என் மலர்tooltip icon

    வேலூர்

    வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்சனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் குடியாத்தம் காந்திநகரில் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது.
    இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று இரவு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தார். 

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம், வாக்குப்பெட்டிகள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள் இயக்கப்படும் அறை, வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வழிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமமூர்த்தி, ரவிச்சந்திரன் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், சுவாதி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஆய்வைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் மிகவும் சுமூகமாக நடைபெற்றது.

    அதேபோல் வாக்கு எண்ணிக்கையும் சுமூகமாக நடைபெற வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. 

    வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது இதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
     
    வேலூர் மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 350 போலீசாரும், குடியாத்தம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 200 போலீசாரும், பேர்ணாம்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 150 போலீசாரும், 

    பள்ளிகொண்டா வாக்கு எண்ணிக்கை மையத்தில் 150 போலீசாரும் மற்றும் 150 போலீசார் பிரச்சினைக்குரிய இடங்களில் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் படுவார்கள் நல்ல முறையில் சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்சினைகளில் ஈடுபடுவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போது அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளருடன் ஒரு முகவர் மட்டுமே வர வேண்டும், செல்போன் அனுமதி இல்லை ஒரு சுற்று முடிந்தவுடன் அந்த சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் வெளியே சென்ற பின் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும், 

    அந்த சுற்றில் வரும் வார்டுகளின் வேட்பாளர்களும் அவர்களது முகவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் கண்டிப்பாக எக்காரணம் கொண்டும் செல்போன்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை வேட்பாளர் மற்றும் அவரது முகவர்கள் பேனா மற்றும் பேப்பர் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
    ஜெயிலில் கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா பேசினார்.
    வேலூர்:

    வேலூர் சிறை காவலர் பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தலைமை காவலர்களுக்கு 5 நாள் புத்தாக்க பயிற்சி இன்று தொடங்கியது.

    வேலூர் சரக டிஐஜி செந்தாமரை கண்ணன் தலைமை தாங்கினார். இயக்குனர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி வரவேற்று பேசினார்.

    வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா பயிற்சியை தொடங்கி வைத்தார்.அவர் பேசியதாவது.

    சிறைக்கு குற்றவாளியாக வரும் கைதிகள் குடும்ப சூழல் காரணமாக குற்றசெயலில் ஈடுபட்டு சிறைக்கு வருகின்றனர். வாழ்க்கைக்கு படிப்பு என்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பயிற்சியும் முக்கியம்.

    தொடர்ந்து பயிற்சி வழங்குவதால் மட்டுமே துறையில் சாதிக்க முடியும். அதீத நம்பிக்கையும் தவறுக்கு வழிவகுக்கும். சீருடை பணியாளர்களாகிய நீங்களும் நானும் சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே பொது மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

    இந்த பயிற்சியினை முறையாக பயன்படுத்தி சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
    வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 4.50 மணிக்கு 100-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர்.அவர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் டோக்கன் வழங்கினார்.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. பல இடங்களில் எந்திரம் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு அதற்கு பிறகு ஓட்டு போட அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று மாலை 3 பேர் மது குடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள வாக்குப்பதிவு எந்திரமும் பழுதானது. அதனால் 2.30 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.அதற்குப்பிறகு புதியதாக வாக்குப்பதிவு எந்திரம் கொண்டுவரப்பட்டது.

    மாலை 5 மணிக்கு அங்கிருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    வேலூர் மாநகராட்சி 58-வது வார்டு அரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக வேட்பாளர் புகார் அளித்தனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் மாலை 5 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 4.50 மணிக்கு 100-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர்.அவர்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர் டோக்கன் வழங்கினார்.

    அவர்களுக்கு மட்டும் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடியில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.வேலூர் மாநகராட்சி தேர்தலில் 65.50 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    குடியாத்தம் நகராட்சியில் 67.35 சதவீதம், பேரணாம்பட்டு நகராட்சியில் 63.62 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் 78.78 சதவீதம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 77.76 சதவீதம், பென்னாத்தூர் பேரூராட்சியில் 81.65 சதவீதம், திருவலம் பேரூராட்சியில் 80.7 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    மொத்தமாக 66.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    மொத்தமாக ஒரு மாநகராட்சி 2 நகராட்சி 4 பேரூராட்சிகளில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 156 ஆண்கள், 3 லட்சத்து 162 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேர் உள்பட 5 லட்சத்து 78 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 883 ஆண்கள், 1லட்சத்து 97 ஆயிரத்து 780 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 11 பேர் உள்பட 3 லட்சத்து 85 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

    இதில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இதனால் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை பெண்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் ஆகிய பேரூராட்சி களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் 22-ந் தேதி நடைபெறுகிறது.

    வேலூர் மாநகராட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது. இதேபோல குடியாத்தம் நகராட்சிக்கு ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பேரணாம் பட்டு நகராட்சி வாக்கு எண்ணிக்கை மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாகிப் கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    ஒடுகத்தூர், பள்ளி கொண்டா பேரூராட் சிகளுக்கு பள்ளி கொண்டா லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியிலும், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை பள்ளி கொண்டா டிரங்ரோட்டில் உள்ள ஆர்.சி.எம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டது. 

    வாக்குச்சாவடிகளில் இருந்து அந்தந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறையில் அனைத்து எந்திரங்களும் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    வாக்கு பெட்டிகள் இருக்கும் அறைகள் மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.அந்த அறை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    மேலும் மையங்கள் நுழைவுவாயில் பகுதிகளில் கண்காணிப்பு கேமராயக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக் கப்படுகிறது.
    வேலூர் மாநகராட்சி 58-வது வார்டில் வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடந்தது. ஏற்கனவே எந்தெந்த வாக்குச்சாவடிக்கு எந்த வாக்குபதிவு எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வேட்பாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி 58-வது வார்டு அரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்களிக்கச் சென்றார். அவர் வாக்குச்சாவடிக்கு சரியான முறையில் எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை அவர் வைத்திருந்த பட்டியலில் சரி பார்த்தார்.

    அப்போது அந்த வாக்குச் சாவடியில் வேறு எண் கொண்ட எந்திரம் வைக்கப்பட்டிருந்தது. இதை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் அவர் விளக்கம் கேட்டார். 

    தகவல் அறிந்த மற்ற வேட்பாளர்களும் வாக்குச்சாவடிக்கு வந்தனர், அப்போது அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
    ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் ஓட்டு போட காத்திருந்தனர். 

    மேலும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.வாக்குப்பதிவு எந்திரம் எப்படி மாறியது என்பது குறித்து வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அங்கு வந்தார்.

    வேட்பாளர்கள் பெயர் சின்னம் ஒட்டுவதற்கு முன்பாக வெளியிடப்பட்ட பட்டியலை இங்குள்ள வேட்பாளர் கையில் வைத்துள்ளார். அதன்படி எந்திரங்கள் ஒதுக்கப்படவில்லை. 

    வேட்பாளர்கள் பெயர் சின்னம் ஒட்டிய பிறகு மீண்டும் கம்ப்யூட்டரில் குலுக்கல் முறையில் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அந்த அடிப்படையில்தான் 58-வது வார்டுக்கு எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதுபற்றி அனைத்து வேட்பாளர்களிடம் முறையாக கையெழுத்து வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    அப்போது வேட்பாளர் கள் கையெழுத்து வாங்கும் போது எந்திரம் மாற்றம் குறித்து தெரிவிக்காமல் வாங்கி விட்டீர்கள் எனவே இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.

    இதனை தொடர்ந்து ஏற்கனவே வைத்திருந்த எந்திரத்தை மூடி சீல் வைக்க கலெக்டர் உத்தர விட்டார்.அந்த எந்திரத்தில் 175 வாக்குகள் பதிவாகி இருந்தது. அப்படியே அந்த எந்திரம் மூடி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய வாக்குப்பதிவு எந்திரம் வரவழைக்கப்பட்டு தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்கனவே 175 வாக்குகள் பதிவாகி இருந்த எந்திரம் 2-வதாக வைக்கப்பட்ட எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் 100 வயதிலும் ஆர்வமாக வந்து மூதாட்டிகள் ஓட்டு போட்டனர்
    வேலூர்:

    வேலூர்,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

    பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து காலை 7 மணிமுதல் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்களிக்க வந்தவர்களில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்பட தள்ளாத வயதிலும் மூதாட்டிகள் தங்களது வாக்கை பதிவு செய்தனர். 

    காட்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வீல் சேரில் அமர்ந்து வந்து மூதாட்டி ஒருவர் தனது வாக்கை பதிவு செய்தார். காகித பட்டறையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு ஊன்று கோலுடன் வந்து மூதாட்டி வாக்களித்தார். 

    இதேபோல கண்ணமங்கலம் பேரூராட்சியில் வாக்கு மையத்திற்கு 100 வயதுடைய மூதாட்டியை  அவரது வாக்கை பதிவு செய்ய வாக்கு மையத்திற்கு தூக்கி வந்தனர். 

    இதேபோல ராணிப் பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க 101 வயதுடைய மூதாட்டி ஒருவர் வாக்கு மையத்திற்கு வந்து ஆர்வமுடன் தனது வாக்கை பதிவு செய்தார். 

    கர்ப்பிணிகளும் வரிசையில் நின்று காத்திருந்து ஓட்டு போட்டனர். முதல் முறையாக ஓட்டு போடும் இளம் வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
    வேலூரில் வாக்குச்சாவடி அருகே ஓட்டு சேகரித்ததால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் திடீர் மோதலில் ஈடுபட்டனர்
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்குட் பட்ட 45- வது வார்டு வேலப்பாடி மரக்கடை கந்தசாமிமுதலி தெரு மாநகராட்சிப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

    வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கட்சியினர் பிரசாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வினர் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    வாக்குச்சாவடிக்கு மிக அருகில் கட்சி துண்டு அணிந்து வந்ததாகவும், வாக்குச்சாவடி அருகே வாக்கு கேட்டதாகவும் கூறி தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் காரசாரமாக பேசிக் கொண்டனர்.

    இதனால் வாக்குச்சாவடி அருகே பதட்டம் நிலவியது. வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    அவர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் வாக்குச்சாவடி அருகே நின்றிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
    வேலூர் காகிதப்பட்டறை வாக்குச் சாவடிக்குள் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சுற்றியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச் சாவடி அமைக் கப்பட்டு இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்ட இந்த மையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை.

    மேலும் அரசியல் கட்சியினர் வாக்குச் சாவடிக்குள் உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தனர்.

    ஒரு வேட்பாளர் வாக்குச் சாவடியின் வாசலில் நின்றபடி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

    வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் உள்ளே செல்வதை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மேலும் அரசியல் கட்சியினர் உள்ளே கட்சி கரை வேட்டியுடன் நிற்கின்றனர்.

    அவர்களை வெளியேற்றுங் கள் அதற்கு பிறகு நாங்கள் வெளி யேறுகிறோம் என்று ஆவேசமாக பதிலளித்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். 

    இதனையடுத்து வாக்கு சாவடி மையத்தில் இருந்தவர் களை வெளி யேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனாலும் முழுமையாக அவர்களை வெளியேற்ற முடியவில்லை. இதனால் அந்த வாக்குச் சாவடி பதட்டமாக காணப்பட்டது.
    குடியாத்தம் அருகே மரத்தில் கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லத்தேரி செஞ்சி கிரா மத்தை சேர்ந்தவர் வரத ராஜுலு. இவரது மகன் லோகேஷ் (35). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    இதனால், இவர் நேற்று ஆந்திர மாநிலம் , பலமனேர் பகுதியில் உள்ள நண்பர்களை சந்திக்க சென்றார். பின்னர் அப்பகுதியை சேர்ந்த நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ஜெய்சிம்மா (26), அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் மகன் உபேந்திரன் (45), ராஜானா மகன் வம்சிகிருஷ்ணா, சுதாகர் மகன் மகேஷ், ஆகியோருடன் குடியாத்தத்தில் பொருட்கள் வாங்குவதற்காக காரில் வந்தனர்.

    அப்போது தமிழக ஆந்திர எல்லையான குடியாத்தம் அடுத்த ஏர்ரமிட்டா கிராமம் அருகே வந்தபோது மாடு ஒன்று சாலையை கடந்தது. இதைப்பார்த்த ஜெயசிம்மா மாட்டின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினார். அப்போது நிலை தடுமாறி கார் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ஜெயசிம்மா, உபேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    லோகேஷ், வம்சிகிருஷ்ணா, மகேஷ் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவிற்கிடையில் 2 இடங்களில் எந்திரங்கள் பழுது ஏற்பட்டது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் நடைபெறும் தேர்தலுக்காக 91 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    மேலும் வாக்களிக்க வந்தவர்களுக்கு வெப்பமானி சோதனையும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டு அதன் பின்னரே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    குடியாத்தம் நகராட்சி 32வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையம் காமாட்சியம்மன் பேட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. 

    இங்கே வாக்கு பதிவு எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை இதனை அடுத்து புதிதாக அங்கு வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்பட்டது, இதேபோல் நகராட்சி 28 வார்டு வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. 

    அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை இதனையடுத்து உடனடியாக புதிதாக வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்பட்டது இதனால் 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    அதேபோல் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தும் பணி தாமதமாக நடைபெற்றதால் சில இடங்களில் 25 நிமிடம் வரை தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் நேற்று குடியாத்தத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். 

    இதேபோல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையில் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    குடியாத்தத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவிற்கிடையில் 2 இடங்களில் எந்திரங்கள் பழுது ஏற்பட்டது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் நடைபெறும் தேர்தலுக்காக 91 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    மேலும் வாக்களிக்க வந்தவர்களுக்கு வெப்பமானி சோதனையும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டு அதன் பின்னரே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    குடியாத்தம் நகராட்சி 32வது வார்டுக்கான வாக்குச்சாவடி மையம் காமாட்சியம்மன் பேட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. 

    இங்கே வாக்கு பதிவு எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை இதனை அடுத்து புதிதாக அங்கு வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்பட்டது, இதேபோல் நகராட்சி 28 வார்டு வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. 

    அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை இதனையடுத்து உடனடியாக புதிதாக வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்பட்டது இதனால் 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    அதேபோல் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தும் பணி தாமதமாக நடைபெற்றதால் சில இடங்களில் 25 நிமிடம் வரை தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் நேற்று குடியாத்தத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். 

    இதேபோல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையில் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ×