என் மலர்
கதம்பம்
- சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
- சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும்.
திருமணம் போன்ற அனைத்து சுபகாரியங்களிலும் வாழை இலையில் விருந்து பரிமாறுகிறார்களே, அதற்கு ஏன் என்று என்றாவது விருந்து சாப்பிடும் போது சிந்தித்திருக்கிறீர்களா ?
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம் வாழை இலை விருந்துக்கு சமைத்த உணவில் ஏதாவது நஞ்சு இருந்தால் அதை வாழை இலை நீக்கிவிடும்.
நம்பமுடியவில்லையா.. இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்தால் முதலுதவியாக வாழையின் மட்டையில் இருந்து சாறு பிழிந்துதான் தருவார்கள். அதன் அடிக் கிழங்கில் இருந்து சுரக்கும் நீரைத்தருவார்கள் .
அதற்காகத்தான் பெருவாரியாக மக்கள் கூடும் கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் இன்னும் சொல்லப்போனால் சில பகுதியில் இறப்பு வீடுகளிலும் கூட முதலுதவி இருக்கவேண்டும் என்று தயாராக வாழையை மங்களகரம் என்று கூறி கட்டிவைப்பார்கள் .
திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தார்கள் தொல் தமிழர்கள் .
அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் முதலுதவிக்கு அவ்வாறு செய்து வைத்தார்கள். எத்தகைய அமங்கலமும் நடக்காமல் இருந்தால் அது மங்கலம் தானே ! இவ்வாறு தொல் தமிழ் மக்கள் எதையும் அறிவியல் பூர்வமாகவே செய்திருக்கிறார்கள் .
வாழை இலையில் உண்பது நஞ்சு நீக்க மட்டும் காரணம் அல்ல. வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.
சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.
வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது. அதனால் தான் சமீப காலம் வரை பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால் அதை வாழை இலையில் தான் கட்டித் தருவார்கள் .
-அண்ணாமலை சுகுமாரன்
- துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.
- உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது.
லிப்ஸ்டிக், நகப்பாலீஷ், முகத்திற்குப் பூசப்படும் அழகு சாதன பொருட்கள், மருந்துகள், மாத்திரைகள், டானிக்குகள், மேல் பூச்சு மருந்துகள்... இப்படி அனைத்தையும், அனைத்திலும் சிவப்பு நிறத்தை பார்க்கும் நாம், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளவதில்லை.
மேற்கூறிய அனைத்துப் பொருட்களிலும் சிவப்பு நிறத்திற்காகக் கலக்கப்படும் நிறமி ஒரு வகையான பூச்சிகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
கோச்சினீல் பக் என்னும் ஒரு வகையான ஒட்டுண்ணி பூச்சியில்தான் இந்த சிவப்பு நிறமி இருக்கிறது. காக்ட்ஸ் வகை (கள்ளி) செடிகளில் வெள்ளை நிற கூட்டுடன் வாழும் இப்பூச்சிகளை கசக்கினால், கைகளில் சிவப்பு நிறம் கிடைக்கும். உலர வைத்த இப்பூச்சிகளை அலுமினியம் அல்லது கால்சியம் உப்புடன் சேர்த்துப் பின் பக்குவப்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு நிற மைக்கு "கார்மைன்" அல்லது "காக்கினியல் மை" என்று பெயர் வைத்துள்ளார்கள்.
துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருட்களானாலும் அதனுடைய மேல் அட்டையில் (லேபிள்) E 120, Natural Red 4, Carmine, Cochineal, Carminic acid என்று ஏதாவது ஒன்றை கண்டிப்பாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
ஒருவேளை இந்த சிவப்பு நிறமே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருந்தால் E 124 என்று குறிப்பிடவேண்டும்.

உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் இந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது. ஆனால், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே ஜெல்லி மிட்டாய்கள், கேண்டீஸ், சாக்லேட், போன்றவை அதிக அளவில் சிவப்பு நிறத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.
பதப்படுத்தப்பட்ட மாமிசம், குளிர்பானங்கள், பழ ரசங்கள், ஆற்றல் தரும் பானங்கள், உணவுப் பொடிகள், இனிப்பு தயிர், பால் பொருட்கள், ஐஸ்கிரீம், சூயிங்கம், சாக்லேட், கற்கண்டு வகை இனிப்புகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட பழங்கள், உலர் சூப் பொடி, கெச்சப், மதுபானங்கள்...... என்று இவை அனைத்திலும் இந்த நிறம் இருக்கும்.
ஒருவேளை.... அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கும்போது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அது இந்த பூச்சியினாலேயே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-வண்டார் குழலி
- பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள்.
- பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம்.
வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலுடன் இருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.
வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென்மேற்கு திசை முக்கியம்.
இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது.
பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் தேக்கு மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்.
பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.
பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டுக்குள் வந்து பறந்துபோகும் சிட்டுக்குருவியைப் போன்றது. அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள். நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.
உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.
பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டாக வையுங்கள்.
பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்) பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்.
-ஸ்ரீராம் கோவிந்த்
- நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க.
- நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது.
இந்தியாவை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே அவதிப்பட்டு வர்றாங்க. அப்படிப்பட்டவங்க தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
அதுசரி, நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க. பொதுவா அரிநெல்லின்னு சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துறது இல்லை. ஆனாலும் ஒரு கேள்வி கேட்டு வைப்பாங்க... நம்ம மக்கள். நெல்லிக்காய்... நாட்டு நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அளவு பெரிதாக இருக்குமே அந்த நெல்லிக்காய்தான் நான் சொல்லக்கூடியது.
வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியலைனா நெல்லிக்காயோட இஞ்சி சேர்த்து அரைச்சி அதோட எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை, தேவைப்பட்டா உப்பும் சேர்த்து தண்ணி கலந்து சாப்பிடலாம். காலையில் டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கும். அந்த வகையில கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரி செய்யும் நெல்லிக்காய். ஏன்... ரகசியமா வரக்கூடிய எய்ட்ஸ் நோயைக்கூட நெல்லிக்காய் குணப்படுத்தும்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா நாம சாப்பிடுற முறையிலதான் நோய் குணமாகும்.
-மரியா பெல்சின்
- ஆடுகள் பெருகியவுடன்... ஆடுகளை விற்று மாடுகள் வாங்குவேன்.
- மாடுகள் பெருகியவுடன்.. மாடுகளை விற்று குதிரைகள் வாங்குவேன்.
அந்த ஏழை விவசாயி, தன் வீட்டில் கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு மேலே தொங்கி கொண்டிருக்கும் தன் கஞ்சி கலையத்தை பார்த்துக் கொண்டே...
ஒரு நாள்... இந்த ஊரில் கடுமையான பஞ்சம் வரும்.
அப்போது, இந்த கஞ்சியை நல்ல விலைக்கு விற்பேன்.
கஞ்சி விற்ற காசில் கோழிகள் வாங்கி வளர்ப்பேன்.
சில மாதங்களில் கோழிகள் நிறைய பெருகியவுடன்.. கோழிகளை விற்று ஆடுகள் வாங்குவேன்.
ஆடுகள் பெருகியவுடன்... ஆடுகளை விற்று மாடுகள் வாங்குவேன்.
மாடுகள் பெருகியவுடன்.. மாடுகளை விற்று குதிரைகள் வாங்குவேன்.
பிறகு, பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி... அதிலுள்ள குதிரை லாயத்தில் குதிரைகளை கட்டி வைப்பேன்.
ஊரில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர் தன் மகளை எனக்கு மணமுடித்து வைப்பார்.
எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்...
அவனுக்கு ராஜா என்று பெயர் வைப்பேன்.
மாடியிலிருந்து என் மனைவியும் என் குழந்தையும் விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்.
அப்போது அவன் சேட்டை செய்வான்.
பிறகு கீழே சென்று அவளை பார்த்து...
"ஏய்..! ராஜாவை கூட்டிட்டு வீட்டுகுள்ள போ... என்று கம்பால் ஓங்கி அடிப்பேன்" என்று அடித்தான்...
அடித்தவுடன் கஞ்சிகலயம் உடைந்து அவன் முகத்தில் கொட்டியது .
வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பாருங்கள்.
- ஓஷோ
- 1947 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.
- நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தையே நேரு வாசித்தார்.
1947 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதை நாட்டு மக்களுக்குப் பிரகடனப்படுத்த பிரமாண்டமான சுதந்திர விழா டெல்லியில் நடந்தது. அந்த விழா மேடையில் சுமார் 10 நிமிடம் மட்டுமே தனது நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டினார் டி.என். ராஜரத்தினம் பிள்ளை.
இதைக்கேட்டு இந்திய முதல் பிரதமர் நேரு அசந்து போனார். இவரது நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தையே நேரு வாசித்தார். அப்போது அவரிடம் நேரு "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
"ஊரில் திருடர் பயம் அதிகமாக இருக்கிறது. எனவே கரன்ட் வேண்டும்" என்று கேட்டார் ராஜரத்தினம் பிள்ளை. இதைச் சொல்லிவிட்டு டெல்லியிலிருந்து புறப்பட்டு ஊர் திரும்பிய ராஜரத்தினம் பிள்ளையை ஊரில் இருந்த மின்சார விளக்குகள், கண்சிமிட்டி வரவேற்றன!
ஒரு கச்சேரிக்கு, தான் வரும்போது எழுந்து நிற்காத மாவட்ட கலெக்டரிடம் ராஜரத்தினம் கேட்டாராம்.. ''ஏம்ப்பா... நான் இந்தக் கச்சேரிக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் வாங்கியிருக்கேன். உன் மாசச் சம்பளமே ஆயிரத்தைத் தாண்டாது. நீ பெரியவனா, நான் பெரியவனா?''
ஒருசமயம் கலெக்டர் என்ன, மைசூர் மகாராஜாவையே ஒரு பிடி பிடித்துவிட்டார். கச்சேரி முடிந்ததும் கைதட்டி பாராட்டிய மகாராஜா, ''கணக்குப்பிள்ளை, பணத்தை எடுத்துவந்து பிள்ளைக்குக் கொடு'' என்றாராம்.
உடனே பிள்ளை, பக்கவாத்தியம் வாசித்தவரைக் கூப்பிட்டு, ''மேளக்காரரே... பணத்தை வாங்கும்...'' என்று சொல்லிவிட்டு, மகாராஜாவிடம், ''நீங்கள் மாநிலத்துக்கு ராஜா என்றால் நான் இசைக்குச் சக்கரவர்த்தி ஐயா'' என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் மகாராஜா தன் கையாலேயே பிள்ளைக்குச் சன்மானம் செய்தாராம்!
- அம்ரா பாண்டியன்
- விமானப்படையை பொறுத்தவரை இஸ்ரேல் நான்காவது இடத்தில் இருக்கிறது.
- இஸ்ரேலில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதை பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.
யூதர்கள் பெரும்பாலான துறைகளில் சிறந்தவர்களாக இருக்கின்றனர். நோபல் பரிசு பெற்ற 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், இலக்கியவாதிகளில் 256 பேர் யூதர்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன், ஸ்பீல் பெர்க், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் யூதர்கள். பெப்ஸி, கோக், மேக்ஸ்ஃபேக்டர், யுனிலீவர், டன்ஹில் போன்ற உலகின் பெரும் வணிக நிறுவனங்களில் 70 சதம் யூதர்களுடையது. கூகுள், ஆப்பிள், பேஸ்புக், மோடாடோரோலோ வாய்ஸ்மெயில், கணிணி ஆண்டி வைரஸ் ஆகிய தகவல் தொழில்நுட்பம் யூதர்களுடையது.
மான்சான்ட்டோ போன்ற பெரும் விவசாய நிறுவனங்கள் யூதர்களுடையது. சொட்டுநீர் பாசனம், கிரீன் ஹவுஸ் கல்டிவேஷன் போன்ற விவசாய தொழில் நுட்பமும், ஸ்டெம்செல் தெரப்பி போன்ற மருத்துவ தொழில் நுட்பமும் யூதர்களுடையவை.
உலகிலேயே ஏவுகணைகளை விண்ணிலேயே தாக்கி அழிக்கும் அயர்ன் டாம்ப் எனப்படும் ஆயுதம், யூதர்கள் பெரும்பான்மையாக உள்ள இஸ்ரேலில் மட்டும் இருக்கிறது. விமானப்படையை பொறுத்தவரை இஸ்ரேல் நான்காவது இடத்தில் இருக்கிறது.
பெரும்பாலான யூதர்களுக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை அட்டைகளும் வீடுகளும் இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய சிகரெட் தயாரிக்கும் தொழிலகம் அவர்களுடையது. ஆனால் இஸ்ரேலில் சிகரெட் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் யூதர்களுடையது. ஆனால் இஸ்ரேலில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதை பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.
உலகில் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி உலகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்பது யூதர்களின் கனவாயிருக்கிறது.
-எம்.எஸ். ராஜகோபால்
- 2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார்.
- இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார்.
'இன்னும் ஒரு மகன் பிறந்தால் நன்றாக இருக்குமே..' என்று பேராசைப்படும் ஒரு நாட்டில், ராஜஸ்தானில் உள்ள பிப்லாந்த்ரி என்ற ஒரு சிறு கிராமத்தில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றவும், அதே நேரத்தில் பசுமையைப் பாதுகாக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகிறார்கள்.
2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார். இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார். ஏன் இந்த நிகழ்வை ஒரு பரந்த திட்டமாக மாற்றக்கூடாது என்று அவர் எண்ணினார். விரைவில், மற்ற கிராமவாசிகளும் அவரது வழியைப் பின்பற்றத் தொடங்கினர்.
பளிங்குச் சுரங்கங்களினால் சுரண்டப்பட்ட மலைகளினால் நிலம் வறண்டு, பசுமை சிதைந்திருந்த இப்பகுதியில் இந்த மேன்மையான திட்டத்தால் 3,50,000 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மா, நெல்லி முதல் சந்தனம், வேம்பு, மூங்கில் வரை. ஒரு காலத்தில் தரிசாக இருந்த நிலங்களில் மரங்கள் வளர்ந்து 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மரம் நடுவதுடன், பெண் குழந்தைகளின் பெற்றோர்களும் 18 வயதுக்கு முன் தங்கள் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றும், பள்ளிப் படிப்பை முடிக்க அனுமதிப்போம் என்றும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள். கிராமவாசிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 31,000 மதிப்பில் ஒரு நிலையான வைப்புக் கணக்கைத் தொடங்கி, அவள் 18 வயதை எட்டியதும், மகளின் கல்விக்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ அந்தத் தொகையைச் செலவிடுகிறார்கள்.
பிப்லாந்த்ரியின் வளர்ந்து வரும் காடு, நீர் மேலாண்மையை மேம்படுத்தும்போது இந்திய கிராமங்கள் எப்படி பசுமையாக மாறும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
-சித்ரா ரங்கராஜன்
- நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.
- தலைசுற்றல், மலச்சிக்கல், கை-கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும்.
திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சில பேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.
அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை-கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும்.
நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு. மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ந்த திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம்.
குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும். எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விசேஷமானது.
- மரியா பெல்சின்
- சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.
- சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும்.
ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைத்து விடும்.
சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.
சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.
சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.
சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.
சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.
சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.
சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.
சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.
-ஸ்ரீராம் கோவிந்த்
- உணவு மூலம் உண்ணும் கொலஸ்ட்ராலுக்கும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கும் ஓரளவுக்கு தான் தொடர்புபடுத்த முடிகிறது.
- உயிர் பிழைக்க உதவும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அனைத்துக்கும் கொலஸ்ட்ரால் தேவை.
பெரும்பான்மை அறிவுரைகளில் முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே உண்ண வேண்டும் என்றும் மஞ்சள் கருவை தீண்டுவது தவறு என்றும் கூறப்படுகிறது. அந்த அறிவுரைகளில் அளவற்ற அச்சம் இருக்கிறதே அன்றி அறிவியல் இல்லை.
முட்டையின் மஞ்சள் கரு மேல் இந்தப் பழி ஏன் வந்தது? அதில் கலந்திருக்கும் கொலஸ்ட்ரால் எனும் பொருளால் மட்டுமே அது தீண்டத்தகாத பொருளாக மாறி நிற்கிறது. கொலஸ்ட்ரால் என்பது அத்தனை தீண்டத்தகாத பொருளா?
முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் ஏ - கண் நலம்.
கால்சியம் / விட்டமின் டி - எலும்பு நலம்
பொட்டாசியம் / மெக்னீசியம் - இதய நலம்
விட்டமின் பி6 / பி12 - நரம்பு மண்டல நலன்
ஆகிய அனைத்து நல்லவைகளையும் வைத்திருக்கும் மஞ்சள் கருவை அதில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்ற ஒரு காரணத்தைக் கூறி குப்பையில் வீசுவதும் தகுமோ?
உணவு மூலம் உண்ணும் கொலஸ்ட்ராலுக்கும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கும் ஓரளவுக்கு தான் தொடர்புபடுத்த முடிகிறது.
நமது ஒவ்வொரு செல்களின் பாதுகாப்பு அரண்களான ப்ளாஸ்மா மெம்ப்ரேன் எனும் சுவர் பாஸ்ஃபோ லிபிட் எனும் கொலஸ்ட்ரால் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
உயிர் பிழைக்க உதவும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அனைத்துக்கும் கொலஸ்ட்ரால் தேவை. நம் இனம் தளைத்தோங்க உதவும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கு கொலஸ்ட்ரால் தேவை.
இதன் காரணமாகத் தான் நாம் உண்டாலும் உண்ணாவிரதத்தில் இருந்தாலும் கொலஸ்ட்ராலை நமது கல்லீரல் உற்பத்தி செய்யும் ஆற்றலுடன் விளங்குகிறது.
இதய நோய்க்கும் இதய ரத்த நாள அடைப்புக்கும் மூளை ரத்த நாள அடைப்புக்கும் உணவில் மாவுச்சத்து அதிகமாக உட்கொள்வதும், இனிப்பு சுவை கொண்ட உணர்வுகளுக்கு அடிமையானதும், மது புகை போன்ற போதை வஸ்துகளும், உடல் உழைப்பற்ற மன அழுத்தம் நிரம்பிய பணத்தை மட்டுமே நோக்கி ஓடக்கூடிய நமது வாழ்க்கை முறை தான் காரணம்.
அதை விடுத்து முட்டையில் உள்ள மஞ்சள் கரு மேல் மட்டும் பழியைப் போட்டு நாம் தப்பித்துக்கொள்ள முடியுமா ? கொலஸ்ட்ராலை வில்லனாகப் பார்க்கும் போக்கு மாற வேண்டும்.
- டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
- குறட்டை வராமல் தடுக்க தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.
- மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை தூங்கும்போது மட்டும் வருகிறது. ஏனெனில், தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான்.
அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.
சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு. புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.
குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது 'அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா' எனப்படும். அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக்குறைந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.
ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப்பாதை மீண்டும் திறந்து கொள்ள வழி செய்து விடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக் கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.
குறட்டை வராமல் தடுக்க தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.
மல்லாந்து படுக்க வேண்டாம்.
ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.
உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது.
- அருண் நாகலிங்கம்






