என் மலர்
வேலூர்
- பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையை தொடர்ந்து பணம் கட்டியவர்கள் வினோத்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது.
- இதனால் வினோத்குமார் மனமடைந்த நிலையில் காணப்பட்டார்.
வேலூர்:
வேலூரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் வட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கிளைகளை தொடங்கியது. மேலும் டெல்லியிலும் இந்த நிதி நிறுவனத்திற்கு கிளை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் காட்பாடியில் இயங்கி வருகிறது.
பங்குசந்தையில் முதலீடு செய்வதாக கூறி பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்துள்ளனர். ரூ.1 லட்சம் பணம் கட்டினால் மாதம் தோறும் ரூ.8000 வட்டி தருவதாக கூறி பண வசூல் செய்துள்ளனர்.
இந்த நிதி நிறுவனத்தில் முக்கிய வி.ஐ.பி.கள், அரசியல் பிரபலங்கள், அரசு அதிகாரிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரும் முதலீடு செய்துள்ளனர். ஏஜெண்டுகள் மூலம் இந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்துள்ளனர் மேலும் அந்த ஏஜெண்ட் மூலமே வாடிக்கையாளர்களுக்கு பணம் வட்டியாகவும் தரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காட்பாடி விஜி ராவ்நகரில் உள்ள நிதி நிறுவன அதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இதேபோல வேலூர் சத்துவாச்சாரி அரக்கோணம் ஆற்காடு காஞ்சிபுரம் திருவண்ணாமலை உள்பட 21 இடங்களில் நிதி நிறுவன கிளை மற்றும் அதனோடு தொடர்புடையவர்கள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவன அலுவலகங்கள் திறக்கப்படாமல் உள்ளன. பணம் கட்டியவர்கள் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர்.
காட்பாடி அருகே உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவரது மகன் வினோத்குமார் (வயது 28). இவர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் நிதிநிறுவன தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவும் செயல்பட்டுள்ளார். அவர் மூலம் சிலர் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளனர்.
தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையை தொடர்ந்து பணம் கட்டியவர்கள் வினோத்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வினோத்குமார் மனமடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்பாடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிதி நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் ஏஜெண்டு ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பணம் கட்டியவர்கள் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.
- நவம்பர் 15-ந் தேதி தொடங்குகிறது
- ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வேலூர்:
இந்திய ராணுவத்தில் சேருவதற் கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 21 ம் தேதி தொடங்கி நவம்பர் 25 ம் தேதி வரை நடக்கிறது.
தகுதி வாய்ந்தவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
அக்னிபாத் திட்டத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வேலூர், திருப்பூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் 21.08.2022 முதல் 25.11.2022 வரை நடைபெற உள்ளது.
தகுதி வாய்ந்தவர்கள் www. joinindianarmy.nic.in . என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.
அதன்படி நாகர்கோவில் அறிஞர் அண்ணா ஸ்டேடியத்தில்வரும் 21-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரையும், கோவை அவினாசி டி.இ.ஏ பொதுப் பள்ளி வளாகத்தில் செப்டம்பர் 20-ந் தேதி முதல் அக்டோபர் 1-ந் தேதி வரையும், வேலூர் கோட்டை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் சென்னை தலைமையிடத்து ஆர் ஓ ஏற் பாட்டின் பேரில் நவம்பர் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஏ. ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆல்வின், உழைக்கும் பெண்கள் மாவட்ட செயலாளர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். கட்டணம் உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும்.
மாணவி ஸ்ரீ மதியின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் தேவதாஸ் கவுரவத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மொத்த கட்டணத்தொகை ரூ.18,850
- வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்
வேலூர்:
வேலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமான வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23 ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருகிற 18-ந்தேதி வரை வழங்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகைமதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்கள் வழங்கப்ப டுகிறது.
நடப்பாண்டு முதல் ஒரு ஆண்டுகால பயிற்சியாகவும், இரு பருவங்களாகவும் வகுப்புகள் நடைபெற உள்ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை. இப்பயிற்சிக்கான மொத்த கட்டணத்தொகை ரூ.18850 ஆகும்.
பயிற்சிக்கான வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.
விண்ணப்பங்கள் வருகிற 18-ந்தேதி மாலை 5.30 மணிவரை வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் மற்றும் நகலுடன் பதிவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் 22.08.2022 மாலை 5.30 மணிக்குள் முதல்வர், வேலூர் கூட்டுறவு மேலாண்மை நிலையம் 9-வது கிழக்கு குறுஞ்சாலை காந்தி நகர் - வேலூர் 632006. என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
மேலும் கூடுதல் தகவலுக்கு தொலைபேசி எண் 0416-2242464 கைபேசி எண் 7845859784 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வாகனம் மோதி விட்டு நிற்க்காமல் சென்றது.
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே உள்ள பெரிய தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எசேந்திரன் மகன் பாபு என்கிற விக்னேஷ் (வயது 20). பிரகாஷ் (20) மேல்மொணவூரை சேர்ந்தவர் சீனு (22) இவர்கள் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தனர்.
பைக்குகள் மீது நேற்று வேலூர் வசூர் பகுதியில் நடந்த திருவிழாவில் மேளம் அடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு வேலூரில் இருந்து 2 பைக்குகளில் ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்த போது வேகமாக வந்த வாகனம் ஒன்று 2 பைக்குகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாபு, சீனு இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.
இதனை நேரில் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பிரகாசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பாபு, சீனு ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக வேலூரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- ஏரிகளில் 60 சதவீதம் மட்டும் நீர் தேக்க முடிவு
- கிளை ஆறுகளிலும் வெள்ளம்
வேலூர்:
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான கனமழை பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது.
இதன் காரணமாக முக்கிய ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தையொட்டி உள்ள ஆந்திர மாநில எல்லை வனப்பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் 300 கன அடி அளவுக்கு தண்ணீர் வெளியேறியது.
திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வாணியம்பாடி அருகேயுள்ள மண்ணாறு மற்றும் கல்லாற்றில் தலா 100 கன அடிக்கு நீர் வரத்து பாலாற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.
மலட்டாற்று, அகரம் ஆறு மற்றும் கவுன்டன்யா ஆற்றில் இருந்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது.
இதன்மூலம், பள்ளிகொண்டா பாலாறு பாலம் பகுதியில் 1,400 கன அடி அளவாகவும், வேலூர் பாலாறு பாலம் பகுதியில் 1,500 கன அடி அளவாகவும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் வெள்ள அளவு 2,000 கன அடியாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் நீர்வ ளத்துறை அதிகாரிகள் பாலாற்றின் வெள்ள அளவை தொடர்ந்து கண்கா ணித்து வருகின்றனர்.
குடியாத்தம் மோர்தானா அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அனைத்தும் அப்படியே கவுன்டன்யா ஆற்றில் 400 கன அடி அளவுக்கு வெளியேறி வருகிறது.
ஜிட்டப்பள்ளி அணை பகுதியில் இருந்து இடது கால்வாய் வழியாக தண்ணீரை கே.வி.குப்பம் தொகுதியில் உள்ள ஏரிகளுக்கு திருப்பிவிட்டுள்ளனர். ஆனால், பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது பெய்து வரும் மழையால் கிடைக்கும் வெள்ள நீர் முழுவதும் பாலாறு வழியாகவே வெளியேறி வருகிறது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு வடகிழக்கு பருவமழையால் அதிகப்படியான நீர்வரத்து இருக்கும். அந்த நேரத்தில் ஏரிகள் நிரம்பி இருந்தால் வெள்ளத்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். எனவே, வரும் அக்டோபர் மாதம் வரை ஏரிகளில் 60 சதவீதத்துக்கு மேல் நீர் இருப்பு வைத்திருக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடவில்லை. மோர்தானா அணையின் இடது கால்வாய் வழியாக மட்டும் நீர் இருப்பு குறைவாக உள்ள கே.வி.குப்பம் தொகுதி ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது'' என்றனர்.
- மகனுக்கு தீவிர சிகிச்சை
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவர் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேலாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் வெங்கடேசன் தனது மகன் கோபிநாத் (21) உடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
ராமாலை தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பலத்த மழை பெய்தது.
அப்போது சாலை ஓரம் இருந்த மரம் ஒன்று தந்தை மகன் சென்று கொண்டிருந்த பைக்கின் மீது திடீரென சாய்ந்தது.
இதில் வெங்கடேசன் மற்றும் கோபிநாத் இருவரின் தலை மீது விழுந்து அப்படியே நசுக்கியது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.
படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் மற்றும் அவரது மகன் கோபிநாத் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தந்தை மகன் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான மின்வாரிய ஊழியர் வெங்கடேசனுக்கு அமுதா என்ற மனைவியும் 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் கோபிநாத் தந்தையுடன் விபத்தில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் விசாரணை
- சமூக வலைதளங்களில் பெண்கள் போட்டோ பதிவிட வேண்டாம் என அறிவுறுத்தல்
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
ஆரணி அடுத்த சேதாரம் பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் மாணவி நட்புடன் பழகி வந்தார். அந்த வாலிபருக்கு சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் நண்பராக இருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியின் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு வாலிபர் புகைப்படம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த புகைப்படத்தை மாணவி பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். மாணவியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாணவி வாலிபரிடம் கேட்டபோது அவர் வேறு ஒரு நபரின் செல்போனில் இந்த புகைப்படம் இருந்தது அதை உனக்கு அனுப்பி உள்ளேன் அவரிடம் இருந்த புகைப்படம் உள்ளிட்ட அனைத்தையும் நான் கைப்பற்றி அழித்து விட்டேன்.
நீ கவலைப்படாதே என்று தெரிவித்துள்ளார். எனினும் சந்தேகம் அடைந்த மாணவி இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அதில் பெண்ணின் நண்பரும் அவரது நண்பரும் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதில் தொடர்புடைய சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆரணி வாலிபரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆரணி வாலிபர் கைது செய்யப்பட்டால் தான் இதன் பின்னணியில் யார் உள்ளார். என்பது தெரியவரும். ஆபாச படத்தை சித்தரித்தது அவர் தானா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இதில் தொடர்புடைய ஆரணி வாலிபர் வேறு பெண்களுக்கு இதே போன்ற புகைப்படம் அனுப்பி உள்ளாரா? என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். பெண்கள் யாரும் தங்களது புகைப்படத்தை வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் பதிவிட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
- வனத்துறையினர் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்
- தடுப்புகளை உடைத்து கார் வேகமாக சென்றது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் பரதராமி அடுத்த கொட்டாளம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது.
ஆந்திராவில் இருந்து கொட்டாளம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வருகிறது அதனால் கொட்டாளம் வனத்துறை சோதனை சாவடியில் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் ஆந்திராவில் இருந்து கொட்டாளம் சோதனை சாவடி வழியாக தமிழக பகுதிக்குள் கார் ஒன்று வந்தது அதனை வனத்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்துப் போது தடுப்புகளை உடைத்துக்கொண்டு பனமடங்கி பள்ளத்தூர் சாலையில் கார் வேகமாக சென்றது.
தொடர்ந்து வனத்துறையினர் அந்த காரை விரட்டிச் சென்றனர். அப்போது வேகமாக சென்ற கார் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது மின் கம்பம் வளைந்து சேதமானது மின் கம்பிகள் தரையில் தொங்கின காரில் இருந்தவர்கள் தப்பி ஓடி உள்ளனர்.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த மின்கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்தினார்.
இதனை தொடர்ந்து அந்த காரை மீட்டு வனத்துறையினர் சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள உயர்ரக 140 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து வனத்துறையினரின் கார் மற்றும் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து குடியாத்தம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து காரின் உரிமையாளர் குறித்தும் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோர்தானா அணை நிரம்பியது
- கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணை குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை யாகும் கடந்த 2000ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. சுமார் 11.50 மீட்டர் உயரமும் 261 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே மோர்தானா அணை நிரம்பி வழிந்தது. அதன்பின் பலத்த மழையால் பல ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வழிந்தோடியது தொடர்ந்து பல மாதங்களாக மோர்தானா அணை நிரம்பி இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் கடுமையான கோடை காலமானதால் நிரம்பியிருந்த மோர்தானா அணையில் 5 சென்டிமீட்டர் அளவு குறைந்து 11.45 மீட்டர் உயரம் இருந்தது பலத்த காற்று அடிக்கும்போது மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் சிறிதளவு வழிந்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் தொடர்ந்து சில நாட்கள் அணைப்பகுதியில் மழை பெய்ததால் மோர்தனனை மீண்டும் 11.50 மீட்டர் அளவிற்கு உயர்ந்தது. 460 கன அடி தண்ணீரை அணைக்கு வந்து கொண்டிருந்தது அந்த தண்ணீர் அப்படியே அணையில் வழிந்து வெளியேறி வருகிறது.
அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருப்பதால் வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் மோர்தானா அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மோர்தானா அணையிலிருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நேற்று இரவே குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது மேலும் மோர்தானா அணையின் தண்ணீர் நள்ளிரவு ஆற்றில் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வந்து குடியாத்தம் நகரை கடந்து சென்றது.
இன்று அதிகாலையில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு மற்றும் நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் ஆற்றில் செல்லும் தண்ணீர் தரைப்பாலத்தில் கண்மாய் வழியாக வெளியேற அடைப்புகளை அகற்றும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 200 மீட்டர் தொலைவில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது
- கிராம மக்கள் அச்சம்
குடியாத்தம்:
குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன.
யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி வனப்பகுதியை ஒட்டியபடி தோனிகான் பட்டி உள்ளது இங்கு வனப்பகுதியை ஒட்டி ஒரு சில விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் வன ஊழியர்கள் தங்கும் கொட்டகையும் உள்ளது. அங்கு வசிக்கும் விவசாயி தவமணி வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த பெரிய ஆடு மற்றும் குட்டி ஆட்டை நேற்று முன்தினம் சிறுத்தைகள் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது.
தவமணி வீட்டிற்கு அருகே வசிக்கும் சிவகுமார் என்பவருக்கு சொந்தமான கொட்டகையில் இருந்த கன்று குட்டி காணவில்லை. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் நேற்று காலையில் வனப் பகுதிக்கு சென்று பார்த்த போது அவர் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. உடலின் ஒரு பகுதி சிறுத்தைகள் தின்ற நிலையில் இருந்தன இதனையடுத்து சிவக்குமார் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு விசாரணை செய்ய கன்று குட்டி இருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு கன்றுக்குட்டி இல்லை சிறுத்தைகள் மீண்டும் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுத்தைகள் ஆடுகளையும் கன்று குட்டியையும் இழுத்துச் சென்ற சம்பவத்தால் வனப்பகுதியை ஒட்டியபடி வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
- பைக்கில் சென்ற போது விபரீதம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). இவர் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேலாக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வெங்கடேசன் தனது மகன் கோபிநாத் ஆகிய 2 பேரும் குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
ராமாலை தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பலத்த மழை பெய்தது. அப்போது சாலை ஓரம் இருந்த மரம் ஒன்று பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தை-மகன் மீது முறிந்து விழந்தது. இது அவர்கள் தலை மீது விழுந்ததால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக வந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை அப்புறப்படுத்தி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசன், கோபிநாத் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






