என் மலர்
செய்திகள்

டிஎன்பிஎல்: 4-வது வெற்றி ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை அணியுடன் இன்று மோதல்
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. நெல்லை பெற்ற 3-வது வெற்றியாகும். மதுரை 3-வது தோல்வியை தழுவியது.
19-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 7 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் நெல்லையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சேலம் அணியை 4 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் திண்டுக்கல் அணியை 24 ரன் வித்தியாசத்திலும், 5-வது ஆட்டத்தில் மதுரை அணியை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது .
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் கோவையை தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
கோவை அணி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 5 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது.






