search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிரடி காட்டிய பும்ரா
    X
    அதிரடி காட்டிய பும்ரா

    நாட்டிங்காம் டெஸ்ட் - 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள்

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஜோடி 6வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது.
    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ரிஷப் பண்ட் 25 ரன், கே.எல்.ராகுல் 84 ரன், ரவீந்திர ஜடேஜா 56 ரன், ஷமி 13 ரன் எடுத்து அவுட்டாகினர்.

    கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா 28 ரன்கள் சேர்க்க இந்திய அணி 278 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    கேஎல் ராகுல்

    இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி களமிறங்கினர்.

    11.1 ஓவர்கள் வீசிய நிலையில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து பெய்த மழையால ஆட்டம் கைவிடப்பட்டது.

    மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 25 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்னும், டாம் சிப்லி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட 70 ரன்கள் பின்தங்கியுள்ளது.
    Next Story
    ×