search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யார் யாருடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க. தனித்தன்மையுடன் இருக்கும்- கடம்பூர் ராஜூ
    X

    யார் யாருடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க. தனித்தன்மையுடன் இருக்கும்- கடம்பூர் ராஜூ

    • கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ். கூட்டம் நடத்தி அவர்களை ஏமாற்றி கொள்கிறார்கள்.
    • ஒரு மாய தோற்றத்தினை உருவாக்குவதினால் பயன் எதுவும் இல்லை.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., இன்று தேசிய கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    யார் யாருடன் (டி.டி.வி.-பா.ஜ.க) இணைந்தாலும் அ.தி.மு.க. தனித்தன்மையுடன் இருக்கும். எங்களுடைய நிலைப்பாட்டில் எங்கள் பயணம் சீராக செல்லும்.

    அ.தி.மு.க. தலைமை ஏற்று டி.டிவி.தினகரன் கட்சி கூட்டணி வர விரும்பினால் அதை தலைமை தான் முடிவு செய்யும். தற்பொழுது எவ்வித தேர்தலும் இல்லை.

    இதனால் கூட்டணி பற்றி பேச வேண்டிய, சிந்தக்க வேண்டிய அவசியம் எழவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஊர் தோறும் கிராம சபை கூட்டம் நடத்தினர். ஆனால் தற்பொழுது அப்படி எதுவும் செய்யவில்லை.

    முதல்-அமைச்சர் கூட கிராம சபை கூட்டத்திற்கு செல்வதில்லை. தாழ்த்தப்பட்ட, பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுவது ஜனநாயகத்திற்கு அவமதிப்பு. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவ்வாறு செய்பவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ். கூட்டம் நடத்தி அவர்களை ஏமாற்றி கொள்கிறார்கள். ஒரு மாய தோற்றத்தினை உருவாக்குவதினால் பயன் எதுவும் இல்லை. அ.தி.மு.க. என்று ஓ.பி.எஸ் கூறுவதால் அவருக்கு தான் காலம் வீணாகி வருகிறது.

    அ.தி.மு.க. என்ற பெயரை பயன்படுத்தினால் ஓ.பி.எஸ்.-க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

    சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. அதனை காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதனை எதிர்கட்சியாக நாங்கள் சுட்டிகாட்டுவோம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் அனிதா என்ற மாணவி இறப்பினை வைத்து தி.மு.க. அரசியல் செய்தது. அனிதா இறப்பு என்பது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். ஆனால் இன்றைக்கு 11 மாணவர்கள் இறந்துள்ளார்கள்.

    அவர்களை போன்று இறப்பினை வைத்து நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். மக்கள் பிரச்சினைகளை தினந்தோறும் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×