என் மலர்
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளியை அடுத்து பேளாலம் செல்லும் சாலையில் பெங்களூரை சேர்ந்த அலியுல்லா கான் (வயது 50 )என்பவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் உள்ளது.
இந்த பண்ணையில் 20க்கும் மேற்பட்ட குதிரைகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை, பண்ணைக்குள் புகுந்து 5 வயது குதிரையை கடித்து குதறி கொன்று அதன் உடலை சாப்பிட்டு சென்றுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் குதிரையை கொன்றது சிறுத்தை தான் கொன்றது என உறுதியானது. இதனால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க பண்ணை தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்தனர்.
அப்போது மீண்டும் அந்த சிறுத்தை பண்ணையில் புகுந்து இறந்து கிடந்த குதிரையின் உடலில் சாப்பிடும் காட்சிகள் பதிவானது. இதனால் குதிரை பண்ணை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிறுத்தை நடமாட்டம் இப்பகுதியில் உள்ள கிராம மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதனால் தளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களான பேளாளம், நெல் மார், ஆச்சு பாலம், சூட சந்திரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியடைந்து இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் மாலை நேரத்திலே வீடு திரும்பி விடுகின்றனர்.
இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் எனவும், இருசக்கர வாகனங்களில் வருவோர் மாலையிலேயே வீட்டுக்கு வந்து விடுமாறும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கிராமங்களில் சுற்றி வனத்துறையினர் குழு அமைத்து முகாம் அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட்டு விடுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
சூறைக்காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் கூடிய மழையால், அறுவடைக்கு தயாராக மாங்காய்கள் உதிர்ந்துள்ளன. குறிப்பாக, கிருஷ்ணகிரி அருகே மோரனஅள்ளி, கொடுகூர், சோக்காடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 டன்னுக்கு அதிகமான மாங்காய்கள் உதிர்ந்தது.
தோட்டத்தில் உதிர்ந்த மாங்காய்கள் கூலி ஆட்கள் மூலம் சேகரித்து, மண்டிகளுக்கு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். உதிர்ந்த மாங்காய்கள் கிலோ ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுவதால், போக்குவரத்து கூலி கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கொடுகூர் பகுதி மா விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் ஆறு மற்றும் கிணறு பாசனம் மூலம் மா விளைச்சல் ஒரளவிற்கு இருந்தது.
இந்நிலையில், ஆலங்கட்டி, சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு டன் கணக்கில் மாங்காய்கள் உதிர்ந்தன.
நாங்கள் அறுவடை செய்து மண்டிகளுக்கு கொண்டு செல்லப்படும் பெங்களூரா ரக மாங்காய்கள் டன் ரூ.14 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்கின்றனர்.
மழைக்கு உதிர்ந்த மாங்காய்கள் டன் ரூ.5 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் பராமரிப்பு, மருந்து, கூலி மற்றும் போக்குவரத்து செலவுகள் கூட கிடைப்பதில்லை. வருவாய் கிடைக்காவிட்டாலும், செலவு தொகையாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கை இழந்துவிட்டோம்.
எனவே, தமிழக அரசு நெல், கரும்புக்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது போல், கிருஷ்ணகிரியில் மாங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தளி பகுதியை சேர்ந்தவர் அல்லி உல்லாகான். இவர் பண்ணையில் 20 குதிரைகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியே வந்தது. அந்த சிறுத்தை அல்லி உல்லாகான் வளர்த்து வந்த குதிரையை கடித்து குதறியது. இதனால் அந்த குதிரை அலறியது.
உடனே அருகில் இருந்த குதிரையின் உரிமையாளர் வந்து பார்த்தபோது குதிரையை சிறுத்தை கடித்து குதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறுத்தை கடித்ததில் குதிரை சிறிது நேரத்தில் இறந்தது.
இதுகுறித்து ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறை அலுவலர் சுகுமார், வனகாப்பாளர் கோபிநாத் ஆகியோர் விரைந்து வந்தனர். அப்போது சிறுத்தை கடித்து பலியான பெண் குதிரையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிறுத்தை கடித்து குதறியதில் பலியான குதிரைக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






