என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் சேலத்துக்கு எதிரான போட்டியில் நெல்லை அணியின் பிரதோஷ் ரஞ்சன் பால், சஞ்சய் யாதவ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. 

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 41 ரன்கள் அடித்தார். அபிஷேக் 25 ரன்களும், லோகேஷ் ராஜ் 15 ரன்களும், கணேஷ் மூர்த்தி 10 ரன்களும் எடுத்தனர். 
    நெல்லை அணி சார்பில் அதிசயராஜ், ஹரிஷ், கேப்டன் பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 121 ரன்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. துவக்க வீரர் சூர்யபிரகாஷ் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின், கேப்டன் பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    பாபா அபராஜித் 38 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

    இறுதியில், நெல்லை அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரதோஷ் ரஞ்சன் பால் 23 ரன்னும், சஞ்சய் யாதவ் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நெல்லை அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் சேர்த்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக விஜய் சங்கர் 41 ரன்கள் அடித்தார். அபிஷேக் 25 ரன்களும், லோகேஷ் ராஜ் 15 ரன்களும், கணேஷ் மூர்த்தி 10 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ், ஹரிஷ், கேப்டன் பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதயடுத்து 121 ரன்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. துவக்க வீரர் சூர்யபிரகாஷ் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கேப்டன் பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே ரன் அவுட் ஆனார்.
    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

    ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தனர். 37 ஓவர்களை சந்தித்த இந்த ஜோடி அருமையான அடித்தளம் அமைத்து கொடுத்தது. சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்து ராபின்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    இதனையடுத்து புஜாரா களமிறங்கினார். எப்படியும் தனது தடுப்பாட்டத்தை ஆடுவார் என அனைவரும் நம்பிக்கையில் இருந்தனர்.  ராபின்சன் ஓவரில் அவருக்கு எல்பிடபிள்யுவுக்கு அம்பயர் அவுட் கொடுத்தார். உடனே புஜாரா ரிவ்யூ கேட்க மூன்றாம் நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார். 

    அடுத்த சிறிது நேரத்தில் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை புஜாரா இழந்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்து வந்த நிலையில் மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கே.எல்.ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார்.

    அடுத்து இந்திய அணியின் துணை கேப்டன் களமிறங்கினார். அவர் முதல் ரன் எடுக்கும் போதே ரன் அவுட்டில் இருந்து தப்பி 4 ரன்கள் எடுத்தார். 5 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் கடைசியில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

    ராபின்சன் ஓவரில் கே.எல்.ராகுல் தடுத்து ஆடி ரன் எடுக்க முயற்சித்து வேண்டாம் என்று கூறினார். அதற்குள் எதிர் முனையில் இருந்த ரஹானே பாதி வரை வந்து திரும்பிய நிலையில் பேர்ஸ்டோவ் சிறப்பாக பீல்டிங் செய்து அவரை ரன் அவுட் செய்தார்.

    இந்திய அணி ஒரு கட்டத்தில் 96 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது 125 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கே.எல்.ராகுலுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அவரது பாணியில் அடித்து ஆட ஆரம்பித்தார். சிறப்பாக ஆடி வந்த ராகுல், ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் ஆக இருந்தார். ஆனால் கேட்ச்சை சிப்லி தவற விட்டதால் ராகுல் தப்பித்தார்.

    தொடர்ந்து ஆடிய நிலையில் மேகமூட்டம் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

    மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

    கே.எல்.ராகுல் 57 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா 36 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. அந்த அணி முதல் இன்னிங்சில் 183 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதனையடுத்து முதல் இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடி களமிறங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் -ராகுல் தலா 9 ரன்கள் எடுத்திருந்தனர்.

    2-ம் நாளான இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரோகித்-ராகுல் இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர். அவ்வப்போது பவுண்டரிகளை பறக்கவிட்டனர். சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 107 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த போது ராபின்சன் ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். பவுன்சர் பந்தை அடித்ததால் தனது விக்கெட்டை ரோகித் சர்மா இழந்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் 124 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்த போட்டியில் தீபக் புனியா, சான் மரினோவைச் சேர்ந்த நசீம் அமீனுடன் மோதினார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக் புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபக் புனியா, சான் மரினோவைச் சேர்ந்த நசீம் அமீனுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 2-4 என்ற புள்ளிக் கணக்கில் தீபக் புனியா தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.

    முன்னதாக நடைபெற்ற ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக்புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று விளையாட உள்ளார். அதேசமயம், 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ரவிக்குமார் தாஹியா.

    இந்நிலையில், ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் ரஷிய வீரரின் உடும்பு பிடியால் புள்ளிகளை இழந்த ரவிக்குமார், பின்னர் சுதாரித்து கடுமையான முயற்சி மேற்கொண்டார். எனினும் ரவிக்குமாரின் பிடியில் சிக்காமல் ரஷிய வீரர் சாமர்த்தியமாக நழுவியதுடன், கூடுதல் புள்ளிகளை பெற்றார்.

    இறுதியில் 4-7 என்ற புள்ளிக் கணக்கில் ரவிக்குமார் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    2019ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெண்கலம் வென்றார். அதன்பின்னர் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
    இந்திய ஆக்கி வீரர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.
    ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய ஆக்கி அணி சாதனை புரிந்தது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற ஆக்கி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.

    அதோடு அவர் செல்போன் மூலம் வீரர்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மோடி, ஆக்கி வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிளில் வென்றதன் மூலம் 4-வது இடத்தில் இருந்து 2 -வது இடத்துக்கு முன்னேறியது.

    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை வீழ்த்தியது.

    முதலில் ஆடிய மதுரை அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் சதுர்வேத் அதிகபட்சமாக 50 பந்தில் 70 ரன் (9 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தார். சித்தார்த் 20 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். சோனு யாதவ் 2 விக்கெட்டும், சந்தீப் வாரியர் , சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 50 பந்தில் 64 ரன் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 3-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3 போட்டிளில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. இதன் மூலம் அந்த அணி 4-வது இடத்தில் இருந்து 2 -வது இடத்துக்கு முன்னேறியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி , ஒரு தோல்வி,ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. திருச்சி வாரியர்ஸ் 8 புள்ளியுடன் முதல் இடத்திலும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3-வது இடத்திலும் (6 புள்ளி), மதுரை 4-வது இடத்திலும் (5 புள்ளி) உள்ளன.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. கடைசி இடத்தில் இருக்கும் சேலம் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    இந்திய ஆக்கி அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

    ஒலிம்பிக் ஆக்கியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்று இந்திய ஆக்கி அணி புதிய வரலாறு படைத்தது. வெண்கல வென்ற இந்திய ஆக்கி அணியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேப்டன் மன்பிரீத்சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால்சிங், ஹர்திக்சிங், ‌ஷம்ஷெர்சிங், தில்பிரீத்சிங், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங் ஆகிய 8 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    கோப்புபடம்

    அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது.

    முதலில் ஆடிய இங்கிலாந்து அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 65.4 ஓவர்களில் 183 ரன்னில் சுருண்டது. கேப்டன் ஜோ ரூட் அதிக பட்சமாக 64 ரன்னும், பேர் ஸ்டோவ் 29 ரன்னும் எடுத்தனர்.

    பும்ரா 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் தலா 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    நேற்றைய போட்டி குறித்து இந்திய வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர் கூறியதாவது:-

    ஜோரூட் விக்கெட்டை கைப்பற்றியது முக்கியமானது. இதேபோல் பேர்ஸ்டோவும் நல்ல நிலையில் ஆடி வந்தார். அவர் சிறந்த நிலைக்கு சென்று விட்டால் அவுட் செய்வது கடினம். இதனால் அவரது விக்கெட்டும் முக்கியமானதாகும்.

    ஆடுகளத்தை பார்த்தால் 4 வேகப்பந்து வீரர்கள் தேவைப்படமாட்டார்கள் என்று நினைத்தோம். இங்குள்ள தட்ப வெப்ப நிலைக்கு டியூக் பந்துகளை வீசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த டெஸ்ட் போட்டி எங்களுக்கு தொடர்ந்து சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் ஆக்கி அணி வெண்கல பதக்கம் பெற்று புதிய வரலாற்றை நிகழ்த்துமா என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது. இதேபோல இந்திய மகளிர் ஆக்கி அணியும் வெண்கலப்பதக்கம் பெற்று சாதிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஆக்கி அணி லீக் ஆட்டங்களில் தான் மோதிய முதல் 3 போட்டியில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கிலும், ஜெர்மனியிடம் 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்திடம் 1-4 என்ற கணக்கிலும் தோற்றது.

    பின்னர் இந்திய மகளிர் ஆக்கி அணி சிறப்பாக ஆடி அயர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும், தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கிலும் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    ஆனால் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது.

    3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை நாளை (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.

    இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் ஆக்கி அணி வெண்கல பதக்கம் பெற்று புதிய வரலாற்றை நிகழ்த்துமா என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    23.30 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து அமெரிக்க வீரர் ரியான் தங்கப்பதக்கமும், 22.65 மீட்டர் தூரத்திற்கு எறிந்து மற்றொரு அமெரிக்க வீரர் வெள்ளி பதக்கமும் வென்றனர்.
    ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வீரர்கள், நியூசிலாந்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட 12 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீரர்களும் தலா ஆறு முறை குண்டு எறிதல் வேண்டும். ஆறு வாய்ப்புகளில் எந்த வாய்ப்பில் வெகுதூரத்திற்கு குண்டு எறிந்தார்களோ, அது அவருடைய செயல்பாடாக எடுத்துக் கொள்ளப்படும்.

    அமெரிக்க வீரர் ரியான் குரோசர் 6-வது வாய்ப்பில் 23.30 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன்  ஒலிம்பிக் சாதனையை பதிவு செய்தார்.

    மற்றொரு அமெரிக்க வீரர் ஜோ கோவாக்ஸ் 22.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். நியூசிலாந்து வீரர் தாமஸ் வால்ஷ் 22.47 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
    ×