search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சான் மரினோ வீரரிடம் மல்லுக்கட்டும் தீபக் புனியா
    X
    சான் மரினோ வீரரிடம் மல்லுக்கட்டும் தீபக் புனியா

    ஒலிம்பிக் மல்யுத்தம்... வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார் தீபக் புனியா

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்த போட்டியில் தீபக் புனியா, சான் மரினோவைச் சேர்ந்த நசீம் அமீனுடன் மோதினார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.

    அதன்பின்னர் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தீபக் புனியா தோல்வியடைந்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபக் புனியா, சான் மரினோவைச் சேர்ந்த நசீம் அமீனுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 2-4 என்ற புள்ளிக் கணக்கில் தீபக் புனியா தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.

    முன்னதாக நடைபெற்ற ஆடவர் 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
    Next Story
    ×