என் மலர்tooltip icon

    இந்தியா

    போர் நிறுத்தம்: டிரம்பிடம் பேசிய மோடி - அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்க தயாரா?- காங்கிரஸ் சவால்
    X

    போர் நிறுத்தம்: டிரம்பிடம் பேசிய மோடி - அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்க தயாரா?- காங்கிரஸ் சவால்

    • தேசியத்தை தடம் புரள செய்ய துடிக்கிறது.
    • காங்கிரஸ் நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டைக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்த போர் நிறுத்தத்துக்கு நான் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல முறை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை என்று டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தெரிவித்தாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து காங்கிரசை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. தனது எக்ஸ் தள பதிவில் பா.ஜ.க. கூறியதாவது:-

    இந்த உரையாடல் காங்கிரசுக்கு ஒரு கெட்ட செய்தியாகும். ஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியை பெற்றதில் இருந்து காங்கிரஸ் பொய்கள், வதந்திகள் மற்றும் குழப்பங்களை பரப்புவதில் மும்முரமாக ஈடுபட்டது. தேசியத்தை தடம் புரள செய்ய துடிக்கிறது.

    ஆனால் பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தெளிவாகவும், விரிவாகவும் பேசியதன் மூலம் உண்மை வெளிவந்துள்ளது. இடைத்தரகர்களுக்கு இடமில்லை. சூழ்ச்சிக்கு இடமில்லை. காங்கிரஸ் நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க தயாரா? என்று சவால் விடுத்துள்ளது.

    உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது 'மோடியின் மக்கள் இதை சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுபற்றி டுவிட் செய்து தனது வார்த்தையை திரும்ப பெறுவதாக கூற வேண்டும். பிரதமர் மோடி இப்போது சொல்வதை யார் நம்புவார்கள்?' என்றார்.

    Next Story
    ×