என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் நொறுங்கிய காரை படத்தில் காணலாம்.
    X
    விபத்தில் நொறுங்கிய காரை படத்தில் காணலாம்.

    குடியாத்தம் அருகே மரத்தில் கார் மோதி 2 பேர் சாவு

    குடியாத்தம் அருகே மரத்தில் கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லத்தேரி செஞ்சி கிரா மத்தை சேர்ந்தவர் வரத ராஜுலு. இவரது மகன் லோகேஷ் (35). இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    இதனால், இவர் நேற்று ஆந்திர மாநிலம் , பலமனேர் பகுதியில் உள்ள நண்பர்களை சந்திக்க சென்றார். பின்னர் அப்பகுதியை சேர்ந்த நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ஜெய்சிம்மா (26), அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் மகன் உபேந்திரன் (45), ராஜானா மகன் வம்சிகிருஷ்ணா, சுதாகர் மகன் மகேஷ், ஆகியோருடன் குடியாத்தத்தில் பொருட்கள் வாங்குவதற்காக காரில் வந்தனர்.

    அப்போது தமிழக ஆந்திர எல்லையான குடியாத்தம் அடுத்த ஏர்ரமிட்டா கிராமம் அருகே வந்தபோது மாடு ஒன்று சாலையை கடந்தது. இதைப்பார்த்த ஜெயசிம்மா மாட்டின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினார். அப்போது நிலை தடுமாறி கார் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ஜெயசிம்மா, உபேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    லோகேஷ், வம்சிகிருஷ்ணா, மகேஷ் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதியினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×