என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளியூரில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் துவங்கிய ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது.

    அந்த வரிசையில், உலகளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை காண நேற்று இரவு முதல் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, தமிழரசி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 1,000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. இதேபோல் தகுதி பெற்ற 900 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் அனும திக்கப்பட்டு 10 க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது.

    தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பநிதியுடன் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசித்தார். களத்தில் நின்று விளையாடிய காளைகளையும், சீறிப்பாய்ந்த காளைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு அடக்கிய காளையர்களின் வீரத்தையும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

    ஒருசில வீரர்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். போட்டி முழுவதிலும் சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக மருத்துவபரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இன்று காலை போட்டி தொடங்கியதும் ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஆக்ரோஷத்து டன் சீறிப்பாய்ந்து வந்த நாட்டின காளைகள் துள்ளிக்குதித்து வீரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான காளைகள் தேங்காய் நார் பரப்பப்பட்ட களத்தில் கால்களை வாரி இறைத்து தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை எடுத்துக் காட்டியது.

    யாருக்கும் பிடிபடாமல் வளர்ப்பாளர்களின் அழைப்புக்கு செவி சாய்த்து அவர்களுடன் வெற்றியுடன் புறப்பட்டு சென்றது மேடையில் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்த அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. களத்தில் இறங்கி விட்டால் போட்டிதான் என்ற உணர்வில் காளையும், காளையர்களும் மல்லுக்கட்டிய காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது.

    பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளைப் பெற்றனர்.

    • ஜல்லிக்கட்டு பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

    உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுவதையொட்டி அந்த பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் பகுதியில் எதிர்வரும் 16.01.2025 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிய கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாலமேடு ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கி மஞ்சம்பட்டி துளசி 2 ஆம் இடம் பிடித்தார்.
    • பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபா என்ற மாடுபிடி வீரர் 11 மாடுகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்தார்.

    பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1,100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர்.

    இதில் வி.கே. சசிகலா காளைக்கு சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை தொடங்கி நடந்துவந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 10 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 930 காளைகள் களம் கண்டன

    நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கி மஞ்சம்பட்டி துளசி 2 ஆம் இடம் பிடித்தார். இதனையடுத்து அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 11 மாடுகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்த பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபா என்ற மாடுபிடி வீரருக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை சத்திரபட்டி விஜயாதங்கபாண்டி என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளைக்கான இரண்டாவது பரிசு சின்னப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பசு, கன்று பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளைக்கான மூன்றாவது பரிசு குருவித்துறையை சேர்ந்த பவித்ரன் என்பவருக்கு விவசாய கருவி பரிசாக வழங்கப்பட்டது.

    • பாலமேடு ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டி பார்வையாளர்கள் அரிட்டாபட்டியை பாதுகாக்க வேண்டும் என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதிமொழி ஏற்று மாடுகளை பிடிக்கச் சென்றனர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.

    மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினர் என ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற பார்வையாளர்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு போட்டி பார்வையாளர்கள் அரிட்டாபட்டியை பாதுகாக்க வேண்டும் என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாடுகள் மீது டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.

    டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் 2025 என கோலமிட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று மாடுகள் மீது எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது.

    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஜல்லிக்கட்டில் உள்ளூர் மாடுகளை பிடித்தாலும் பரிசுகள் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

    தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் முதலாவது ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்றது.

    இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதிமொழி ஏற்று மாடுகளை பிடிக்கச் சென்றனர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.

    அதன்பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினர் என ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மது அருந்தியதாகவும், 3 பேர் எடை குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் குளறுபடி என மாடுபிடி வீரர்கள் புகார் அளித்தனர். வர்ணனையாளரால் பாலமேடு ஜல்லிக்கட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    வர்ணனையாளர் தனது இஷ்டத்திற்கு முடிவுகளை மாற்றி மாற்றி அறிவிக்கிறார். வர்ணனையாளர் தான் மாடு பிடிக்கப்பட்டதா? இல்லையா என்பதை அறிவிக்கிறார்.

    உள்ளூர் மாடுகள் அவிழ்க்கப்படும்போது அவற்றை வர்ணனையாளர் பார்ப்பது இல்லை. ஜல்லிக்கட்டில் உள்ளூர் மாடுகளை பிடித்தாலும் பரிசுகள் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

    முடிவை அறிவிக்கும் வர்ணனையாளரான விழா கமிட்டி செயலாளர் பிரபு மீது மாடுபிடி வீரர்கள் புகார் அளித்தனர்.

    • 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.
    • 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர்.

    பாலமேடு ஜல்லிக்கட்டை இன்று காலை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதி மொழி ஏற்று மாடுகளை பிடிக்கச் சென்றனர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.

    அதன்பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினர் என ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.

    இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மது அருந்தியதாகவும், 3 பேர் எடை குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 

    • ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் களம் இறங்கி மாடுகளை பிடிப்பார்கள்.
    • மொத்தம் 1000 மாடுகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படுகின்றன.

    பொங்கல் பண்டிகையான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 1,100 காளைகள் சீறிப்பாய்ந்தன. 900 வீரர்கள் மாடுகளை பிடிக்க முயன்றனர்.

    இதில் வி.கே. சசிகலா காளைக்கு சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. வீரர்கள் உறுதி மொழி ஏற்று மாடுகளை பிடிக்ச் சென்றர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர்.

    வீரர்கள் அதிகாலை முதல் போட்டி நடைபெறும் இடத்தில் குவிந்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு கட்ட மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகே வீரர்கள் மாடு பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவ பரிசோதனைக்கு வீரர்கள் முண்டியடித்து சென்றதால் தடுப்புகள் கீழே விழுந்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

    மருத்துவம பரிசோதனைக்குப் பிறகு வீரர்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சுற்றிலும் அதிக மாடுகள் பிடிக்கப்பட்ட வீரர் இறுதிச் சுற்றுக்கு அனுமதிக்கப்படுவார். இறுதிச் சுற்று முடிவில் அதிக காளை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்.

    அதேபோல் காளைகளை உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் பாலமேடுக்கு அழைத்து வந்தனர். காளைக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு, அதன்பின் டோக்கன் வழங்கப்படும். டோக்கன் அடிப்படையில் காளைகள் அவிழ்த்துவிடப்படும்.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக வி.கே. சசிகலாவின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது.
    • சசிகலாவின் காளையை வளர்த்து வரும் மலையாண்டிக்கு ரூ.10 லட்சம் மதிப்பு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவில் 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கி 2 ஆம் பிடித்து அரவிந்த் திவாகருக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக வி.கே. சசிகலாவின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து சசிகலாவின் காளையை வளர்த்து வரும் மலையாண்டிக்கு ரூ.10 லட்சம் மதிப்பு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளையாக இரண்டாம் இடம் பிடித்த காளை உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்திக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    • 11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.
    • 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்துள்ளார்.

    குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2 ஆம் இடம் பிடித்துள்ளார். திருப்புவனம் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.

    19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 15 காளைகளை அடக்கி 2 ஆம் பிடித்து அரவிந்த் திவாகருக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

    • இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த நவீன் குமார் மார்பில் மாடு குத்தியது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்ற இளைஞரின் மார்பில் மாடு குத்தியது.

    இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்தார்.

    ஜல்லிக்கட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது.
    • வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார்.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், அவனியாபுரத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்தபடி நடிகர் வேல ராமமூர்த்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்த்து ரசித்தார்.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது. இதனால், கோபமடைந்த வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார். இதையடுத்து, போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

    • இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது.

    தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டைச் சேர்ந்த முத்துக்காளை, ரவிமணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் மற்றும் 2 தங்க காசுகள் பரிசு என அறிவிக்கப்பட்டது.

    பின்னர் அந்த மாட்டை அவனியாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற மாடுபிடி வீரர் பாய்ந்து பிடித்தார். இதனையடுத்து களத்திலேயே ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் 2 தங்க காசுகள் அவருக்கு வழங்கப்பட்டது.

    ×