என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • அய்யாவுக்கு பிறகே அன்புமணி.
    • அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தேவையற்ற பொய்களை கூறி அன்புமணி மாவட்ட செயலாளர்களை மிரட்டினார்.

    * என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிற அளவுக்கு அன்புமணியின் செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன.

    * அய்யாவுக்கு பிறகே அன்புமணி.

    * என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடுமுழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள்.

    * அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.

    * பா.ம.க. தொண்டர்களை நான் வழிகாட்டிகளாக நினைக்கிறேன்.

    * இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?

    இவ்வாறு ராமதாஸ் கூறினார். 

    • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.
    • தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அன்புமணி மீதான ஆதங்கத்துடன் பேசினார். மேலும் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

    ராமதாஸ் கூறியதாவது:-

    * ஒத்து போயிருந்தால் ஓரிரு ஆண்டுகளில் நானே முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன்.

    * இன்னும் ஓரிரு ஆண்டுகள் பாமகவுக்கு தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா என கேட்பதற்கு அவமானமாக உள்ளது.

    * அன்புமணி பா.ம.க. தலைவராக்கப்பட்ட போது ஆனந்த கண்ணீட் விட்டேன்.

    * என்னை மானபங்கம் செய்துவிட்டார் அன்புமணி.

    * தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.

    * தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.

    * குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் என கூறினார். 

    • நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.
    • அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அன்புமணியை செயல் தலைவர் என்று குறிப்பிட்டு பேசினார். மேலும் தண்ணீர் விட்டே வளர்த்தோம், இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என பாடியிருப்பார் பாரதி என்று சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினார்.

    இதையடுத்து அவர் கூறியதாவது:-

    * நான் தொடங்கிய 34 அமைப்புகளை சேர்ந்த நான் நியமித்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தனர்.

    * சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

    * நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.

    * அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.

    * ஜி.கே.மணி, சிவபிரகாசம் ஆகிய இருவரையும் தூது அனுப்பினேன். இருவரையும் சந்திக்க அன்புமணி சம்மதிக்கவில்லை.

    * என்னை நம்ப முடியாது என அன்புமணி கூறினார்.

    * கொள்ளு பேரன், பேத்திகளோடு கொஞ்சி விளையாடுங்கள் என என்னிடம் கூறினர்.

    * நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று முடிவுக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கிறேன்.

    * எல்லாம் தனக்கே வேண்டும் என எண்ணுகிறார் அன்புமணி.

    * தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களை நான் சந்தித்து கொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு ராமதாஸ் கூறினார். 

    • ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    திண்டிவனம்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்றது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த செல்வன், அவரது மனைவி ஆன்சி, குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகியோர் பயணம் செய்தனர்.

    இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் செல்வன் குழந்தைக்கு உணவு வாங்குவதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் செல்வன் வருவதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கினார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    அதன் பின்னர் பஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவிற்காக நிறுத்தப்பட்டது. அங்கு, பஸ் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் சேர்ந்து இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை மற்றும் தடியால் செல்வன், ஆன்சி தம்பதியினர் மற்றும் அவருடன் வந்த அவரது உறவினர் ரிஷாந்த் ஆகியோரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வன், ஆன்சி தம்பதியினர் கொடுத்த புகார் பேரில் போலீசார் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    மேலும் தம்பதியினரை தாக்கியதாக கூறப்படும் டிரைவர்களான திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் தென்காசி மாவ ட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த ராம கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாற்று பஸ் டிரைவர் மூலம் பஸ் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
    • ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியது. இதனால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியடைந்தனர்.

    இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.

    இந்த சந்திப்புக்கு பின் கட்சியிலும், தேர்தலிலும் பா.ம.க.வின் நிலைப்பாடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் அன்புமணிக்கு எதிராக அடுத்தடுத்து புதிய நிர்வாகிகளை நியமித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

    • எனக்கும் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளது.
    • குருமூர்த்தி, சைதை துரைசாமியுடன் பேசி உள்ளேன்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

    இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து 3 நாள் பயணமாக சென்னைக்கு காரில் புறப்பட்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * வரும் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.

    * எனக்கும் குருமூர்த்திக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். குருமூர்த்தி, சைதை துரைசாமியுடன் பேசி உள்ளேன்.

    * இருவரிடமும் என்ன பேசினேன் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார். 

    • ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    • ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. முன்னாள் தலைவர் பேராசிரியர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்-அன்புமணி இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. நல்ல செய்தி வரும் என ராமதாஸ் கூறியது சமாதானம் என கூறலாம்.

    ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.
    • நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 150ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பழமையான இந்த வார சந்தையில் ஆடு, மாடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்க ப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானிகொடுப்பதற்காக ஏராளமான இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக இன்று காலையில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.

    வெள்ளிக்கிழமை வார சந்தையான இன்று அதிகாலை 3மணி முதலே விவசாயிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்ப்பதற்காக கொண்டு வந்தனர். ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.

    மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர்.

    குறிப்பாக நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 20 ஆயிரம் முதல் 30ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    • டாக்டர் ராமதாஸ் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக பா.ம.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், டாக்டர்.அன்புமணி ராமதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதனை தொடர்ந்து பா.ம.க. மாநில பொருளாளர், பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் போன்ற பல்வேறு நிர்வாகிகளை தொடர்ந்து மாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் டாக்டர் ராமதாசை நேற்று அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 45 நிமிடம் சந்தித்து விட்டு அங்கிருந்து சென்றார். மேலும் ராமதாசை சமாதானம் செய்வதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று இரவு பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் சிலரை டாக்டர்.ராமதாஸ் நியமனம் செய்ய உள்ளார். இதனால் தைலாபுரம் தோட்டத்திற்கு பா.ம.க.வினர் வருகை தந்துள்ளனர்.

    மேலும் ரெயில்வே துறை முன்னாள் மத்திய இணை மந்திரி அரங்கவேலு, பா.ம.க. முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் ஆகியோர் டாக்டர்.ராமதாசுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டாக்டர் ராமதாஸ் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக பா.ம.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இன்றும் பா.ம.க. நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்திற்கு வர தொடங்கி உள்ளனர்.

    • அன்புமணியுடன் அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் தைலாபுரத்திற்கு வந்துள்ளார்.
    • ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய முடிவை அறிவிப்பார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்துள்ளார். அன்புமணியுடன் அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் தைலாபுரத்திற்கு வந்துள்ளார்.

    அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று குற்றம் சாட்டிய ராமதாசிடம், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவரா? பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு இன்று பதில் அளிப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார்.

    அதன்படி, ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய முடிவை அறிவிப்பார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • முகுந்தன் இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையில் முகுந்தனுக்கு பதிலாக சுரேஷுக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என பா.ம.க. வட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வந்துள்ளனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி ராமதாசை பற்றி பல பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். மேலும் கடந்த 2 நாட்களாக அன்புமணி ஆதரவாளர்களுக்கு மாற்றாக புதியதாக விழுப்புரம், மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார், திருவள்ளூர், ஈரோடு, போன்ற பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமித்தார். மேலும் மாநில பொருளாளர் திலக பாமாவுக்கு பதிலாக திருப்பூரை சேர்ந்த சையத் மன்சூர் உசேனை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார்.

    இந்த நிலையில் மாநில பொருளாளர் திலகபாமா மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் போன்ற பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் தொடர்வார்கள் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சென்னையில் நடந்த பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று ஆடிட்டர் சுப்புரத்தினம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் பாபு ஆகியோர் டாக்டர் ராமதாசை சமாதானம் செய்ய தைலாபுரம் தோட்டத்துக்கு வந்துள்ளனர். 9.40 மணியளவில் சென்ற இவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக டாக்டர் ராமதாசுடன் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் தற்போது டாக்டர் ராமதாஸை சந்திக்க வந்துள்ளார். முகுந்தன் இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையில் முகுந்தனுக்கு பதிலாக சுரேஷுக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என பா.ம.க. வட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கும் டாக்டர் ராமதாஸ் மாவட்ட பொறுப்புகள் வழங்க உள்ளதாகவும் பா.ம.க. வட்டாரத்தில் தெரிய வருகிறது.

    • பா.ம.க.வில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி பிரச்சனை.
    • பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நான் பா.ம.க. சிதற வேண்டும் என நினைப்பேனா.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ம.க.வில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி பிரச்சனை. இது குறித்து கருத்து தெரிவிக்கும் சூழ்நிலையில் நான் இல்லை. நான் கட்சிக்கும் ராமதாஸ்-அன்புமணிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கட்சிக்காகவும் மக்கள் பிரச்சனைக்காகவும் உழைத்தவன் நான். ஆனால் என்னை பற்றி அவதூறு கருத்துகளை சிலர் பரப்பி வருகின்றனர்.

    ராமதாசும் அன்புமணியும் விரைவில் இணைய வேண்டும் என்பது தான் பா.ம.க.வினரின் ஆசை. கால சூழ்நிலையில் பா.ம.க.வில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது சோதனையான காலம். என்ன காரணமோ தெரியவில்லை. பா.ம.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க. விரிசலுக்கு நான் எந்த விதத்திலும் காரணமில்லை. இந்த தகவலை கேட்ட நான் கண்ணீர் விட்டு கதறினேன். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நான் பா.ம.க. சிதற வேண்டும் என நினைப்பேனா.

    நான் 2 முடிவுகள் எடுத்துள்ளேன். ஒன்று குடும்பத்தோடு தலைமறைவு ஆவது. மற்றொன்று உயிரை துறப்பது. இது தான் வழி என நினைக்கிறேன். என்னை பற்றி உங்களுக்கு தெரியும். ராமதாஸ், அன்புமணியை சந்தித்து சமாதானம் பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×