என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவு- ஆம் ஆத்மி தனித்து போட்டி
- பஞ்சாப்பில் பா.ஜனதாவிடம் தனித்து போட்டியிடுகிறது.
- 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிளை கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். அதை தொடர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் அதில் இருந்து விலகி பா.ஜனதா அணிக்கு தாவினார்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள பாராளுமன்ற தொகுதி என 14 இடங்களிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்றும் அடுத்த 10-15 நாட்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இதேபோல பாஜக - சிரோமணி அகாலிதளம் இடையே இன்று நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் பஞ்சாப்பில் பா.ஜனதாவும் தனித்து போட்டியிடும் வாய்ப்புள்ளது.
இதனால் பஞ்சாப்பில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்