search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமருகல் அருகே புத்தாற்றில் பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
    X
    திருமருகல் அருகே புத்தாற்றில் பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

    புத்தாற்றில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    திருமருகல் அருகே புத்தாற்றில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புத்தாற்றில் பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளால் அந்த வழியாக செல்லும் கங்களாஞ்சேரி, காரையூர், விற்குடி, வாழ்குடி, திருப்பயத்தங்குடி, கீழத் தஞ்சாவூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருமருகல் வர வேண்டிய நிலை உள்ளது. தற்போது பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புத்தாற்றில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×