என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கீழ்வேளூர் அருகே டிரைவரை அரிவாளை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது40).டிரைவர். இவர் சம்பவத்தன்று ஓர்குடி வெட்டாற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு ஆற்று பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் இங்கர்சால் (வயது 26), ஸ்டாலினை வழிமறுத்து கையில் வைத்திருந்த அரிவாளை அவரது கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு இங்கர்சாலை கைது செய்தனர். இவர் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நாகையில் கெட்டுப்போகாமல் இருக்க மீன்களில் பார்மலின் கலக்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் (நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்) என்ற ரசாயனம் கலந்து பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மீன்வளத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், மீன்பிடிசட்ட அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று நாகை பாரதிமார்க்கெட் அருகே உள்ள மீன்விற்பனை செய்யும் இடம், அக்கரைபேட்டை மீன்பிடி இறங்குதளம், புத்தூர் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படும் மீன்களில் பார்மலின் கலக்கப்படுகிறதா? என அதிரடியாக ஆய்வு செய்தனர். இதில் மீன்களில் பார்மலின் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் நாகை அண்ணாசிலை அருகே ஒரு பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    பின்னர் கடையில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைசெய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    வேதாரண்யம் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் செட்டிப்புலம் கிராமம் சிறையின் காடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகன் உதயவன் (வயது 26).

    அவர் அங்குள்ள கடைவீதியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வந்தார். அடிக்கடி வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இதனால் எலி பேஸ்ட் சாப்பிடுள்ளார். அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உதயவன் இறந்துவிட்டார்.

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    வேதாரண்யம் அருகே தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் இதுபோல் பொருட்களை பறித்து செல்வதால் தமிழக மீனவர்கள் அச்சமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீனவர் காலனியை சேர்ந்த அருட்செல்வன் என்பவருக்கு சொந்தமான படகில் ராமச்சந்திரன் (வயது 40), நல்லதம்பி (35), மரியதாஸ் (25), அருள்ராஜ் (24) ஆகிய 4 மீனவர்களும் மணியன்தீவு கடற்கரைக்கு கிழக்கே சுமார் 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் 5 படகில் இலங்கை நாட்டை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 10 பேர் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளை சூழ்ந்து கொண்டனர். பின்னர் கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 மீனவர்களையும் மிரட்டி படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவி வாக்கிடாக்கி, 3 செல்போன், டார்ச்லைட், 4 சிக்னல்லைட், 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ தடிச்சவலை, சீலா மீன் பிடிக்கும் வலை ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இன்று காலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இது குறித்து கடலோர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதியில் மீனவர்களை தாக்கி வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தற்போதும் அதேப்போல் சம்பவம் நடந்துள்ளது.

    தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் இதுபோல் பொருட்களை பறித்து செல்வதால் தமிழக மீனவர்கள் அச்சமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

    உடனடியாக இலங்கை கடற்கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேதாரண்யம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் பாலமுருகன் (வயது 27) திருமணமாகாதவர். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்தாராம்.

    இந்நிலையில் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பயிர்களுக்கு அளிக்கப்படும் வி‌ஷ மருந்தை எடுத்து குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்து பின்பு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.
    திருமருகல் அருகே புத்தாற்றில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புத்தாற்றில் பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளால் அந்த வழியாக செல்லும் கங்களாஞ்சேரி, காரையூர், விற்குடி, வாழ்குடி, திருப்பயத்தங்குடி, கீழத் தஞ்சாவூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருமருகல் வர வேண்டிய நிலை உள்ளது. தற்போது பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புத்தாற்றில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கியாஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விமலா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாலா, ஒன்றிய பொருளாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கமிட்டி உறுப்பினர் அமிர்தம் கலந்து கொண்டு பேசினார்.

    100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை கைவிடவேண்டும். 100 நாள் வேலையை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விரிவுப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் விரைவில் செலுத்தவேண்டும். கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.7,500 வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

    இதேபோல திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கியாஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கஸ்தூரி தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாதர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, ராஜேஸ்வரி, வளர்மதி, அமுதா, புஷ்பலதா உள்பட மாதர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாதர் சங்க நிர்வாகி அம்பிகா நன்றி கூறினார்.

    100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், 100 நாள் வேலையை பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வெண்சங்கு தலைமை தாங்கினார். இதில் சங்க மாவட்ட தலைவர் சுபாதேவி, ஒன்றிய தலைவர் வசந்தா, ஒன்றியக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டன.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலய ஆண்டு பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. கொரோனா பரவலை தடுக்க இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    மேலும் கலெக்டர் உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டன. இந்த நிலையில் ஆண்டு பெருவிழா முடிவடைந்ததையொட்டி 17 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்ய நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.

    இதனால் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலம் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டதால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    குத்தாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பேரூராட்சி ஒப்பந்த பெண் பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி நகையில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அவுரி திடலில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி தூய்மை பணி பரப்புரையாளர் எழிலரசி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்த தூய்மை பணி பரப்புரையாளர் நதியாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    பணி நீக்கம் செய்த அலுவலரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் துப்புரவு பணி பரப்புரையாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
    கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    சிக்கல்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் ் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராதாகிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கீழ்வேளூர்- கச்சனம் சாலையில் உள்ள தேவூர் கடைத்தெரு, ராதாமங்கலம் மெயின் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் சாராயம் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் சாராயத்தை காரைக்கால், வாஞ்சூர் பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் அருகே புலியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் மகன் தினகரன் (வயது24), நாகை அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த வேலுசாமி மகன் அன்புராஜ்(29), நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பால்சாமி மகன் மாயபிரகாஷ்(31) என தெரிய வந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 330 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம் அருகே விஷம் குடித்த ஏடிஎம் காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு தெற்கு பகுதியை சேர்ந்தவர் வேதையன் (வயது 50). இவர் தோப்புத்துறை மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நில பிரச்சனை மற்றும் தம்பி மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

    இந்நிலையில் மானங்கொண்டான் ஆற்றுகரைப் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த வேதையனை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே முதியவர் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கடினல்வயல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). விவசாய தொழிலாளி. இவர் கடந்த 5ந்தேதி குடும்ப பிரச்சனையால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் நின்றிருந்தபோது மனோகரனுக்கும், அதே ஊரை சேர்ந்த திரவியம், தமிழ்ச்செல்வம் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த இருவரும் மனோகரனை கம்பியால் தாக்கி உள்ளனர்.

    இதில் பாதிக்கப்பட்ட மனோகரன் கருப்பம்புலம் மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் நேற்று இறந்தார். இதுகுறித்து மனோகரின் சகோதரர் பாலகிருஷ்ணன் (70) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரக காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் மேல் விசாரணை செய்து வருகிறார்.

    ×