என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்
    X
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்

    டிஎன்பிஎல்: 4-வது வெற்றி ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை அணியுடன் இன்று மோதல்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோவையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சென்னை:

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. நெல்லை பெற்ற 3-வது வெற்றியாகும். மதுரை 3-வது தோல்வியை தழுவியது.

    19-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 7 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் நெல்லையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சேலம் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் திண்டுக்கல் அணியை 24 ரன் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் மதுரை அணியை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது .

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் கோவையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கோவை அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது.

    Next Story
    ×