என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வீட்டுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பனப்பபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆஞ்சியர் கோவில் பகுதியில் சகாதேவன் என்பவர் வீட்டில் இரவு வழக்கம்போல குடும்பத்தினர் இருந்துள்ள னர்.
அப்போது வீட்டுக்குள் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டு வந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அலறிஅடத்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அவரை அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது 10 அடி நீள மலைப்பாம்பு வீட்டுக்கு வந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நெடுநேரம் போராடிய அப்பகுதி பொதுமக்கள் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து பையில் போட்டு கொங்கனப்பள்ளி காப்புகாட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
வீட்டுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






