search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 2 பேர் பலி
    X

    பைக் விபத்தில் மேளம் அடிக்கும் தொழிலாளர்கள் 2 பேர் பலி

    • வாகனம் மோதி விட்டு நிற்க்காமல் சென்றது.
    • கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே உள்ள பெரிய தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எசேந்திரன் மகன் பாபு என்கிற விக்னேஷ் (வயது 20). பிரகாஷ் (20) மேல்மொணவூரை சேர்ந்தவர் சீனு (22) இவர்கள் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தனர்.

    பைக்குகள் மீது நேற்று வேலூர் வசூர் பகுதியில் நடந்த திருவிழாவில் மேளம் அடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு வேலூரில் இருந்து 2 பைக்குகளில் ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்த போது வேகமாக வந்த வாகனம் ஒன்று 2 பைக்குகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாபு, சீனு இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

    இதனை நேரில் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பிரகாசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பாபு, சீனு ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக வேலூரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×