தேனி மாவட்டத்தில் பரவலாக மழை : முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 700 கனஅடியில் இருந்து அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.
முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)
முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மழை சற்று ஓய்ந்திருந்தநிலையில் நேற்று மீண்டும் பெய்ய தொடங்கி யது.

இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1101 கனஅடியாக உயர்ந்தது. நேற்று வரை அணையிலி ருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்பட்டது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது. வைகை அணையின்நீர்ம ட்டம் 64.60 அடியாக உள்ளது. 769 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்து ப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 106 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

பெரியாறு 7, தேக்கடி 9.2, கூடலூர் 16.2, உத்தம பாளையம் 16.6, சண்முகாநதி அணை 18.4, போடி 11.8, வைகைஅணை 3.8, மஞ்சளாறு 2, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 1, வீரபாண்டி 5, ஆண்டிபட்டி 3.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com