search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை விளாசும் விஜய் சங்கர்
    X
    பந்தை விளாசும் விஜய் சங்கர்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு 121 ரன்கள் இலக்கு

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் சேர்த்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக விஜய் சங்கர் 41 ரன்கள் அடித்தார். அபிஷேக் 25 ரன்களும், லோகேஷ் ராஜ் 15 ரன்களும், கணேஷ் மூர்த்தி 10 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ், ஹரிஷ், கேப்டன் பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதயடுத்து 121 ரன்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. துவக்க வீரர் சூர்யபிரகாஷ் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கேப்டன் பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
    Next Story
    ×