என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
Byமாலை மலர்14 Oct 2018 10:07 AM GMT (Updated: 14 Oct 2018 10:07 AM GMT)
தமிழ்நாட்டை பற்றி நவ்ஜோத் சித்து தெரிவித்த கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. #NavjotSingh #Rahulshouldapologise
புதுடெல்லி:
இந்தியாவில் உள்ள பலதரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்கு சென்று வந்ததும் அந்நாட்டு ராணுவ தளபதியுடன் சிரித்து கைகுலுக்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானை நான் விரும்புவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிப்பதுபோல் நேற்று ஒரு கருத்தை சித்து வெளியிட்டிருந்தார்.
அங்குள்ள உணவு பிடிக்காது என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும், தொடர்ந்து அதை நீண்ட நாட்களுக்கு சாப்பிட முடியாது. அதேபோல் அவர்களின் கலாசாரமும் முற்றிலும் வேறுவிதமானது.
ஆனால், நான் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும்போது இந்த சிரமம் இல்லை. மொழி உள்பட அங்குள்ள அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க. இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மேலிடத் தலைவர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சித்து கூறிய கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நவ்ஜோத் சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #GVLNarasimhaRao #NavjotSingh #Rahulshouldapologise
இந்தியாவில் உள்ள பலதரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி ஏற்பு விழாவுக்கு சென்று வந்ததும் அந்நாட்டு ராணுவ தளபதியுடன் சிரித்து கைகுலுக்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானை நான் விரும்புவது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிப்பதுபோல் நேற்று ஒரு கருத்தை சித்து வெளியிட்டிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் பேசிய சித்து, ‘நான் தமிழ்நாட்டுக்கு சென்றால் அங்குள்ள மொழி புரியாது. ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகள் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது.
ஆனால், நான் பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும்போது இந்த சிரமம் இல்லை. மொழி உள்பட அங்குள்ள அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க. இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மேலிடத் தலைவர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், சித்து கூறிய கருத்துக்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் கட்சி (காங்கிரஸ்) பாகிஸ்தானை நேசிப்பதும், உங்கள் கட்சியினர் பாகிஸ்தானின் புகழ்பாடி வருவதும் எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டை பற்றி சித்து தெரிவித்த கருத்துக்காக அவர் நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். நவ்ஜோத் சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #GVLNarasimhaRao #NavjotSingh #Rahulshouldapologise
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X