என் மலர்
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தது. எனினும், ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருப்பதால் பாராட்டுகள் குவிகின்றன.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி அணியில் இடம்பெற்ற மிசோரம் வீராங்கனை லால்ரெம்சியாமிக்கு அரசு வேலை மற்றும் சொந்த ஊரில் வீட்டு மனை வழங்கப்படும் என முதல்வர் ஜோரம்தங்கா அறிவித்துள்ளார். ஒலிம்பிக் பயிற்சிக்காக அவருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிற்பகல் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் ஹாஜி அலியேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே அஜர்பைஜான் வீரர் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை பெற்றார். அவரது உடும்பு பிடியில் சிக்காமல் கடுமையாக போராடினார் பஜ்ரங் புனியா. எனினும் இறுதியில் 5-12 என்ற புள்ளி கணக்கில் புனியா தோல்வியைத் தழுவினார்.
அரையிறுதியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் அல்லது செனகல் வீரருடன் நாளை விளையாட உள்ளார் புனியா.
புதுடெல்லி:
இந்திய மகளிர் ஆக்கி அணியை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒலிம்பிக்கில் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டாலும் பெண்கள் ஆக்கி அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணி சிறந்த நிலையை எட்டியுள்ளது.
அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தனர். தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர். இந்த சிறந்த அணியால் இந்தியா பெருமை அடைகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெற்ற இந்த வெற்றி இந்தியாவின் இளம் தலைமுறை வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பது முக்கியமானது. இந்திய மகளிர் ஆக்கியை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன்.
இந்திய அணியின் சிறப்பான செயல்திறனை எப்போதும் நினைவில் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...ஆக்கி வீரர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 கோடி பரிசு - பஞ்சாப் அரசு அறிவிப்பு
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. நெல்லை பெற்ற 3-வது வெற்றியாகும். மதுரை 3-வது தோல்வியை தழுவியது.
19-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 7 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் நெல்லையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சேலம் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் திண்டுக்கல் அணியை 24 ரன் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் மதுரை அணியை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது .
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் கோவையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
கோவை அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா கிர்கிஸ்தானைச் சேர்ந்த எர்னாஸர் அக்மாட்டாலிவை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற்ற பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் ஈரானைச் சேர்ந்த மோர்ட்டேசா சியாசி செகாவை எதிர்கொண்டார். 2-1 என முன்னிலைப் பெற்றிருந்த பஜ்ரங் புனியா, 4.56 நிமிடத்தில் ஈரான் வீரரை கீழே சாய்த்து இரண்டு தோள்பட்டையும் தரையில் படும்படி அழுத்திப்பிடித்தார். இதனால் கீழே வீழ்த்திய முறையில் (Victory by Fall) பஜ்ரங் புனியா வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இதன்மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர் ஹஜி அலியேவ்-ஐ எதிர்கொள்கிறார்.







