என் மலர்
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதான நிலையில் 2 எந்திரங்கள் மாற்றப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகியது.
காட்பாடி அருப்புமேடு 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 56 வது பூத்தில் எந்திரம் பழுதானது.
வேலூர் கொசப்பேட்டை மடத்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 39 வது வார்டில் 195 வது பூத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 104 வது பூத்திலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. அதில் உடனடியாக 4 எந்திரங்கள் சரி செய்யப்பட்டன.
2 வாக்குச் சாவடிகளில்மாற்று எந்திரம் வைக்கப்பட்டது.இதையடுத்து30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
வேலூர் கொசப்பேட்டை மடத்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 39 வது வார்டில் 195 வது பூத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 104 வது பூத்திலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகியது.
காட்பாடி அருப்புமேடு 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 56 வது பூத்தில் எந்திரம் பழுதானது.
வேலூர் கொசப்பேட்டை மடத்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 39 வது வார்டில் 195 வது பூத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 104 வது பூத்திலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. அதில் உடனடியாக 4 எந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 2 வாக்குச் சாவடிகளில்மாற்று எந்திரம் வைக்கப்பட்டது. இதையடுத்து 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 6 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகியது.
காட்பாடி அருப்புமேடு 12-வது வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 56 வது பூத்தில் எந்திரம் பழுதானது.
வேலூர் கொசப்பேட்டை மடத்தெருவில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 39 வது வார்டில் 195 வது பூத்தில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், 104 வது பூத்திலும் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. அதில் உடனடியாக 4 எந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 2 வாக்குச் சாவடிகளில்மாற்று எந்திரம் வைக்கப்பட்டது. இதையடுத்து 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளை தி.மு.க. கைப்பற்றும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி காட்பாடி டான் போஸ்கோ பள்ளி வாக்குசாவடியில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி வாக்களித்தனர். அப்போது துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளை தி.மு.க. கைப்பற்றும்.
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டுவது விஷமத்தனமானது.
முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவோம் எனக்கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. அதை தடுக்க தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.
இஸ்லாமியர்கள், இந்துக்கள் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை. அப்படி நான் பேசியதாக நிரூபிக்கப்பட்டால் பகிரங்க மன்னிப்பு கேட்பேன்.
வேலூர் மாநகராட்சி காட்பாடி டான் போஸ்கோ பள்ளி வாக்குசாவடியில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி வாக்களித்தனர். அப்போது துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளை தி.மு.க. கைப்பற்றும்.
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டுவது விஷமத்தனமானது.
முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவோம் எனக்கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. அதை தடுக்க தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.
இஸ்லாமியர்கள், இந்துக்கள் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை. அப்படி நான் பேசியதாக நிரூபிக்கப்பட்டால் பகிரங்க மன்னிப்பு கேட்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... பூஸ்டர் டோஸ் தடுப்பூசியால் எச்.ஐ.வி. வருமா?: புதிய பரபரப்பு
வேலூரில் உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூரில் உள்ளூர் கட்டணத்தில் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சவுதி, அரேபியா, ஓமன், கத்தார், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இன்டர்நேஷ்னல் (ஐஎஸ்டி) அழைப்புகளை ஆப்மூலமாக வழங்கி வந்தனர்.
இதனால், தொலைத்தொடர்பு துறைக்கு தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதை பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
சத்துவாச்சாரி தாட்கோ நகரில் உள்ள கடையை வாடகை எடுத்து, 4 பேர் வீட்டு உபயோக பொருளான பிரிட்ஜ் சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்தனர். இவர்கள் கூட்டாக சேர்ந்து உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு அழைப்பு வழங்கியது தெரியவந்தது.
இந்நிலையில், இவர்களின் கடைக்கு தனிப்படை போலீசார் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்றிரவு சென்றனர். கடையில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
தாட்கோ நகரில் உள்ள கடையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கிருந்த ஆவணங்கள் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வற்றை அவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கடையில் இருந்து நவீன கருவிகள் பறிமுதல் செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சாதரணகட்டண அழைப்பில் எப்படி வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டார்கள் எந்தெந்த நாடுகளுக்கு யாரிடம் பேசப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்தனர். இந்த சம்பவம் வேலூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாட்கோ நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது 27) கொணவட்டத்தை சேர்ந்த நவாஸ் ஷெரீப் (26) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் சைதாப் பேட்டையை சேர்ந்த பாவோ ஷரீப் (26) கொணவட்டம் சல்மான் ஷரீப் ஆகியோரை தேடி வருகின்றனர்.
ஒடுகத்தூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டேன் என தற்கொலை நாடகமாடிய தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஓங்க பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 33) கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்தார்.
ஆம்பூரை அடுத்த மேல் சானாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் சத்யா (26) ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு 2&வது திருமணம் நடந்தது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா அவரது தம்பிக்கு போன் செய்து கணவர் குடும்பத்தினர் ரூ.50,000 கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். சத்யாவின் குடும்பத்தினர் மருமகன் ரவி மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதானம் செய்து வைத்தனர்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ரவி சத்யாவை கடுமையாக தாக்கினார். மேலும் அவரது கழுத்தை நெரித்தார். இதில் சத்யா துடிதுடித்து இறந்தார்.
சத்யா உடலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக ரவி தெரிவித்தார். ஆனால் சத்யாவின் கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தது.இதை கண்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர்.
இதனையடுத்து 50&க்கும் மேற்பட்டோர் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்யாவை ரவி மற்றும் அவரது உறவினர்கள் கொலை செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தனர். போலீசார் ரவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது ரவி மனைவியை அடித்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.
ரவியை போலீசார் கைது செய்தனர்.அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
திருமணமான புதிதில் சத்யாவுடன் சந்தோசமாக வாழ்ந்தேன். நான் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். எனக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சத்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி என்னிடம் அது பற்றி கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
கடந்த சில நாட்களாக அவர் எனக்கு தொந்தரவு அளிக்கத் தொடங்கினார். நேற்று முன்தினம் இரவு இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் சத்யாவை அடித்தேன். மேலும் அவரது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் இறந்து விட்டார்.
போலீசார் கைது செய்வார்கள் என்ற பயத்தில் சத்யாவின் உடலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டேன்.
பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் சத்யாவின் கழுத்தில் இருந்த நகக்கீறல்கள் மூலம் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 628 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம் பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுக்கத்தூர், திருவலம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 வார்டுகளில் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் 58 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. மாநகராட்சியில் மட்டும் 354 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.தேர்தல் பணியில் 1402 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் 1,99, 505 ஆண்கள், 2 லட்சத்து 15 ஆயிரத்து 357 பெண்கள் இதர வாக்காளர்கள் 46 பேர் என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 908 வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர் மாநகராட்சியில் 419 வாக்குச் சாவடிகளும் குடியாத்தம் நகராட்சியில் 91, பேர்ணாம்பட்டு நகராட்சியில் 50, ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 பள்ளிகொண்டா பேரூராட்சியில் 23, பென்னாத்தூர் பேரூராட்சியில் 15, திருவலம் பேரூராட்சியில் 15 என மொத்தம் 628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டுள்ளன. மேலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இதில் வேலூர் மாநகராட்சியில் 67 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 87 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த வாக்குச்சாவடிகளை நேரடியாக கண்காணிப்பார்கள். இது தவிர கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு அரசியல் கட்சியினர் ஓட்டு சேகரிக்க, கூட்டமாக வர தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வாக்குச்சாவடிகளில் அருகே 100 மீட்டர் தொலைவில் வெள்ளை நிற கோடு வரையப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர மாக தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
பள்ளிகொண்டா அருகே 5 ஏக்கர் கரும்பு தோட்டம் தீவைத்து எரிக்கப்பட்டதற்கு தேர்தல் விரோதம் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அருகே உள்ள கீழாத்தூர் கிராமத்தில் விவசாயிகள் பலர் கரும்பு பயிரிட்டுள்ளனர்.இன்று காலை பள்ளி கொண்டா பேரூராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 5 பேருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
வேகமாக பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இதே போல அதே பகுதியில் உள்ள 10 விவசாய மின் மோட்டார்கள் ஒயர்கள் இணைப்பு மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டுள்ளது.
கரும்பு பயிர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மின் மோட்டார் ஒயர்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
எரிக்கப்பட்ட கரும்பு தோட்டத்தின் உரிமையாளர்கள் 5 பேர் பள்ளிகொண்டா பேரூராட்சி தேர்தலில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
எனவே தேர்தல் விரோதம் காரணமாக கரும்பு தோட்டத்திற்கு தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநகராட்சி தேர்தலையொட்டி வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது
வேலூர்
வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதனையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தக்கூடிய மை உள்ளிட்ட பொருட்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:&
வேலூர் மாவட்டத்தில் 7 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதனையொட்டி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தேர்தலில் 3, 200 அரசு ஊழியர்கள் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்று 3&ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.இதில் அவர்களுக்கு பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
நாளை வாக்குப் பதிவின் முடியும் நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
காட்பாடி பள்ளி குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளர் பிரதாப் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட 15 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், தேர்தல் பார்வையாளர் பிரதாப், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகா£¤கள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம் ,மின்சார வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.
குடியாத்தம் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.5 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சிக்கு வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதனையொட்டி குடியாத்தம் நகருக்கு வெளியூரிலிருந்து வரும் முக்கிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்தும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலையில் தேர்தல் குடியாத்தம் அடுத்த சித்தூர்கேட் பலநேர்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலரும் வேலூர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலக கண்காணிப்பாளர் சங்கரன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், காவலர் வசந்தப்ரியா உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது காரில் ரூ.5 லடசம் இருந்தது.காரில் வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி சாத்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷம்ஷுர்அலி அவரது மனைவி பர்வீன் என தெரியவந்தது அவர்கள் குடியாத்தம் பகுதியில் நகை வாங்க லட்சம் பணத்துடன் செல்வது தெரியவந்தது.
அவர்களிடம் 5 லட்ச ரூபாய்க்கான உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் 5 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் குடியாத்தம் நகராட்சி தேர்தல் பார்வையாளர் வெங்கட்ராமன், குடியாத்தம் நகராட்சி ஆணையாளரும் தேர்தல் அலுவலருமான திருநாவுக்கரசு ஆகியோர் வசம் ஒப்படைத்தனர்.
பாலாற்றில் உடைந்த பைப்லைன் சீரமைக்கப்பட்டதால் வேலூருக்கு ஓரிரு நாட்களில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளத்தின் காரணமாக பாலாற்று படுகையில் புதைக்கப் பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான பைப் லைன்கள் அடித்து செல்லப்பட்டு சேதமானது. இதனால் காவிரி குடிநீரை நம்பியிருந்த திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது பாலாற்றில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. பைப்லைன் உடைந்து இருந்ததால் ஆற்றில் இருந்து மண் சேர்ந்துள்ளது இதனால் கலங்கலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஓரிரு நாட்களில் மாநகராட்சி பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்துவாச்சாரி கானார் தெரு, நேதாஜி நகர், அன்பு நகர், டபுள் ரோடு பகுதிகளில் 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கானார் தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியும் பழுதாகி உள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டு மோசடி கும்பலுடன் 4 பேருக்கு தொடர்பா என சத்துவாச்சாரியில் உளவுத்துறை போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச் சாரியில் உள்ளூர் கட்டணத்தில் ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சவுதி, அரேபியா,ஓமன்,கத்தார், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இன்டர்நேஷ்னல்(ஐஎஸ்டி) அழைப்புகளை ஆப்மூலமாக வழங்கி வந்தனர்.
இதனால், தொலைத்தொடர்பு துறைக்கு தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதை பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
சத்துவாச்சாரி தாட்கோ நகரில் உள்ள கடையை வாடகை எடுத்து, 4 பேர் வீட்டு உபயோக பொருளான பிரிட்ஜ் சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்தனர். இவர்கள் கூட்டாக சேர்ந்து உள்ளூர் கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு அழைப்பு வழங்கியது தெரியவந்தது.
இந்நிலையில், இவர்களின் கடைக்கு தனிப்படை போலீசார் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்றிரவு சென்றனர். கடையில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சத்துவாச் சாரியை பகுதியை சேர்ந்த அப்துல்ஜாபர்(27)உட்பட 4 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இன்று காலை தாட்கோ நகரில் உள்ள கடையில் மத்திய உளவுப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் அங்கிருந்த ஆவணங்கள் கம்ப்யூட்டர் உள்ளிட்ட வற்றை அவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.கடையில் இருந்து நவீன கருவிகள் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சாதரணகட்டண அழைப்பில் எப்படி வெளி நாடுகளுடன் தொடர்பு கொண்டார்கள். வெளிநாட்டு மோசடி கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உண்டா-? எந்தெந்த நாடுகளுக்கு யாரிடம் பேசப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர். அவர்களுடைய வீடுகளிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பில் மட்டுமே இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள் ளார்களா? உட்பட பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.






