என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
வாக்குச்சாவடி அருகே ஓட்டு சேகரித்ததால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் திடீர் மோதல்
வேலூரில் வாக்குச்சாவடி அருகே ஓட்டு சேகரித்ததால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் திடீர் மோதலில் ஈடுபட்டனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்குட் பட்ட 45- வது வார்டு வேலப்பாடி மரக்கடை கந்தசாமிமுதலி தெரு மாநகராட்சிப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கட்சியினர் பிரசாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வினர் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்குச்சாவடிக்கு மிக அருகில் கட்சி துண்டு அணிந்து வந்ததாகவும், வாக்குச்சாவடி அருகே வாக்கு கேட்டதாகவும் கூறி தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் காரசாரமாக பேசிக் கொண்டனர்.
இதனால் வாக்குச்சாவடி அருகே பதட்டம் நிலவியது. வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் வாக்குச்சாவடி அருகே நின்றிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
Next Story






