிலையில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து பெய்த மழையால ஆட்டம் கைவிடப்பட்டது.

    மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 25 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்னும், டாம் சிப்லி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட 70 ரன்கள் பின்தங்கியுள்ளது.
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அதிரடியாக ஆடிய சதீஷ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசி அசத்தினார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
     
    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. 

    முன்வரிசை வீரர்கள் சோபிக்காத நிலையில், அதிரடியாக ஆடிய ராஜகோபால் சதீஷ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார். இதேபோல் சாய் கிஷோர் 27 பந்துகளை எதிர்கொண்டு, 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் சேர்த்தார்.

    கோவை அணி தரப்பில் அபிஷேன் தன்வார், செலவக்குமரன், வள்ளியப்பன் யுதீஷ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பெற்ற 4வது வெற்றி ஆகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

    சாய் கிஷோர், ஹரிஷ்குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அபாரமாக ஆடிய சதீஷ், 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. முன்வரிசை வீரர்கள் சோபிக்காத நிலையில், அதிரடியாக ஆடிய ராஜகோபால் சதீஷ், 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார். இதேபோல் சாய் கிஷோர் 27 பந்துகளை எதிர்கொண்டு, 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் சேர்த்தார்.

    கோவை அணி தரப்பில் அபிஷேன் தன்வார், செலவக்குமரன், வள்ளியப்பன் யுதீஷ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது.
    ×