என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்ரா
    X
    சித்ரா

    தேன்கனிக்கோட்டை அருகே இன்று சோகம்: மோட்டார் சைக்கிள் மீது டவுன் பஸ் மோதல்: மனைவி பலி- கணவர் படுகாயம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி மனைவி பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாலிவாரம் செல்லும் சாலையில் உள்ள மேல் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அடுத்த கிராமமான மணியம்பாடியில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார் .

    இந்நிலையில் இன்று காலை ஓட்டல் திறப்பதற்காக சிவகுமார் மற்றும் மனைவி சித்ரா இருவரும்  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது மணியம்பாடி கிராமத்தின் அருகே செல்லும்பொழுது டவுன் பஸ் தேன்கனிக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.
     அப்போது வளைவில் திரும்பும் பொழுது பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கணவன்- மனைவி இருவரும் கீழே விழுந்தனர் . இதில் சித்ராவின் தலையின் மீது பஸ்சின் பின் சக்கரம்ஏறியது இதில் சித்ராவின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவக்குமார் படுகாயமடைந்தார்.

    இந்த விபத்து பற்றி தகவலறிந்த தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில்  படுகாயம டைந்த சிவகுமார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  பஸ் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கணவன் கண்முன்னே தலையின் மீது பஸ் சக்கரம் ஏறி மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×