என் மலர்
விளையாட்டு

நாட்டிங்காம்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன் எடுத்தது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 95 ரன் கூடுதலாகும்.
தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி 84 ரன்னும், ஜடேஜா 56 ரன்னும் எடுத்தனர். ராபின்சன் 5 விக்கெட்டும் , ஆண்டர்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
95 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்து இருந்தது.
இன்று 4 -வது நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து அணி 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 10 விக்கெட் இருக்கிறது.
இந்திய பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா, முகமது ஷமி ஆகியோர் முதல் இன்னிங்சில் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
அதே நேரத்தில்இந்த டெஸ்டில் 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டங்கள் போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு இருந்தது.
டோக்கியோ:
32-வது ஒலிம்பிக் போட் டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி இதுவரை 2 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் பெற்றுள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்திய ஆக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்று புதிய வரலாறு படைத்தது.
இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் முடிகிறது. இன்றைய போட்டி மூலம் இந்திய அணிக்கு மேலும் 2 பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ்சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். அவர் பங்கேற்கும் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்தார். முதல் முயற்சியிலேயே அவர் சிறப்பாக செயல்பட்டார்.
அவர் அதே முழு திறமையுடன் செயல்பட்டால் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதியில் தோல்வியை தழுவினார்.
65 கிலோ பிரிவில் கலந்து கொண்ட அவர் முதல் சுற்றில் கிர்கிஸ்தான் வீரரையும், கால் இறுதியில் ஈரான் வீரரையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் அஜர் பைஜான் வீரரிடம் தோற்றார். பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இன்று மாலை 4 மணிக்கு மோதுகிறார்.
இதில் வெற்றி பெற்று அவர் வெண்கலப்பதக்கத்தை பெறுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 36 ரன் வித்தியாசத்தில் கோவை கிங்சை வீழ்த்தியது.
முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. ஆர்.சதீஷ் 32 பந்தில் 64 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), சாய் கிஷோர் 27 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய கோவை அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்னே எடுக்க முடிந்தது. அபிஷேக் தன்வார் அதிகபட்சமாக 29 ரன் எடுத்தார். சாய் கிஷோர், ஹரிஷ் குமார் தலா 2 விக்கெட்டும், சித்தார்த் , ஜெகநாத் சீனிவாஸ் , சோனு யாதவ், அலெக்சாண்டர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 4-வது வெற்றியாகும். இந்த நான்கு வெற்றியையும் தொடர்ச்சியாக பெற்றது. இதன் மூலம் அந்த அணி 9 புள்ளியுடன் முதல் இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் மோதுகின்றன. திண்டுக்கல் அணி 6 புள்ளிகளுடனும், திருப்பூர் 5 புள்ளிகளுடனும் உள்ளன.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. மதுரை அணி 5 புள்ளிகளுடனும், சேலம் அணி 3 புள்ளிகளுடனும் உள்ளன.


டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. முன்வரிசை வீரர்கள் சோபிக்காத நிலையில், அதிரடியாக ஆடிய ராஜகோபால் சதீஷ், 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார். இதேபோல் சாய் கிஷோர் 27 பந்துகளை எதிர்கொண்டு, 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் சேர்த்தார்.
கோவை அணி தரப்பில் அபிஷேன் தன்வார், செலவக்குமரன், வள்ளியப்பன் யுதீஷ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது.






