என் மலர்
தேனி
- தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
- குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.
போடி:
தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் முதல்வர் சிவக்குமாரின் வழிகாட்டுதலின் படி, கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை செய்து வருகின்றனர்.
கொடைக்கானல் மன்னவனூர் அரசுமேல்நிலைப்பள்ளி யின் ஆசிரியர் பழனிமுருகன் கொடுத்த தகவலின்படி தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
இது குறித்து ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் கூறியதாவது:-
தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் அழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக காரணங்களுக்காக அழநாட்டை பல சிறு சிறு நாடுகளாகப் பிரித்தனர். அதன்படி மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியான இன்றைய வருசநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இந்தப்பகுதியில் முதுமக்கள் தாழி, பெருங் கற்கால கல்லறைகள், பழைய புதிய கற்கருவிகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கி.பி.13ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த குலசேகரபாண்டியன் (கி.பி. 1297) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று வருசநாடு தங்கம்மாள்புரம் பொட்டியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்டது.
இதில் குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.
இந்த கல்வெட்டு முழுமையாக கிடைக்கப்பெறாததால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இருப்பினும் பாண்டிய மன்னன் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
- தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் வைகை அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 64.07 அடியாக உள்ளது. வரத்து 781 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 4426 மி.கன அடி.
மழை நீடிக்கும் பட்சத்தில் அணையின் நீர் மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.90 அடியாக உள்ளது. வரத்து 710 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3400 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.40 அடி. வரத்து 33 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 383 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் 97 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.
பெரியாறு 1.6, தேக்கடி 2.2, உத்தமபாளையம் 2.4, போடி 2.6, வைகை அணை 16.8, மஞ்சளாறு 30, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 21, வீரபாண்டி 9.2, அரண்மனைப்புதூர் 10.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.5560 மதிப்பிலான காதொலி கருவிகள் 6 பேருக்கும், ரூ.9050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள் 3 பேருக்கும் என 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71630 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
மேலும் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, சிறுபான்மையினர் நல அலுவலர் இந்துமதி, ஆதி திராவிடர் நல அலுவலர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முருக்கோடை-ராயர்கோட்டை இடையே மூலவைகையாற்றின் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது.
- பராமரிப்பு பணி இல்லாததால் பாலம் தொடர்ந்து சேதமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக பாலத்தின் கீழ்பகுதியில் தூண்கள் அமைந்துள்ள இடத்தில் சிமிண்ட் பூச்சு உடைந்து வருகிறது.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகள் வைகை அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. பருவமழை காலங்களில் போதிய மழை பெய்தால் மட்டுமே இப்பகுதி விவசாயிகளுக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகும.
முருக்கோடை-ராயர்கோட்டை இடையே மூலவைகையாற்றின் குறுக்கே 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் பாலம் தொடர்ந்து சேதமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக பாலத்தின் கீழ்பகுதியில் தூண்கள் அமைந்துள்ள இடத்தில் சிமிண்ட் பூச்சு உடைந்து வருகிறது. இதனைசீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் சிமிண்ட் பூச்சு உடைப்பு பெரிதாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சமயங்களில் மண் அரிப்பு அதிகமாகி பாலத்தின் தூண்பகுதியும் சேதமடையும் சூழல் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தில் சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர்.
- நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வண்ணாத்திப் பாறை காப்புக்காட்டில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து வனவிலங்குகள் வேட்டையாடப் படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மின்வேலி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என்பவர் அப்பகுதியில் பதுங்கி இருந்தார். வனத்துறையினரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது ஈஸ்வரனுக்கும், வனத்துறையினருக்கும் இடையே நடந்த தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில ஈஸ்வரன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் ரேஞ்சர் முரளிதரன், லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் ஈஸ்வரன் உயிரிழந்தது தெரியவரவே அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் கேட்காமல் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஈஸ்வரன் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தேனி எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் ராமநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு குற்றவாளி மீது எண்கவுண்டர் நடத்துவது போல வனத்துறைக்கு துப்பாக்கியால் சுட அதிகாரம் கொடுத்தது யார்? எனவே இப்பிரச்சினையில் போலீசாரும் எங்களை சமாதானம் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். அவர்கள் விசாரணை நடத்தினால்தான் இதில் உண்மை வெளிவரும். அதுவரை பிரேத பரிசோதனை நடத்துவதற்கும் நாங்கள் அனுமதி அளிக்காமல் கையெழுத்திட மறுத்துவிட்டோம் என்றனர்.
இறந்த ஈஸ்வரன் மீது ஏற்கனவே அவர் அமைத்த மின்வேலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உள்பட 2 வழக்குகள் உள்ளன. இவர் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததால்தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு 2ம் நாளாக ஈஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
- கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது.
- இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது.
கூடலூர்:
தமிழகம்-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்தது.
இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.90 அடியாக உள்ளது. 803 க.அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 63.80 அடியாக உள்ளது. 1139 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.70 அடியாக உள்ளது. 55 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.44 அடியாக உள்ளது. 34 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 3.2, தேக்கடி 1, போடி 1.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 1.6, ஆண்டிபட்டி 8 மி.மீ. மழையளவு பதிவானது.
- சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
- மறுநாள் காலையில பார்த்த போது பைக்கை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.
சின்னமனூர்:
வீரபாண்டி வெங்கடாசல புரத்தை சேர்ந்தவர் மார்க்கண்டேயன் (வயது 39). சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில பார்த்த போது பைக்கை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் வீரமணி (31). செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக் மாயமானார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் ராஜா ரைஸ்மில் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் கார்த்திக் (வயது20). இவர் தேனியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்காததால் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை கார்த்திக் தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கார்த்திக் தன்னுடன் படித்த போடியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் காதலை ஏற்கவில்லை. இதனால் மாணவியை தேடி சென்றபோது அவர் காதலிக்க மறுத்ததால் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது.
- பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது.
மேலும் கோவிலில் அமைந்துள்ள சூரியன், சந்திரன், சிவன், அம்பாள், ஞானாம்பிகை, தட்சிணாமூர்த்தி, அணுக்க விநாயகர், கண்ணப்ப நாயனார், கன்னி மூல கணபதிவிநாயகர், துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதி, நாகதோஷ பரிகார விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், கார்த்திகை முருகன், தண்டாயுதபாணி ,நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் ,ராகு கேது, சனி, சன்னதி நவகிரகங்கள், பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டது.
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
- ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுவிக் மேற்பார்வையில் 9 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முடிவடைந்தது.
- 999 வருடங்களுக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.
முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதார பிரச்சினையாக உள்ளது. இந்த அணை கேரள மாநில எல்லைக்குள் இருந்தாலும், அணை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. கடந்த ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1886ம் ஆண்டு பெரியாறு அணையின் குறுக்கே 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அணை கட்டப்பட்டது.
ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுவிக் மேற்பார்வையில் 9 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்பதற்காக 1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் முன்னிலையில் திவான் ராமையங்கார், சென்னை மாகாணத்தின் சார்பில் கொச்சி-திருவிதாங்கூர் பொறுப்பில் இருந்த ஜான் சைல்டு ஹானிங்டன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
999 வருடங்களுக்கு இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அதுவரை அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். கேரளாவிற்கு குத்தகை பணமாக ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் 1970ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போது குத்தகை பணம் ரூ.30 என்று நிர்ணயிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை நீரை பயன்படுத்தி தமிழ்நாடு தயாரிக்கும் மின்சாரத்திற்காக 1 கி.வாட்டுக்கு ரூ.12 கேரளாவிற்கு கொடுக்க வேண்டும். 30 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.
முல்லை பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி இன்றுடன் 137 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
- அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டிபட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் தலைமை வகித்து விழிப்புணர்வு உரையாற்றினார். ஆண்டிபட்டி ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பு, பொருளாளர் அர்ஜுனன், துணைத் தலைவர் கர்ணா பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிட்டாய் தயாரிப்பு உரிமையாளர்கள் சங்க தலைவர் அக்கினி குமார், செயலாளர் சரவணன், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் பேசும்போது, ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.
குறிப்பாக உணவு கூடங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறிப்பிட்ட அளவு பயன்படுத்திய பின் அதை அரசு வழங்கியுள்ள டின்களில் ஊற்றி சேகரம் செய்து வைத்து , மாதா மாதம் அரசு மூலமாகவே அதனை பயோ டீசல் தயாரிப்புக்காக மறு சுழற்சி அடிப்படையில் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.
கடைக்காரர்கள் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி நகர் பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மிட்டாய் சங்க உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- விவசாய கூலித் தொழிலாளியான ஈஸ்வரன் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார்.
- உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் வனக்காப்பகம், கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காப்புக்காடு பகுதிகள் உள்ளன. இங்குள்ள வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே வண்ணாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் வனவர் திருமுருகன் தலைமையில் வனத்துறையினர் இன்று காலை ரோந்து சென்றனர்.
அப்போது சிலர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் வனத்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் பாதுகாப்புக்காக வனத்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? என விசாரணை நடத்தப்பட்டது. இதில் இறந்தநபர் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என தெரிய வந்தது. அவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
விவசாய கூலித் தொழிலாளியான அவர் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். அத்துமீறி காப்புக்காட்டுக்குள் நுழைந்ததால் வேட்டைக்கு வந்தாரா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் லோயர் கேம்ப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஈஸ்வரனின் உடல் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தொழிலாளி ஈஸ்வரன் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தார். மேலும் வனத்துறையினரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றார். இதனால் வனத்துறையினர் தங்களின் பாதுகாப்புக்காக அவரை சுட்டுக் கொன்றனர். அவருடன் வந்த சிலரையும் தேடி வருகின்றோம். காப்புக்காட்டுக்குள் பொதுமக்கள் வர அனுமதி இல்லை. வேட்டையாடும் கும்பல் அதிகளவில் வருவதால் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே இது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.
வனப்பகுதியில் நுழைந்த தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது






